• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Thursday, January 9, 2014


சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே நாம் ஆச்சர்யப் படுவதுண்டு.

ஆனால் 112 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின்விளக்கை உருவாக்கியவர் அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்.

அடோல்ப் சைலெட் 2.5 வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த விளக்கை கண்டுபிடித்தார். இந்த விளக்கைப் போல மற்றொரு விளக்கை இனிமேல் யாரும் உருவாகவே கூடாது என்று நினைத்த அவர் அதன் தயாரிப்பு குறிப்புகளை எரித்துவிட்டார்.

மேலும் அவர் தனது குறிப்பில் இதைப் போன்ற வேறொரு விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்கமுடியாது என்று எழுதி வைத்துள்ளார்.

இந்த விளக்கைப் போல இன்னொரு விளக்கை உருவாகும் முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

அடோல்ப் சைலேடால் 1901 ஆம் ஆண்டு எரிய வைக்கப்பட்ட இந்த மின்விளக்கு கடந்த 112 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது.

Posted by V4Tamil .com on 2:37 AM in    No comments »



போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கொழும்பு - கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால், காலி வீதியின் இரண்டு வழித் தடங்களும் மூடப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

Posted by V4Tamil .com on 1:46 AM in    No comments »


மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இன்று பகல் 11.30 மணியளவில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ்  நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற ஆணையாளர் அ.பிறேம்சங்கர், மல்லாகம் நீதிமன்ற நீதிபதிகளான சி.சதீஷ்கரன், மேலதிக நீதிபதி மொகமட் போன்றோர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மேளவாத்தியம்இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி,  மல்லாகம் மகா வித்தியாலயம்,  உடுவிஜல் மகளிர் கல்லாரி  மாணவ மாணவிகளின் மேலைத்தேய பேன்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.


அத்தோடு தேசியக்கொடி ஏற்றல், நினைவுப் பலகை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றன. தொடர்ந்து நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரர் திறந்து வைக்கும் நிகழ்வு

இடம்பெற்றது.





Posted by V4Tamil .com on 1:27 AM in    No comments »


கடந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த  Jessica Bennett என்ற பெண் தனது 19மாத Jonah என்ற கைக்குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். விமான பயணம் செய்துகொண்டிருந்தபோது குழந்தை Jonah  திடீரென அழுக ஆரம்பித்தது. இதனால் அருகில் தூங்கிக்கொண்டிருந்த Joe Rickey Hundley என்பவர் குழந்தை அழுகை சத்தத்தால் எரிச்சல் அடைந்து ஆத்திரத்தில் குழந்தையை அடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த Jessica Bennett விமான ஊழியர்களிடம் புகார் கூறினார்.

விமானம் தரையிறங்கியவுடன் Jessica Bennett, காவல்நிலையத்தில்  Joe Rickey Hundley மீது புகார் அளித்தார். அவருடைய புகாரின்பேரில் Joe Rickey Hundleyமீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. Joe Rickey Hundley தனது தவறை ஒப்புக்கொண்டு தான் செய்த செயலுக்காக வருந்துவதாக நீதிபதியிடம் கூறினார்.

இருப்பினும் அவருக்கு நீதிபதி 8 மாத சிறைதண்டனை கொடுத்து நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த சம்பவத்தின்போது தனது குழந்தை மிகவும் பயந்துவிட்டதாகவும், இதுபோன்ற பொறுப்பற்றவர்களுக்கு இந்த தண்டனை அவசியம்தான் என்றும் தீர்ப்பு வெளியானவுடன் குழந்தையின் தாயார் Jessica Bennett செய்தியாளர்களிடம் கூறினார். தண்டனை பெற்ற Joe Rickey Hundley என்பவர் Unitech Composites and Structures, என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 1:19 AM in    No comments »

தனது 90 வயது தாயாரின் ஓய்­வூ­தியப் பணத்தைப் பெறு­வ­தற்­காக 54 வயது மக­னொ­ருவர், இறந்த தாயின் சட­லத்தை குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.
ஹம்­ஷி­யரில் போர்ட்ஸ்­மவுத் நகரில் வசிக்கும் பிலிப் பரோ என்ற நபரே, இயற்கை மர­ண­ம­டைந்த தனது தாயா­ரான லூஸி பரோவின் உடலை சட்­டப்­பி­ர­காரம் நல்­ல­டக்கம் செய்­யாது குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்­துள்ளார்.

ஆரம்­பத்தில் பிலிப் தனது தாயாரை படு­கொலை செய்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­பட்­டது. எனினும், லூஸியின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கைகள் அவர் இயற்கை மரணம் எய்­தி­யதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.
இந்­நி­லையில் தனது தாயார் இறந்து விட்­டதை மறைத்து அவ­ரது ஓய்­வூ­திய அனு­கூ­லங்­களைப் பெற்­றமை மற்றும் தனது தாயாரின் சட­லத்தை உரிய முறையில் நல்­ல­டக்கம் செய்யத் தவ­றி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுகள் பிலிப் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.
பிரித்­தா­னிய சட்டப் பிர­காரம் பிலிப் தனது குற்றங்களுக்காக கால வரையறையற்ற சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடு மென தெரிவிக்கப்படுகிறது.
Posted by V4Tamil .com on 1:01 AM in    No comments »
Posted by V4Tamil .com on 12:51 AM in    No comments »
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.


நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. விஜய் தனிகட்சி துவங்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதை உறுதிபடுத்தவில்லை.விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

ஆம் ஆத்மி கட்சியில் தேர்வது குறித்து நடிகர் விஜய்யோ வேறு எந்த திரையுலக நட்சத்திரங்களோ எங்களை அணுகவில்லை. விஜய் எங்கள் கட்சியில் தாராளமாக சேரலாம். வேறு நடிகர்களும் வரலாம். அவர்கள் கட்சியில் சேர எந்த தடையும் இல்லை.
கட்சியில் விஜய் சேர்ந்தாலும் அவர் சாதாரண உறுப்பினராகவே இருக்க முடியும். ஆம் ஆத்மி கட்சியில் பதவிக்கு வர அவர் விரும்பினால் அவரது நேர்மை மற்றும் ஊழலற்ற நடவடிக்கைகள் குறித்து விசாரித்து அதன்பின்னரே பொறுப்பு வழங்கப்படும். நன்னடத்தை உள்ளவர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்கள்; ஊழல் செய்யாதவர்கள் போன்றோருக்கு மட்டுமே கட்சியில் பதவி வழங்கப்படும். இதை விசாரிப்பதற்கு கட்சியில் தனியாக குழு ஒன்று செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Posted by V4Tamil .com on 12:09 AM  No comments »

சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, துர்கை என எண்ணற்ற பெண் தெய்வங்களை வழிபடும் குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில்  வன்முறைக்கு ஆளாகின்றனர். திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, தனி அறையில் அடைத்து வைப்பது,  நடத்தையை மோசமாகச் சித்தரிப்பது, கொலை செய்வது என்று பல்வேறு விதங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நிகழ்த்தப்படுகின்றன. குற்றங்களைச் சந்திக்காத குழந்தையோ, பெண்களோ மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பது வேதனையும் அதிர்ச்சியும்  அளிக்கக்கூடிய விஷயம்.


குழந்தைகளைப் பொறுத்த வரை அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, உறவினர்கள் மற்றும் ஆசிரியர்களால் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இப்படி  வன்முறையால் பாதிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் மனதளவில் மிகவும் காயப்பட்டுப் போகிறார்கள். பிடிவாதம், முரட்டுத்தனம்  வந்துவிடுகிறது. சில குழந்தைகள் மனப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.  15-45 வயதுக்குட்பட்ட பெண்களில் 68 சதவிகிதம் பேர் குடும்ப  வன்முறைக்கு இலக்காவதாக சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது. வீட்டில் உள்ள அம்மா, அப்பா, கணவன், உறவினர்கள் மூலம் இந்த வன்முறை  அரங்கேற்றப்படுகிறது. 

சமையல் சரியில்லை, சொல் பேச்சுக் கேட்பதில்லை, எதிர்த்துப் பேசுதல், வரதட்சணை, சந்தேகம் போன்ற காரணங்களால் திருமணம் ஆன பெண்கள்  கணவன் மூலம் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். அடித்தல், முடியைப் பிடித்து இழுத்தல், பல்லை உடைத்தல், சூடு வைத்தல், கை, கால்களை  முறித்தல் போன்ற உடல்ரீதியான பயங்கரங்களுக்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் மனதளவில்  மிகவும் பலவீனமடைந்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள். 7.5 சதவிகித பெண்கள் தற்கொலை முடிவை  எடுப்பதற்குக் காரணம் குடும்ப வன்முறைதான்.

காயங்களுக்கு அடுத்த மிகப்பெரிய வன்முறை பாலியல் தொடர்பானது. இல்லறம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து, மனம் விரும்பி ஈடுபடுவது  என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. விருப்பமோ, விருப்பமின்மையோ அது தங்களின் உரிமை என்றே நினைக்கிறார்கள். இதனால் மனைவிக்கு  ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிட்டாலும் வற்புறுத்தி, திட்டி, அடித்து, உறவில் ஈடுபடுகிறார்கள். மனமும் உடலும் காயப்பட்ட பெண்கள் மேலும்  விரக்தியடைகிறார்கள். இந்தியாவில் மட்டும் அதிக அளவில் பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவது ஏன்?     

ஒரு பெண்ணை அடிப்பதோ, அரவணைப்பதோ இங்கு ஆணின் உரிமையாக காலம் காலமாக நினைக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு முன்பு அப்பா  அடிக்கலாம்... திருமணத்துக்குப் பின்பு கணவன் அடிக்கலாம். இந்த எண்ணம் ஆண்களுக்கு மட்டுமல்ல... அடி வாங்கும் பெண்களுக்கும் இருப்பதுதான்  மிகப்பெரிய பிரச்னை. படித்த பெண்கள் கூட, கோபம் வரும்போதோ... இல்லை தாங்கள் தவறு செய்யும்போதோ கணவன் அடிப்பது குற்றமில்லை  என்றே கருதுகிறார்கள். இதனாலும், ஆண்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்பதே தெரியாமல் போய் விடுகிறது. கணவனை எதிர்த்து சண்டையிடும்  சில பெண்கள் கூட, புகார் அளிக்க முன்வராதது இன்னொரு ஆபத்தாக பெண்களுக்கும், இன்னொரு பாதுகாப்பாக ஆண்களுக்கும் அமைந்துவிடுகிறது. 

இதனால் குடும்ப வன்முறையில் இறங்குபவர்கள் குற்றவாளியாக சட்டத்துக்கு முன் வருவதில்லை. அப்படியே சிலர் சட்டத்தின் உதவியை  நாடும்போது, நடவடிக்கைகள் எளிதில் எடுக்கப்படுவதில்லை. கணவனுக்காக இன்ப துன்பங்களில் பங்கேற்கலாம்... விட்டுக் கொடுக்கலாம். அதே  வேளையில், பெண் தன்னை எந்த விதத்திலும் தாழ்த்திக்கொள்ளவோ, இரண்டாம்தர பிரஜையாகவோ கருத வேண்டியதில்லை. கணவனை மனைவி  மதிப்பது போல, மனைவியையும் கணவன் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆளும் மனப்பான்மை இருக்கும் ஆண்களிடம்தான் பெண்களை  அடிமைப்படுத்தும் மனப்பான்மை தோன்றும். முதலில் பெண்களாகிய நாம், நம்மை ஆணுக்கு இணையான மனுஷியாக நினைப்போம். நம்  ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்போம். 
Posted by V4Tamil .com on 12:03 AM  No comments »

Wednesday, January 8, 2014


கடந்த 1 வாரமாக தேடப்பட்டு வந்த மராத்திய நடிகை அல்கோ புனேகர் இன்று சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் சிறிய வேடங்களில் நடித்து வருபவர் அல்கா புனேகர்(49). தானே பகுதியில் கணவருடன் வசித்து இவர் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி காணாமல் போனார்.

இது குறித்து அவரது கணவர் சஞ்சய் புனேகர் கோபுரி பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அல்கா நவி மும்பைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 27 ம் திகதி புறப்பட்டு சென்றதாகவும், அங்கிருந்து புனே செல்ல திட்டமிட்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், அல்கா பயணம் செய்த கார் ராய்காட் மாவட்டத்தில் காபோலி பகுதியில் 700 அடி ஆழமான பள்ளத்தாக்கில் உருக்குலைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உருக்குலைந்த காரில் சோதனையிட்டபோது, அல்காவின் கைப்பேசி சிக்கியது.அதில் அவருடன் அலோக் பலிவால் மற்றும் சஞ்சய்குமார் சோன்கர் ஆகியோர் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது.

சஞ்சய்குமார் சோன்கர் அல்காவின் முன்னாள் நண்பர் ஆவார். அவருக்கு பின்பு அலோக் பலிவாவால் என்பவருடன் அல்காவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 24 வயது எம்.பி.ஏ பட்டதாரியான அலோக் பலிவால் மும்பையில் பொறியியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் நடிகை அல்கா கடந்த 1 வருடமாக நெருங்கி பழகி வந்தது விசாரணையில் அம்பலமானது.

மேலும், கணவர் கண்டித்த போதும், அவரது எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவரின் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்ட அல்காவும், அவரது காதலனும் இதற்காக முன்னாள் நண்பர் சஞ்சய் குமார் உதவியை நாடியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கார் விபத்து மற்றும் தானேயில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகம் ஆடியுள்ளார்கள்.

இந்நிலையில் தானேயில் அல்காவின் முன்னாள் நண்பர் சஞ்சய்குமார் பொலிசில் சிக்கினார். அவர் மூலமாக நடிகை அல்கா வையும், காதலனையும் காரில் தப்பிக்க வைத்து நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சஞ்சய்குமாரை கைது செய்த பொலிசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் நடிகை அல்கா, காதலன் அலோக் பலிவாலுடன் தலைமறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தானே பொலிசார் ரகசியமாக சென்னை சென்று நடிகை அல்காவையும், அவரது காதலரையும் கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து அவர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திய பொலிசார் ‘நடிகை அல்கா உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதி. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

Posted by V4Tamil .com on 11:30 PM in    No comments »
வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் சபை அமர்வு இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி வீழ்ந்தார்.


அவைத்தலைவர் அவைக்கு வருகை தரும் போதும் வெளியேறும் போதும் அவருக்கு முன்னே செங்கோலுடன் வருகை தரும் படைக்கலச்சேவிதர் சபை நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி வீழ்ந்தார். தொடர்ந்து, வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவப்பிரகாசம் சிவமோகன் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

இவருக்கு பதிலாக பிரதிப்படைக்கலச்சேவிதர் பொறுப்புக்களை ஏற்றதுடன் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. 
Posted by V4Tamil .com on 10:59 PM  No comments »
களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போனவர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டிக்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இறங்கினார் ஓவியா.



ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப்பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் கமர்சியல் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மதயானைககூட்டம் படத்தில் நடித்த அவர் தற்போது புலிவால் என்ற படத்துக்காக மறுபடியும் கவர்ச்சி அரிதாரம் பூசியிருக்கிறார்.

கலகலப்பு படத்தில் நடித்தபோது இருந்ததைவிட, தற்போது தனது உடம்பில் பூசினாற் போன்று சதை போட்டிருக்கும் ஓவியா, புலிவால் படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக கவர்ச்சியான உடைதரித்து கலக்கல் நடனமாடியிருக்கிறார்.

இதேபடத்தில் இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அனன்யாவை தனது கவர்ச்சியால் ஓரங்கட்டியிருப்பவர், இதன்பிறகு அதிரடி கிளாமர் ஹீரோயினாக மாறவும் முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்.அதனால், கமர்சியல் டைரக்டர்களாக தேடிப்பிடித்து படவேட்டையை தொடங்கியிருக்கிறாராம் ஓவியா.
Posted by V4Tamil .com on 10:51 PM  No comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது பாரியளவில செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.

சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக்காட்டுப்பகுதியில் இக்கஞ்சாசேனை செய்கை பண்ணபபட்டிருந்தது.மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் பணிப்புரையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காட்டில் செய்கை பண்ணப்பட்ட மூன்று அடி உயரமான 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு மரத்திலிருந்து 1 கிலோ கஞ்சாவை அறுவடை செய்யமுடியும். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாமரங்கள் இன்று மட்டக்களப்பு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் நேற்று மாலை வரை இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 10:51 PM in    No comments »

விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Posted by V4Tamil .com on 10:37 PM  No comments »
நீண்ட இடைவேளைக்கு பின்னர் சிம்பு மீண்டும் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இந்த படத்தை சிம்புவின் குடும்ப நிறுவனம்தான் தயாரிக்கிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுக ஆகிறார்.



சிம்பு, நயன் தாரா இருவரும் இணைந்து ஏழு வருடங்களுக்கு முன் வல்லவன் என்ற படத்தில்தான் கடைசியாக நடித்தனர். அதன்பின்னர் அவர்களுடைய வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.


பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் நடந்தது. நயன் தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. சிம்புவுக்கு நேற்று காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தயாரிப்பாளர் என்ற முறையில் படப்பிடிப்புக்கு வந்திருந்தாராம். இதனால் நயன் தாராவுக்கு டென்ஷன் எகிறியுள்ளது.


உடனே இயக்குனர் பாண்டிராஜை கூப்பிட்டு படப்பிடிப்புக்கு சம்மந்தம் இல்லாதவர்களை முதலில் வெளியேற்றுங்கள். அப்போதுதான் படப்பிடிப்பு நடக்கும், அல்லது நான் வெளியேற வேண்டியநிலை இருக்கும் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நான் படத்தின் தயாரிப்பாளர் நான் ஏன் வெளியேற வேண்டும் என சிம்புவும் பதிலுக்கு எகிற பிரச்சனை பெரிதாவதை கண்டு டி.ராஜேந்தருக்கு போன் செய்துள்ளார் பாண்டிராஜ். அதன்பின்னர் சிம்பு வெளியேற படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததாம். இந்த சம்பவம் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted by V4Tamil .com on 10:37 PM in    No comments »
தனது 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தனது 50வது பிறந்தநாளை வரும் 17ம் தேதி கொண்டாடுகிறார். ஆனால் அவரின் பிறந்தநாள் பார்ட்டி வரும் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது. பிறந்தநாளையொட்டி ஒபாமா தனது மனைவிக்கு ஒரு பரிசை அளித்துள்ளார்.





ஒபாமா தனது மனைவி மிஷல் மற்றும் மகள்கள் மாலியா(15), ஷாஷா(12) ஆகியோருடன் ஹவாயில் விடுமுறையை கழிக்கச் சென்றார். அவர் மகள்களை அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட்டார். ஆனால் மிஷல் கணவரின் பிறந்தநாள் பரிசாக கூடுதல் நாட்கள் ஹவாயில் இருந்துவிட்டு வரவிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் வரும் 18ம் தேதி நடக்கும் தன்னுடைய 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு மிஷல் சிலருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பில் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.


பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு, சவுகரியமான ஷூக்கள் அணிந்து, நடன அசைவுகளை ஒத்திகை பார்த்துவிட்டு வருமாறு மிஷல் விருந்தாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விருந்தில் சாப்பாடு வழங்கப்படாதாம். இந்த நிபந்தனைகள் பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது.


மிஷல் யார், யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் ஹிப் ஹாப் கலைஞர் ஜே ஜி மற்றும் அவரது மனைவியும், பாப் பாடகியுமான பியான்ஸே நோலஸ் ஆகியோரும் நிச்சயம் விருந்துக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Posted by V4Tamil .com on 10:32 PM  No comments »


தொழிற்­சாலை விபத்­தொன்றில் இரு கரங்­க­ளி­லு­முள்ள மணிக்­கட்­டிற்குக் கீழா­ன­ப­குதி மோச­மான உருச்­சி­தை­வுக்­குள்­ளான இளைஞர் ஒரு­வ­ருக்கு சேத­ம­டைந்த உள்­ளங்கைப் பகு­தி­யையும் விரல்­க­ளையும் பயன்­ப­டுத்தி குற­டு­களைப் போன்ற புதிய கரங்­களை சீன மருத்­து­வர்கள் ஏற்­ப­டுத்தி சாதனை படைத்­துள்­ளனர்.
 
வாங் ஜின் (18 வயது) என்ற மேற்­படி இளைஞர் கடந்த டிசம்பர் 11 ஆம்­ தி­கதி இரவு தொழிற்­சாலையில் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்­த­ வேளை அவ­ரது கரங்கள் இயந்­தி­ரத்தில் சிக்கி உருச்­சிதைந்­தன.
 
இத­னை­ய­டுத்து ஹுனான் மாகா­ணத்தில் சங்ஷா நக­ரி­லுள்ள ஸியாங்யா மருத்­து­வ­ம­னைக்கு அவர் சேத­ம­டைந்த கரப்­ப­குதி சகிதம் கொண்டு செல்­லப்­பட்டார்.

இந்­நி­லையில் அந்த மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­து­வர்கள் துரி­த­மாக செயற்­பட்டு அவ­ரது துண்­டிக்­கப்­பட்ட உள்­ளங்கைப் பகுதி முழு­மை­யாக சேத­ம­டை­யாத விரல்கள் என்­ப­வற்றைப் பயன்படுத்தி குறடுகள் போன்ற கட்டமைப்பைக் கொண்ட புதிய கரங்களை அவருக்கு வழங்­கி­­­யுள்­ள­னர்.
Posted by V4Tamil .com on 10:29 PM  No comments »
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான மேட் பிரையரும், ஸ்டுவர்ட் பிராடும் சிட்னியில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.


அப்போது அங்குள்ள டார்லிங் ஹார்பர் பகுதியின் மேம்பாலத்தில் நின்ற அடையாளம் தெரியாத நபர், தனது செல்போன், பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட்டை ஆற்றில் வீசினார். பின்னர் தானும் பாலத்தின் முனையில் நின்று ஆற்றில் குதிக்க தயாரானார். அப்போது அங்கு வந்த வீரர்கள் இருவரும், லாவகமாக பேசி அவரை பாலத்திற்கு மேலே அழைத்து வந்தனர்.

அதே சமயத்தில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆன போதும் கூட பொறுமையாக அந்த நபரிடம் பேச்சு கொடுத்து காலம் கடத்தி வந்துள்ளனர். காவல்துறையினர் வந்தவுடன் அவரை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர்களின் இந்த உயிர் காக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரையர் இது குறித்து கூறும்போது ‘எங்கள் நிலையில் யாராக இருந்தாலும் அவர்களும் இதுபோன்றே செயல்பட்டிருப்பார்கள்’ என தன்னடக்கமாக கருத்து கூறியுள்ளார்.
Posted by V4Tamil .com on 10:27 PM  No comments »
அமெரிக்க அரசு இலங்கையில் , போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்பு சுமத்துவதிலும், நல்லிணக்கத்தை எட்டுவதிலும் போதிய முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கும் நிலை குறித்து தொடர்ந்து கவலை கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

போர்க்குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப், நேற்று, செவ்வாய்க்கிழமை , இலங்கைக்கு தனது விஜயத்தைத் தொடங்கிய நிலையில், அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்திய சந்திப்பில், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் , இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் , ஒரு சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்று கூறியதாக, அந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.



இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஒருவர், இலங்கையில் பல்வேறு மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் நடப்பதாகக் கூறப்படும் நில அபகரிப்புகள், மத ரீதியான நோக்கமுடைய தாக்குதல்கள் , ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகள் விசாரித்துத் தீர்வு காணப்படாதது, ஆகியவைகள் காரணமாக, ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று தங்களைக் கணிக்க வைத்திருப்பதாக அவர் கூறினார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு சுமத்தும் வழிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் அமெரிக்கா , 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் , ஐநா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் , மீண்டும் ஒரு தீர்மானத்தை எதிர்வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் கொண்டுவரும் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
Posted by V4Tamil .com on 10:15 PM in    No comments »

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிந்து வருவோரால் சவூதியில் உள்ள அவர்களின் அனுசரணையாளர்களுக்கு எதிராக தினமும் மூன்று முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுவருவதாக இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரேபிய நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து தொழில் விவகாரங்களுக்கான இலங்கைத் தூதரக பிரதிநிதி எம்.பி. எம். ஸாருக் தெரிவித்துள்ளதாவது,

தங்களுக்குக் கிடைத்துவரும் முறைப்பாடுகளுள் அநேகமானவை சம்பளக் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, வீட்டுப் பணியாளர்களின் சம்மதமின்றி அவர்களின் சேவை ஒப்பந்தங்களை புதுப்பித்தல் மற்றும் அடி, உதைகள் உள்ளிட்ட சரீர சம்பந்தமான துஷ்பிரயோகங்கள் அடங்குவதாகவும் கடந்த வருடத்தில் இலங்கையைச் சேர்ந்த 50வீட்டுப்பணியாளர்கள் பணியிடங்களிலிருந்து தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் இடம்பெற்றுவரும் பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல் மிகவும் அரிதாகவே வெளி வருவதாகவும் 1000 தொழிலாளர்களிலும் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted by V4Tamil .com on 9:27 PM  No comments »

நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது.

அதனை வார பத்திரிக்கை ஒன்று படமாகவும், செய்தியாகவும் பிரசுரித்தது. இதை எதிர்த்தும், நஷ்டஈடு கேட்டும் உமா கிருஷ்ணன் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வழக்கு ஜனவரி 7ம் திகதி செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போதும், திரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த விசாரணையின் போது உமா கிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கைது வாரண்டு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Posted by V4Tamil .com on 9:08 PM  No comments »

சிங்கப்பூர் இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 2008ம் ஆண்டு 186 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை கடத்தியதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுபாஷ்கரன் பிரகாசம் (29) கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பிரகாசத்திற்கு தூக்கு தண்டனை வழங்கி 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சிங்கப்பூர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இவரது மேல்முறையீட்டில், இந்த போதைப்பொருளை எடுத்து உதவியாக மட்டும் பிரகாசம் செயல்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 15 ரோத்தான் அடியும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பிரகாசம் மரணதண்டனையில் தப்பிய இரண்டாவது நபர் என்று கூறப்படுகிறது.

இதுபோன்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரர் யோங் வை கோங்குகிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 9:00 PM  No comments »

டெல்லியில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை பற்றி தகவல் தர பொது மக்களுக்கான அவசர உதவி தொலைப்பேசி எண்களை அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, அதிகாரிகள் எவரேனும் லஞ்சம் கேட்டால், 011- 2735 7169 என்ற ஹெல்ப்லைனுக்கு தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லலாம். இது, ஹெல்ப்லைன் தானே தவிர, புகார் எண் கிடையாது என்றார்.


இந்த ஹெல்ப்லைனுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னால், பாதிக்கப்பட்ட நபரே புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்க வழிவகுக்கப்படும். அதற்கான வழிகாட்டுதல்களை டெல்லி ஊழல் தடுப்புப் படை வழங்கும். மக்கள் தங்கள் செல்போன் மூலமே லஞ்ச முறைகேடுகளைப் பதிவு செய்யலாம். லஞ்சத்தை ஒழிக்கும் இந்தத் திட்டத்தால், ஒவ்வொரு குடிமகனுமே ஊழலுக்கு எதிரான போராளி ஆவார் என்றார். டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஹெல்ப்லைன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.


Posted by V4Tamil .com on 8:34 PM  No comments »

இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தில் வரும் முதல்வருக்கும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சில ஒற்றுமை உள்ளது. இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக வரும் காட்சிகள் அதிரடியாக இருக்கும். இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஷங்கரின் முதல்வனுக்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளை பார்ப்போம்.


முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்க அர்ஜுன் ஆட்டோவில் வந்து இறங்குவார். கெஜ்ரிவாலோ மெட்ரோ ரயிலில் பதவி ஏற்கும் விழாவுக்கு சென்றார்.பதவி ஏற்ற சிறிது நேரத்தில் அர்ஜுன் ஆயிரக்கணக்கான ஊழல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வார். இதே போல் கெஜ்ரிவால் பதவியேற்ற 10 நாட்களுக்குள் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் 3 பேரை சஸ்பெண்ட் செய்ததோடு 800 பேரை டிரான்ஸ்பர் செய்தார்.



முதல்வன் படத்தில் அர்ஜுன் சேரி பகுதிகளுக்கு திடீர் என்று சென்றதுடன், ரேஷன் கடைக்கு சென்று ஊழல் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்வார். டெல்லி மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா வீடு இல்லாதவர்கள் இரவில் தங்கும் இடங்களுக்கு திடீர் என்று சென்றுள்ளார். முதல்வன் சூப்பர் ஹிட்டானது. கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Posted by V4Tamil .com on 8:15 PM  1 comment »
சமையலுக்காக சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து பாம்பு ஒன்று இருந்த சம்பவம் வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 
வாழைச்சேனை 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ஏ.எம் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன் ஒன்றினை சந்தையில் வாங்கிச் சென்றுள்ளார். அவரது மனைவி சமையலுக்காக மீனை வெட்டியபோது மீனுக்குள் இருந்து ஒன்றரை அடி நீளமான பாம்பு ஒன்று இருந்துள்ளதைக் கண்டுள்ளார்.
 
இச்சம்பவத்தை பார்வையிட வந்த பிரதேச மீனவர்கள் மாரி காலங்களில் செப்பலி,கொய்,கொடுவா போன்ற மீன் இனங்கள் நீர்பாம்புகளை பிடித்துண்ணும் பழக்கம் கொண்டவை எனத் தெரிவித்தனர்.
 
அண்மையில் வாழைச்சேனையிலுள்ள பிரிதொரு வீட்டினுள் சமையலுக்காக அறுக்கப்பட்ட கொய் வகை மீனிலிருந்து புளுக்கள் வெளியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 8:07 PM  No comments »

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன' என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் உள்ளிட்ட குழுவினரிடம் தான் தெரிவித்ததாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.


 'படையினரால் பயன்படுத்தப்பட்ட இந்த மூன்று வகையான குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவே பெரும்பாலான பொதுமக்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர்' என்றும் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிவதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். 

இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த இவர், யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் மன்;னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசனும் கலந்துகொண்டார். இதன்போதே மன்னார் மறைமாவட்ட ஆயரினால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர், 'இறுதிக்கட்ட யுத்தத்தின் போது குண்டுத் தாக்குதல்களால் காயமடைந்த மக்கள் புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கான உரிய மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. அதற்கான அனுமதியினை பாதுகாப்பு தரப்பினர் வழங்கவில்லை' என்றார். 

'செம்மணி புதைகுழியில் 500க்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் நீதிமன்ற அனுமதியுடன் அது தோண்டப்பட்ட போது மூன்று அல்லது நான்கு சடலங்கள் மட்டுமே இருந்தன. ஏனைய சடலங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை' என்று தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார். 

'காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்கான தீர்வினைப் விரைவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஆயர், யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்கான சுதந்திரம் இங்கு காணப்படுவதில்லை' 

அத்துடன், '2008 ஜூன் மாதம் முதல் 2009 மே மாதம் வரையில் வடக்கிலிருந்த பொதுமக்களின் சனத்தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இக்காலப் பகுதியிலிருந்த 146,000 பேர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் இல்லை' என்றும் அந்த குழுவினரிடம் சுட்டிகாட்டியதாக அவர் தெரிவித்தார்.

இராணுவம் மறுப்பு

மன்னார் ஆயரின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய இந்த வகையான குண்டுகளை தாம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றார். 

கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லை. விமானக் குண்டுத்தாக்குதல்களை நடத்தினோம். அதுவும், யுவிஎப்பினால் அங்கீகரிக்கப்பட்ட குண்டுகளையே பயங்கரவாதிகளில் சரியான இலக்குகளின் மீதே தாக்குதல்களை நடத்தினோம்.

இரசாயன குண்டுகளை புலிகளே பயன்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.
Posted by V4Tamil .com on 8:01 PM  No comments »
யாழ். மீசாலை ஆசைப்பிள்ளை ஏற்றத்திற்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 52 ஆவது படைப்பிரிவின் தலைமையாகத்தை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (08) மதியம் திறந்து வைத்தார். 


இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவ தளபதி ஆர்.எம்.தயா ரத்னாயக்க, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட பல இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அதேவேளை தலைமையாக திறப்பு விழாவுக்கு முன்னதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், 

கடந்த 1995 ம் ஆண்டு நாம் விடுதலைப்புலிகளிடம் இருந்து யாழ் குடாநாட்டை மீட்டிருந்தோம். அவ்வேளையில் விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இருந்த காணிகள் வீடுகளையே இராணுவமும் பயன்பாட்டுக்கு எடுத்து கொண்டது. 

தற்போது யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து பொது மக்களின் காணிகள் வீடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவம் கட்டம் கட்டமாக வெளியேறி அரச காணிகளில் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளார்கள். 

அவ்வாறு வரணி பகுதியில் தனியார் காணியில் நிலை கொண்டிருந்த இராணுவமே தற்போது அதனை உரிமையாளர்களிடம் கையளித்துவிட்டு இங்கு அரச காணியில் புதிய முகாம் அமைத்துள்ளோம். 

அதேபோல ஏனைய இடங்களில் தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அரச காணிகளில் முகாம் அமைப்பதன் மூலம் கூடிய விரைவில் அந்த காணிகளும் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார். 

Posted by V4Tamil .com on 7:58 PM  No comments »

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் இரண்டு முறை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென. அத்துடன் காணாமற்போனோர் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கவேண்டும் என ஸ்டீபன் ஜே. ரெப்பிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப்பிற்கும் அனந்தி சசிதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று மணிக்கு யாழ் கிறின்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது. 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அனந்தி சசிதரன்,

இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் பற்றி இதுவரையிலும் எதுவித தகவல்களும் இல்லையெனவும். தொடர்ந்தும் காணாமற் போதல், கடத்தல் என்பன இடம்பெற்று வந்தது எனவும் அவரிடம் தெரிவித்தேன்.
காணாமற்போனோர் பற்றிய சரியான தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கவேண்டுமென தெரிவித்திருந்தேன். 

அத்துடன், போர்க்குற்ற விசாரணைக்கு அப்பால் இன்றைய நிலையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன். 

மேலும், வலி.வடக்கில் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் 7500 க்கும் அதிகமான குடும்பங்கள் இதுவரையிலும் மீள் குடியேற்றப்படாமல் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதினை ரெப்பிற்கு எடுத்துக் கூறினேன். 
Posted by V4Tamil .com on 7:52 PM  No comments »

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் இரண்டு முறை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென. அத்துடன் காணாமற்போனோர் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கவேண்டும் என ஸ்டீபன் ஜே. ரெப்பிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப்பிற்கும் அனந்தி சசிதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று மணிக்கு யாழ் கிறின்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது. 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அனந்தி சசிதரன்,

இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் பற்றி இதுவரையிலும் எதுவித தகவல்களும் இல்லையெனவும். தொடர்ந்தும் காணாமற் போதல், கடத்தல் என்பன இடம்பெற்று வந்தது எனவும் அவரிடம் தெரிவித்தேன்.
காணாமற்போனோர் பற்றிய சரியான தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கவேண்டுமென தெரிவித்திருந்தேன். 

அத்துடன், போர்க்குற்ற விசாரணைக்கு அப்பால் இன்றைய நிலையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன். 

மேலும், வலி.வடக்கில் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் 7500 க்கும் அதிகமான குடும்பங்கள் இதுவரையிலும் மீள் குடியேற்றப்படாமல் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதினை ரெப்பிற்கு எடுத்துக் கூறினேன். 
Posted by V4Tamil .com on 7:52 PM  No comments »
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்புடன் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“இவற்றை நான் அமெரிக்கக் குழுவிற்குத் தெரிவிப்பது நாட்டின் நன்மைக்கே. இங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். மாறாக அரசாங்கத்தையோ அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்களையே பழிவாங்கும் நோக்குடன் நான் இதனைத் தெரிவிக்கவில்லை” என்றார்.
இந்த சந்திப்புத் தொடர்பாக யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஜெனிவாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது” என்றார்.
Posted by V4Tamil .com on 7:47 PM in    No comments »

Monday, January 6, 2014

சவூதி அரேபியாவில் பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஒரு ஜெட்  விமானம் பறக்கும்போது மனிதரின் உடல் உறுப்புகள் கீழே விழந்துள்ளன.



இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது.

இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.
Posted by V4Tamil .com on 2:53 AM in    No comments »
ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.



  • அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.



  • எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை.

  • பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்... லண்டன் இசைக்கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.


  • ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

  • "பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !" என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்




  • ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.


  • இளம் வயதில் 'சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.


  • பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

  • தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர்

மணிரத்னம் மூலம் 'ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம்                    ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால்                         சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.



  • சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,"பிடிக்கலையா அம்மா ?" என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா


  •  "காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் " என்றும் பதிவு செய்திருக்கிறார்.


  • ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக 'ரோஜா’வை அறிவித்தது. 'மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.


  • 'பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.


  • 1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் 'வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.


  • ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.


  • இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாகநகைகளை அணிய மாட்டார்


  • ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு  முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது "எனக்கொரு அன்னை இருக்கின்றாள்" என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்


  • 'அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, 'மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், 'ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். 'ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.


  • அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்


  • 'வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக 'வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.


  • ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான பிறந்த நாள்.


  • ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. "லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்"  என்று சொன்னார்


  • இசையை... ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ''இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை'' என்பார்.

  • வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான்

என்பார். ஈகோ என்பதை 'edging god out !' என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !" என்பது ரஹ்மானின் வாக்குமூலம்

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search