Tuesday, August 20, 2013
மெட்ராஸ் கபே" படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றும், தணிக்கைக்குழுவை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் கூறினார். நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்துள்ள "மெட்ராஸ் கபே" படத்தை சூஜித் சிர்கார் இயக்கி உள்ளார். வரும் 23ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரில் 1980களின் பிற்பகுதியையும், 1990களின் தொடக்கத்தையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட தொகுப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது.
ஒரு உணவு விடுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதால் இந்தப்படத்துக்கு மெட்ராஸ் கபே என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் "கபே" எங்கே அமைந்துள்ளது என்பது படத்தில் காட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை வலுக்கட்டாயமாக திரும்பப்பெறப்பட்ட பிறகு, "ரா" உளவு அமைப்பின் சார்பில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரி பாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இலங்கைக்கு போர் செய்திகளை சேகரிக்க சென்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் வேடத்தில் நடிகை நர்கீஸ் பக்ரி நடித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழர் அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இந்த எதிர்ப்பு குறித்து நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில், "மெட்ராஸ் கபே" பட விவகாரத்தில், ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கிறேன். வைகோ, சீமான் ஆகியோரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர்களும் எங்கள் கருத்தை மதிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
இது ஜனநாயக நாடு. இந்தப் படத்தில் அடங்கியுள்ள கதைக்களத்துக்கு தணிக்கைக்குழு ஆட்சேபம்
தெரிவிக்காமல், "யுஏ" சான்றிதழ் வழங்கி இருக்கிறது என்கிற பட்சத்தில், இந்தப் படத்தில் எதுவும் தவறாக இல்லை என்றே கருதுகிறேன். அவர்கள் போய் தங்கள் ஆட்சேபத்தை எழுப்பட்டும். அதை வரவேற்கிறேன். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் இந்தப் படத்தை நிச்சயம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்போம்" என்றார்.
Search
Popular Posts
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
August
(29)
- மெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...
- வெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்
- GSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி
- தேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...
- யாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...
- 14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...
- யாழில் மோட்டார் பந்தய போட்டி.
- நியூசிலாந்து செல்லுமா இந்தியா..?
- இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்
- இலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.
- நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்
- தலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்
- கயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க
- பகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..!
- வெற்றி யாருக்கு? - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...
- நிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...
- டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி
- முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...
- யாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா
- #CPL போட்டிகளில் மஹேல
- செல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்
- பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி
- யாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா
- தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது
- இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.
- ஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி
- தவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...
- 2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.
-
▼
August
(29)
Advertising
Social Icons
Featured Posts
*
0 comments:
Post a Comment