• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Tuesday, August 20, 2013

Madras_Cafe_2013_Poster_SoHaM

மெட்ராஸ் கபே" படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றும், தணிக்கைக்குழுவை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் கூறினார். நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்துள்ள "மெட்ராஸ் கபே" படத்தை சூஜித் சிர்கார் இயக்கி உள்ளார். வரும் 23ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரில் 1980களின் பிற்பகுதியையும், 1990களின் தொடக்கத்தையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட தொகுப்பு  ஏற்கனவே வெளியாகி உள்ளது.

ஒரு உணவு விடுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதால் இந்தப்படத்துக்கு மெட்ராஸ் கபே என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் "கபே" எங்கே அமைந்துள்ளது என்பது படத்தில் காட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை வலுக்கட்டாயமாக திரும்பப்பெறப்பட்ட பிறகு, "ரா" உளவு அமைப்பின் சார்பில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரி பாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இலங்கைக்கு போர் செய்திகளை சேகரிக்க சென்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் வேடத்தில் நடிகை நர்கீஸ் பக்ரி நடித்துள்ளார்.

madras-cafe-1vஇலங்கையில் தமிழ் ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,  நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழர் அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

இந்த எதிர்ப்பு குறித்து நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில், "மெட்ராஸ் கபே" பட விவகாரத்தில், ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கிறேன். வைகோ, சீமான் ஆகியோரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர்களும் எங்கள் கருத்தை மதிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இது ஜனநாயக நாடு. இந்தப் படத்தில் அடங்கியுள்ள கதைக்களத்துக்கு தணிக்கைக்குழு ஆட்சேபம்

madras-cafe-4a

தெரிவிக்காமல், "யுஏ" சான்றிதழ் வழங்கி இருக்கிறது என்கிற பட்சத்தில், இந்தப் படத்தில் எதுவும் தவறாக இல்லை என்றே கருதுகிறேன். அவர்கள் போய் தங்கள் ஆட்சேபத்தை எழுப்பட்டும். அதை வரவேற்கிறேன். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் இந்தப் படத்தை நிச்சயம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்போம்" என்றார்.
Posted by V4Tamil .com on 10:07 PM in ,    No comments »

Sunday, August 18, 2013

boltஉலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரராக உசைய்ன் போல்ட் தனது பெயரையும் பதித்துள்ளார்.

மெஸ்கோவில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்ட தூரத்தை 37.36 செக்கன்களில் பூர்த்தி செய்த ஜமைக்கா அணியினர் முதலிடத்தைப் பெற்றனர்.

இந்த அணியில் இடம்பெற்ற உசைய்ன் போல்ட், தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

26 வயதான உசைய்ன் போல்ட் ஏற்கனவே 100 மற்றும் 200 மீற்றர் ஒட்டங்களில் தங்கப்பதக்கத்தை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்பிரகாரம் உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் எட்டுத் தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 10 பதக்கங்களை அவர் சுவீகரித்துள்ளார்.
Posted by V4Tamil .com on 11:19 PM in ,    No comments »

celkon-mobile-cup-20131 copyகரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (17.08.2013) பிற்பகல் 1 மணியளவில் கழக தலைவர் க.மகிந்தன் தலைமையில் ஞானாசாரியார் கல்லுாரி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
5 பந்து பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து வதிரி ஞான வைரவர் விளையாட்டுக் கழக அணியினர் மோதியிருந்தனர்.



1186755_376807645778184_1960631483_nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைக்கல் விளையாட்டுக் கழக அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். 05 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் மைக்கல் அணியினர் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களை பெற்றனர்.அவ் அணிசார்பாக தினோஜன் 16 ஓட்டங்களையும் ரகு 09 ஓட்டங்களையும் அச்சுதன் 13 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.


பந்து விச்சில் பவன் 2 இலக்குகளயும் கிரி, சிந்துஜன் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஞானவைரவர் அணியினர் 4.2 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 33 ஓட்டங்களை 1176312_376807672444848_1980925673_nபெற்றனர். அவ் அணிசார்பாக சிலோஜன் 11 ஓட்டங்களையும் நிதர்ஷன் 9 ஓட்டங்களையும் அருண் 7 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.


பந்து வீச்சில் தினோஜன் அச்சுதன் தலா 1 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்கள். 17 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி. ஆட்ட நாயகனாக மைக்கல் அணியின் தினோஜனும். தொடரின் சிறந்த திறமைகளை வெளிப்படித்திய அணியாக வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டது.

வட மாகாணத்திலிருந்து 12 மெய்வல்லுநர் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


அவுஸ்திரேலியாவில் 2018ஆம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் தேசிய மட்ட மெய்வல்லுநர் அணியினை தெரிவு செய்வதற்காக மா
காண ரீதியில் குறுந்தூர ஓட்ட வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது
jj


 


 





இது போன்ற நிகழ்வொன்று வட மாகாண  கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற ஓட்ட வீராங்கனைகளுக்கான தெரிவு நிகழ்ச்சிகள் கடந்த 15ஆம் மற்றும் 16 ஆகிய திகதிகளில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த தெரிவினை விளையாட்டு அமைச்சின் வளவாளராகிய சுசந்திகா ஜெயசிங்க மேற்கொண்டார். மேற்படி தெரிவு நிகழ்ச்சியில் வட மாகாணத்தைச் சேர்ந்த 20 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் மேலதிக பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
jj
Chart(3)

 


இவர்களுடைய பெயர் விபரங்கள் வளவாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி திணைக்கள பிரதி கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்துள்ளார். இதில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 10 பேரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 2 பேரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



madras-cafe-poster-july-10மெட்ராஸ் கஃபே திரைப்படம் இலங்கை அரசுக்கு நன்மதிப்பை வழங்க எடுக்கப்பட்டதாக தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.



எதிர்வரும் வெள்ளிக் கிழமை திரைக்கு வரவுள்ள மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்காக அதனை திரையிட்டுக் காட்டத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான – ஜான் ஆப்ரஹாம் அறிவித்துள்ளார்.

இப்படம் எழுப்பிய சர்ச்சை குறித்து பேசிய அப்படத்தின் இயக்குனர் ஷூஜித் சர்கார், 'மெட்ராஸ் கஃபே ஒரு ஆவணப் படம் கிடையாது; 90களில் இருந்த யாழ்ப்பாணத்தை களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, ஒரு ரகசிய உளவாளியின் கதை என்று கூறியுள்ளார்.

இந்தி, தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கஃபே படத்தின் முக்கிய நடிகர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானவர்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால் இந்தப் படம் விடுதலைப் புலிகள் அமைப்பை கொச்சைப் படுத்துவதாக தமிழ்நாட்டில் சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியதுடன் வழக்குகளையும் தொடுத்ததால் – அந்தப் படத்திற்கு அதிக விளம்பர வெளிச்சம் கிடைத்துள்ளது.

திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் சில பாடல் காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா-வில் பணிபுரிய செல்லும் ஒரு இராணுவ அதிகாரியைப் பற்றிய கதைதான் மெட்ராஸ் கஃபே.

328651,xcitefun-madras-cafe-songரகசியப் பணிக்காக யாழ்ப்பாணம் போகும் படத்தின் கதாநயகனின் அனுபவங்களைத்தான் திரையில் காண்பீர்கள் என்கிறார் அதன் இயக்குனர் ஷூஜித் சர்கார்.

'நான் ஒரு படத்தை எடுத்துள்ளேன். நான் எந்த சார்பையும் எடுக்கவில்லை. இப்படி அப்படி திரும்பாமால் ஒரு சிறிய கோட்டில் நான் பயணித்துள்ளேன். எனது முதல் படம் காஷ்மீரைப் பற்றியது. இந்தியர்கள் காஷ்மீரை எப்படி பார்க்கிறார்கள் – காஷ்மீரிகள் இந்தியாவை எப்படி பார்க்கின்றனர் என்று நான் அதில் சொல்லியிருக்கிறேன்' என்றார் ஷூஜித் சர்கார்.

'காஷ்மீரியப் பெண் இந்திய இராணுவ அதிகாரி மீது காதல் கொள்வதையும் நான் சொல்லியிருக்கிறேன். எனது இரண்டாவது படம் விந்து தானம் குறித்தது. நான் படமெடுத்த காலத்தில் இதைப் பற்றிப் பேசவே தயக்கம் இருந்தது. இது ஏதோ ஆபாசப் படம் என்று சிலர் கூறினார். ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு பல பாரட்டுக்கள் வந்தன' என்றும் கூறினார் இயக்குநர் சர்கார்.

'இது ஒரு ஆவணப் படம் இல்லை. படத்தின் நாயகன் ஒரு இடத்திற்குப் போகிறார் அவரது பார்வையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ரகசிய வேலைக்காக யாழ்ப்பாணம் செல்லும் படத்தின் நாயகன் ஜான் ஆப்ரஹாம் அங்கே இந்தியாவை பாதிக்கக் கூடிய ஒரு சதித் திட்டத்தை கண்டறிவதுதான் இந்தக் கதை' என்றார் ஷூஜித் சர்கார்.

ஷூஜித் சர்கார் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுமே பாராட்டுக்களையும் – விருதுகளையும் வென்றுள்ளன.

இலங்கை அரசு மீது நன்மதிப்பை உருவாக்க இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  இலங்கை அரசு திரைப்பட தயாரிப்புக்கு பல வசதிகளை செய்துள்ளது என்றும் தமிழ் நாட்டில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை நடிகர் ஜான் ஆப்ரஹாமும் வையாகாம்-18 என்ற நிறுவனத்தினரும் இணைந்து தயாரித்துள்ளனர். வையாகாம்-18 மும்பையில் இருக்கும் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம்.
மெட்ராஸ் கஃபே படத்திற்கு ஏற்கனவை இந்திய தணிக்கை குழுவின் சான்று கிடைத்துவிட்டது.

இந்நிலையில், படம் வந்த பிறகு அதைப் பார்ப்பவர்கள் கூறும் விமர்சனத்தைத் தான் ஏற்பேன் என்று கூறும் ஷூஜித் சர்கார், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளோர் புரிந்து கொள்ள இப்படம் உதவும் என்கிறார்.

'நீ ஒரு வங்காளி – உனக்குத் தமிழ் பிரச்சனையைப் பற்றி என்ன தெரியும் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். உனக்கும் இதற்கும் சம்மந்தம் கிடையாது என்கிறார்கள். இந்தப்  பிரச்சனை பற்றி தெரியாமல் இருக்கும் நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் இப்படத்தின் மூலம் அது பற்றி தெரிந்து கொள்வார்கள், என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
999587_10152137287353858_1727903010_nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 14வது உலக தடகள போட்டிகள் நடந்து வருகிறது. 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கபதக்கம் வென்று உலக அதிவேக வீரரானார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மற்றொரு போட்டியான ஆண்கள் 200 மீட்டர் ஓட்டம் நேற்று நடந்தது.
இறுதிச்சுற்றில் உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பலப்பரீட்சையில் இறங்கினர். கோடிக்கணக்கான ரசிகர்களின் பார்வை உலகின் அதிவேக வீரரான போல்டின் மீதே இருந்தது.

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த உசேன் போல்டுக்கு யாரும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாதி தூரத்திற்கு பிறகு தனி ஒருவராக முன்னிலை பெற்று 19.66 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கபதக்கத்தை முத்தமிட்டார்.
உலக தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் அவர் தங்க பதக்கம் வெல்வது இது 3வது முறையாகும். ஜமைக்காவின் வாரன் வெய்ர் 19.79 வினாடிகளில் வந்து வெள்ளி பதக்கத்தையும், அமெரிக்காவின் கார்டிஸ் மிட்செல் 20.04 வினாடி களில் கடந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.
26 வயதான உசேன்போல்ட் ஒட்டுமொத்த உலக தடகள போட்டிகளில் நேற்று வரை 7 தங்க பதக்கங்களை குவித்திருக்கிறார்.

1149312_10152143640658858_1696014507_oஇன்று மாலை 4  மணிக்கு 100 தொடர் ஓட்ட போட்டி நடக்கிறது. இதில் ஜமைக்கா நாட்டு அணியில் போல்ட் இடம்பிடித்துள்ளார். இதில் அவர் தங்கம் வென்றால் உலக தடகள போட்டிகளில் அதிக தங்கபதக்கம் வென்ற வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார்.
அமெரிக்காவின் காரல் லூயிஸ், மைக்கேல் ஜான்சன், அலீசன் பெலிக்ஸ் ஆகியோர் 8 தங்க பதக்கங்கள் பெற்று வரலாற்று சாதனையாளர்களாக உள்ளனர். இந்த சாதனையாளர்கள் பட்டியலில் போல்ட் இடம்பிடிப்பாரா என்பது இன்று மாலை தெரியும்.
jaffna_car_race_001யாழ் மோட்டார் பந்தயக் கொண்டாட்டம் 2013  என்ற மோட்டார் பந்தய போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இவ்   பந்தய போட்டி, செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தபடுமென அதன் ஏற்பாட்டுக்குழுவினர் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளனர்.இந்த போட்டியை இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுக்கள் சங்கம், இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டுக்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அனுமதியுடன், மோட்டார் பந்தய அமைப்பு மற்றும் மோட்டார் பந்தய கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கோல்டன் மோட்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தவுள்ளது.

இலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் உரிமையைக் கொண்டுள்ளவர்கள் யாவரும் இந்த மோட்டார் பந்தய போட்டி நிகழ்வில் பங்குபற்ற முடியும். இதற்குரிய விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 23ம் திகதியில் இருந்து ஏற்றுக்கொள்ளபடுகின்றது என தெரிவித்தனர்..

மோட்டார் பந்தயப் போட்டியானது செப்பெரம்பர் 14ம் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கான போட்டியாக சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம் ஆகியன நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரதன் ஓட்டமானது, ஆண்களுக்குரிய மரதன் ஓட்டம் 22 கிலோ மீற்றரும், பெண்களுக்கான மரதன் ஓட்டம் 15 கிலோ மீற்றரும் நடைபெறவுள்ளது.ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 110 கிலோ மீற்றரும், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 35 கிலோ மீற்றர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Saturday, August 17, 2013

ind-nz2014, பெப்ரவரி 24 முதல் மார்ச் 8 வரை, பங்களாதேசில் ஆசிய கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கிறது. இதனால், நியூசிலாந்து தொடரில் பங்கேற்க, இந்திய அணி அங்கு செல்லுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) எதிர்கால போட்டி அட்டவணைப்படி, இந்திய அணி, வரும் 2014 பெப்ரவரி மாதம்  முதல் மார்ச் மாதம் வரை நியூசிலாந்து சென்று, மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு ரி-ருவென்டி போட்டியில் பங்கேற்க வேண்டும்.

ஆனால் ஆசிய கோப்பை போட்டிகளை காரணம் காட்டி நியூசிலாந்து தொடரில் போட்டிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தலா இரண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் போதும் என, இந்தியா தெரிவித்தது. இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

இருப்பினும், இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் அதிகமான வருமானத்தை பெற்றுத்தரும் என்பதால், இந்தியாவின் முடிவுக்காக, நியூசிலாந்து காத்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் கூறுகையில்,

" இந்தியா தொடர் குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடன் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது உண்மை தான். அடுத்த சில வாரங்களில் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகும் என்று நம்புகிறோம்,'' என்றார்.
fixtures-2013-14-premier-league-640x3602013/14 பருவ காலத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டித் தொடர் போட்டிகள் இன்று ஆரம்பிக்கின்றன.

இம்முறை  இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் முன்னணி கழகங்களில் முகாமையாளர் மாற்றங்கள், வீரர் பரிமாற்றங்கள் என்பன நடந்துள்ள நிலையில் போட்டிகள்ஆரம்பிக்கின்றன.


கடந்த பருவகாலத்தின் சம்பியன்களான மன்செஸ்டர் யுனைட்டட் கழகம் இம்முறை புதிய முகாமையாளர் டேவிட் மோயேஸின் கீழ்  போட்டிகளில் கலந்து கொள்கின்றது.


அத்துடன், வெயன் ரூனியை வாங்குவதற்கான செல்சி கழகத்தின் முயற்சிகளும் தொடருகின்ற நிலையில், உபாதை காரணமாக ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் வெய்ன் ரூனி கலந்து கொள்ள மாட்டார் என மன்செஸ்டர் யுனைட்டட் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதேவேளை, மீண்டுமொரு முறை சில வருடங்களின் பின்னர் செல்சி கழகத்தின் முகாமையாளர் பொறுப்பை ஜோசே மரினோ ஏற்றிருக்கும் நிலையில், செல்சி கழகம் மீதான எதிர்பார்ப்பு இம்முறை அதிகரித்துள்ளது.


இன்று நடைபெறவுள்ள போட்டிகள்:






































லிவர்பூல்எதிர்ஸ்டோக் சிட்டி
ஆர்சனல் எதிர்அஸ்டன் விலா
நோர்விச் எதிர்எவர்டன்
சன்டர்லான்ட்எதிர்ஃபுல்ஹாம்
வெஸ்ட்புரோம்எதிர்சௌதம்டன்
வெஸ்ட்ஹாம் யுனைட்டட்எதிர்கார்டிப்
சுவன்சியாஎதிர்மன்சஸ்டர் யுனைட்டட்

Friday, August 16, 2013

images14 ஆவது உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகள் ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெறுகின்றன. இதில் இன்று காலை  நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளின், ஈட்டி எறிதல் மகளிர் பிரிவு போட்டியில் இலங்கையின் நதீகா லக்மாலி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

"பி" பிரிவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய நதீகா லக்மாலி 60.39 மீற்றர் தூரத்துற்கு ஈட்டியை எறிந்து வெற்றி பெற்றதுடன், ஈட்டி எறிதல் மகளிர் பிரிவில் உலகின் தலைசிறந்த 12 வீராங்கனைகள் வரிசையில் இன்றைய வெற்றியுடன் தன்னையும் இணைத்துள்ளார்.

குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திக்கா ஜயசிங்கவை அடுத்து உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் நதீகா லக்மாலி தன்வசப்படுத்தினார்.
Posted by V4Tamil .com on 4:01 AM in ,    No comments »
manivannan wife 200கணவர் இறந்த இரண்டு மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீரென மரணம் அடைந்தார்.

பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மனைவி செங்கமலம் (55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார்.

கணவர் இறந்த பின்னர் சோகத்தில் இருந்த செங்கமலத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கமலம், கணவன் இறந்த 2 மாதத்தில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரையுலக பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கவிருக்கின்றது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைவா"தலைவா" பட விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் கடந்த 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே "தலைவா" வெளியாக இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட படக்குழுவினர் கோடநாடு சென்றதாகவும், அவர்கள் வழியிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனிடையே, "தலைவா" படம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் வெளியாகாவிட்டால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன் என்றும், 'முதல்வர்' மனமிறங்கி படம் வெளிவர நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், "தலைவா" படம் வெளியிட நடவடிக்கை எடுக்க கோரி படத்தின் இயக்குனர் விஜய், உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று மனு கொடுத்துள்ளார்.

அத்தோடு, இன்று ‘தலைவா’ படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை காவல்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

'தலைவா' திரைப்படம் கடந்த ஆக.9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் ‘தலைவா’ திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டு திரைக்கு வெளிவராத சூழல் அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தவிர உலகமெங்கும் வெளியான காரணத்தினால் ‘தலைவா’ திரைப்படம் அனுமதியின்றி இணையதளத்திலும், விசிடி வழியாகவும் தமிழகமெங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது.

தமிழகத்தில் ‘தலைவா’ திரைப்படம் வெளிவர பல வகையில் முயற்சித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால் ‘தலைவா’ படத்தில் நடித்த நடிகர் விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தலைவா’ திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதத்தில் படக்குழுவினருக்கு ஆதரவாக ஏனைய கலைஞர்களும் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளததாக சென்னை திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
CRICKET-ICC-WORLD-T20-MATCH22-ENG-SRIதற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் லசித் மலிங்க அழைக்கப்பட்டிருக்கின்றார்.

ஸிம்பாவே சுற்றுக்கு செல்லவிருக்கும் பாக்கிஸ்தான் அணியின் முகம்மட் ஹபீசுக்கு பதிலாகவே மலிங்க இத்தொடரில் கயானா அணிக்காக விளையாடவுள்ளார்.


கரீபியன் பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகளின் இறுதிக்கட்டங்கள் அண்மிக்கும் நிலையில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இலங்கை சார்பில் விளையாடும் மூன்றாவது வீரராக லசித் மலிங்க உள்ளார். ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணிக்காக முத்தையா முரளிதரன் விளையாடி வருகின்றமையும், டினிடாட் அணிக்காக மஹேல ஜெயவர்த்தன அழைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
20111012_Pakistan-vs-England-Cricketகிரிக்கெட் சரித்திரத்தின் முக்கிய பங்காக முதலாவது பகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு டிசம்பர் முடிவில் அல்லது அடுத்தாண்டு ஆரம்பத்தில் இந்த டெஸ்ற் போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில், அந்த டெஸ்ற் போட்டிகளில் ஒன்றே பகலிரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பகலிரவு டெஸ்ற் போட்டிகளுக்கு இதுவரை எந்தக் கிரிக்கெட் சபையும் முயற்சிகளை மேற்கொள்ளாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி இலங்கைக்கெதிரான 3 டெஸ்ற் போட்டிகளில் ஒரு போட்டியை பகலிரவுப் போட்டியாக நடாத்துவதற்கான ஒப்புதலை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளது.

இந்தக் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொள்ளுமாயின் முதலாவது பகலிரவு டெஸ்ற் போட்டியில் விளையாடிய பெருமையை இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பெற்றுக் கொள்ளும்.

இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவர் ஜெயந்த தர்மதாசவின் கருத்தின் படி பகலிரவு டெஸ்ற் போட்டிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆர்வத்துடன் காணப்படுவதாகவும், பாரிய தடையேதும் ஏற்படாமல் இருப்பின், குறித்த தொடரில் ஒரு பகலிரவு டெஸ்ற் போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் நிறமும், பந்தின் வகை தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
celkon-mobile-cup-20131 copyகரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நாளை 17.08.2013 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் கரவெட்டி ஞானாசாரியார் கல்லுாரி மைதானத்தில் பிற்பகல் 1.00 க்கு ஆரம்பமாகும்.

இச்சுற்றுப் போட்டிகள் 5 ஓவர்கள், மற்றும் 10 ஒவர்கள் கொண்ட பிரிவுகளாக  நடைபெற்றிருந்தன.

அதனடிப்படையில் நாளைய இறுதிப்போட்டிகளின் முதலாவது போட்டி 5 ஓவர்கள் பிரிவுக்கானதாக இடம்பெறும். இதில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வதிரி ஞானவைரவர் விளையாட்டுக் கழக அணி விளையாடவுள்ளது.

தொடர்ந்து இடம்பெறும் 10 ஓவர்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகு விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரவெட்டி ஐங்கரா விளையாட்டுக்கழக அணி விளையாடவுள்ளது.

இவ்விரு இறுதிப்போட்டிகளிலும் விளையாடவுள்ள நான்கு அணிகளும் வடமராட்சியின் பலம்பொருந்திய அணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, August 15, 2013

tamil-cinema-thalaiva-audio-release-posters06விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.இப்படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்பிற்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.


எனவே இனி படத்தை வெளியிடுவது திரையரங்கு உரிமையாளர்களின் கையில்தான் உள்ளது. இந்நிலையில் நேற்று கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23ம் திகதி வெளியிடலாமா என ஆலோசித்துள்ளனர்.


ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்திற்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.


250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் வெளியிடலாம் என்றும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.


இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால், தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Marion-Bartoliவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை மரியன் பர்டோலி ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் விருது பெற்று 40 நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஓய்வு பெறுவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மரியன் பர்டோலி, தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக போட்டிகளில் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
28 வயதான பிரான்ஸ் வீராங்கனையான மரியன் பர்டோலி, உலக தரவரிசைப் பட்டியலில் 7ஆம் இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
umpire-Selliah-Ponnadurai-60-60ஒரு நாள் சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் நடுவரான இலங்கையைச்சேர்ந்த செல்லையா பொன்னுத்துரை தனது 78 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.

1985 ஆம் ஆண்டு இலங்கை அணி ரெஸ்ட் போட்டியொன்றில் முதல் வெற்றியை இந்தியாவுக்கு எதிராக பதிவுசெய்தபோது அதில் பொன்னுதுரையே நடுவராக கடமையாற்றினார். 

பொன்னுத்துரை 1985-93 காலப்பகுதியில் 3 ரெஸ்ட் போட்டிகளுக்கும் 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும் நடுவராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் 1985 முதல் 1993 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்ட ஆட்டங்களிலும், 1983 முதல் 1993 வரை எட்டுஒருநாள் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்

இலங்கை 1985 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்ற முதலாவது தேர்வுப் போட்டியின் நடுவராக பொன்னத்துரை பணியாற்றியிருந்தார்.

நடுவர் பியதாச வித்தானகமகேயுடன் இணைந்து கொழும்பில் இலங்கை அணி விளையாடிய இரண்டாவது தேர்வுப் போட்டியில் நடுவராகப் பணியாற்றியிருந்தார். இப்போட்டியில் இலங்கை 149 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


இந்தியாவிற்கு எதிராக இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், பாக்கித்தானுக்கு எதிராக ஒரு தேர்வுப் போட்டியிலும் இவர் பங்குபற்றியிருந்தார்

யாழ்ப்பாணத்தில் பிறந்த பொன்னத்துரை யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்லூரித் துடுப்பாட்ட அணியில் வலக்கைத் துடுப்பாட்டக்காரராகவும், வலக்கை பந்துவீச்சாளராகவும் விளையாடியுள்ளார். இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
1172411_287827741355798_1094356203_oஉலக புகழ் பெற்ற திரைப்படங்களின் காட்சிப்படுத்தல் காட்சிகள் யாழ் பல்கலைகழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை (14.07.2013) இன்று காட்சிப்படுத்தப்பட்டது. இ்தில்மாணவா்கள்,ஊடக ஆசிரியா்கள்,ஆர்வலா்கள் கலந்து கொண்டு பார்வையிட்டானா். 

இன்று  இயக்குனா் சத்யா ஜீத்ரேயின் திரைப்படமான பதர் பாஞ்சலி உள்ளிட்ட சா்வதேச திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இனி வரும் காலங்களில்  இக் காட்சிப்படுத்தல் தொடா்ந்துஇடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Mahela-Jayawardene-wary-of-Saeed-Ajmal-Cricket-News-Update-160489தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணியில் விளையாடுவதற்காக மஹேல ஜயவர்த்தன கரீபியன் தீவுகளுக்குச் செல்லவுள்ளார். அணி உரிமையாளரிடம் இருந்து தமக்கு திடீரென கிடைத்த அழைப்பின் பேரில், இன்றைய தினம் மாலை கரீபியன் தீவுகள் நோக்கி பயணிக்கவுள்ளதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கரீபியன் பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகளில் ஆறு போட்டிகள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணிக்கு இரண்டு போட்டிகளே உள்ளன. கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இலங்கை சார்பில் விளையாடும் இரண்டாவது வீரராக மஹேல ஜயவர்த்தன உள்ளார்.

ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணிக்காக முத்தையா முரளிதரன் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கரிபீயன் பிரீமியர் லீக் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியடைந்த டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி, கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும், வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதனை உறுதி செய்வதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணியில் மஹேல ஜயவர்த்தன இணைகின்றார்
Posted by V4Tamil .com on 4:38 AM in ,    No comments »

sl gunasekara_CIவடமாகாண சபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றுமொரு செல்வநாயகம் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


 

விக்னேஸ்வரன் நேர்மையான நீதிபதி, ஆனால் மறுப்பக்கத்தில் அவர் மற்றுமொரு செல்வநாயகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பார்வையில் தந்தை செல்வா என்று அழைக்கப்படும் செல்வநாயகம், பச்சாத்தாபமற்ற ஒரு இனவாதி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பெயர் ஒரு காலகட்டத்தில் நாட்டின் அனைத்து தரப்பாலும் உச்சரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் விஜயவீரவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாராநாயக்கவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. தற்போது சீ.வி.விக்னேஸ்வரனின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அவரது பெயரை சில தரப்பினர் நம்பிக்கையுடனும், சிலர் அச்சத்துடனும் உச்சரிக்கின்றனர்.


செல்வநாயகத்தை போன்றே அவரும் ஒரு இனவாதியே என்று குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அடிப்படைவாத கட்சி, அல்லது, அடிப்படை இனவாத கட்சிகளின் ஒரு கூட்டு. இந்த கூட்டமைப்பு தெரிவு செய்கின்ற எந்த ஒரு வேட்பாளரும், இனவாதியாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. எனினும் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றவர்களுள் நானும் ஒருவன். காரணம் முரட்டுத்தனமான பிடிவாதம் மிக்க இனவாதி ஒருவரை தெரிவு செய்யாமல், நேர்மையான அமைதியான ஒரு இனவாதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளது.


விக்னேஸ்வரன் 2001ம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராக தெரிவான போது, அவர் தொடர்பில் நான் விமர்சித்திருந்தேன். ஆனாலும் அதன் பின்னர், அவர் விசாரித்த தாம் வாதாடிய வழக்குகளின் போது அவர் பாரபட்சமற்று வாதப் பிரதிவாதங்களை உன்னிப்பாக கேட்டு, அதன் அடிப்படையில் தீர்ப்பினை வழங்கினார். எனவே அவர் ஒரு சிறந்த நீதிபதி என்பதில் ஐயமே இல்லை.


இந்தநிலையில் அவர் வடக்கின் முதலமைச்சராக தெரிவானால் சக உறுப்பினர்களின் ஆடம்பரங்களுக்காக பொது மக்களின் நிதிகளை விரயம் செய்பவராகவோ அல்லது பொது நிதியை கொள்ளையிடுபவராக இருப்பார் என்று கனவில் கூட நினைக்க முடியாது. அதிகாரப்பகிர்வு விடயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால், ஒரு சிறந்த முதலமைச்சர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார்.


ஆனால் அவர் ஒரு அடிப்படை இனவாதி. அவர் இனவாதியாக இல்லாவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரை முதலமைச்சு வேட்பாளராக தெரிவு செய்திருக்காது. 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது, தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் செல்வநாயகத்தினால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் சிலாபம் முதல் மன்னார் வரையான கரையோர பகுதி உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களின் தாயகம் என்று கூறப்பட்டிருந்தது. குறைந்தபட்சம், தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தைக்கூட இருக்கவில்லை. இது செல்வநாயகம் எந்த அளவு இனவாதி என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஞ்ஞாபனத்தையே விக்னேஸ்வரனும் பின்பற்றுபவராக இருந்தால் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கும் இந்த பிரதேசம் தாயகமாக இருக்கும்.


ஆனால் மன்னாரில் உள்ள சிங்களவர் ஒருவர் கூட வெளியாளாக பார்க்கப்படுவார். 1965ம் ஆண்டு டட்லி சேனாநாயக்க பிரதமராக வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர், செல்வநாயமும், டட்லியும் சந்தித்துக் கொண்டனர். இதன் போது இருவருக்கும் இடையிலான உடன்படிக்கை மிகப்பெரிய இனவாதத்தை உணர்த்துகிறது. இந்த உடன்படிக்கையின் படி, நாட்டில் எந்த ஒரு நீர்பாசன வேலைத்திட்டங்களிலும், வடமாகாண காணிகள் பகிரப்படும். இதன் போது வேலைத்திட்டத்தின் முதல் முன்னுரிமை வடக்கு கிழக்கில் உள்ள அந்தந்த மாவட்டங்களின் காணியற்றவர்களுக்கு வழங்கப்படும்.


இரண்டாவது முன்னுரிமை அந்த மாகாணத்தின் மாவட்டங்களில்; உள்ள தமிழர்களுக்கு வழங்கப்படும். மூன்றாவதாக வெளி மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறானால் வெளிமாவட்டங்களில் உள்ள தமிழர்களுக்கும், வடக்கில் காணிகள் பிரிக்கப்படும் போது, காணிகளில் உரிமை உண்டு என்பதாகும். ஆனால் மலையக தமிழர்கள் உட்பட்ட சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் செல்வநாயகம் கடுமையான இனவாதியாக பார்க்கப்படுகிறார். இதே கொள்கையை பின்பற்றும் சீ.வி.விக்னேஸ்வரனும் அவர் போன்ற இனவாதியாகவே திகழ்வார். என்று எஸ்.எல்.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Actor Arjun Family Photos_86909 சுதந்திர தினமான இன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நன்றி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தேசப்பற்றுள்ள அர்ஜுன் தனது கையில் நம் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். 

அவர் ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தந்தை வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார். அவர் விஷாலுடன் சேர்ந்து நடித்த பட்டத்து யானை அண்மையில் தான் ரிலீஸ் ஆனது. முன்னதாக அர்ஜுனுக்கு ஷங்கரின் ஜென்டில்மேன் படம் தான் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 4:07 AM in , ,    No comments »
1075244_556083237774657_1404470686_nSAFF சம்பியன்ஸிப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டிகள் பெங்கொக் நகரில் நடைபெற்று வருகின்றது. இப்பயிற்சியாட்டங்களில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கையணி வெற்றி பெற்றுள்ளது.

டிவிஷன் இரண்டின் சம்பியன்களான கஸ்டம்ஸ் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றி பெற்றது. போட்டியின் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடிய நிலையில், முதல் அரைப்பகுதியில் இரண்டு அணிகளும் எந்தவொரு கோலையும் அடிக்கவில்லை. இரண்டாவது அரைப் பகுதியில் இலங்கையின் சத்துர குணரத்ன முதலாவது கோலினை அடித்ததுடன், இரண்டாவது கோலை மொஹமட் சமீர் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். தாய்லாந்தில் அடுத்து சில நாட்கள் தங்கியிருக்கும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணி, தாய்லாந்து இராணுவ உதைபந்தாட்ட கழகம் மற்றும் 21 வயதுக்குட்பட்ட தாய்லாந்து தேசிய அணி ஆகியவற்றுடன் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. நேபாளத்தில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ள SAFF சம்பியன்ஸிப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் SAFF சம்பியன்ஸிப் போட்டிகளில் குழு A மற்றும் குழு B ஆகியவற்றில் கலந்து கொள்கின்றன.
Posted by V4Tamil .com on 3:15 AM in ,    No comments »
00000897-photoஅவுஸ்ரேரியாவில் 2013 ஆண்டு நடைபெறவுள்ள கொமன் வெல்த் போட்டிகளுக்காக கனிஸ்ட வீரர்களை தெரிவு செய்து பயிற்சியளிப்பதற்க்காக இலங்கையின் முன்னாள் குறுந் துார ஓட்ட வீராங்கனையும், விளையாட்டுத்துறை அமைச்சினுடைய செயலாளருமான சுசந்திக்கா ஜெயசிங்க யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 வீரர்களுக்கு சுசந்திக்காவினால் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகள் இன்றும் நாளையும் துரைப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என, வட மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் கே. சத்தியபாலன் தெரிவித்தார்.

இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக செயற்ப்படுகின்ற வீரர்கள் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Posted by V4Tamil .com on 12:28 AM in ,    No comments »

Wednesday, August 14, 2013

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஓகஸ்ட் 27ஆம் திகதி தபால் திணைக்களத்திடம்

n4

கையளிக்கப்படவுள்ளது என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 13ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் தபால் திணைக்களம் ஈடுபடவுள்ளது என தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
Posted by V4Tamil .com on 8:48 PM in    No comments »
imagesபங்களாதேஸில் நடைபெற்ற பங்களாதேஸ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆர்ட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தொடரின் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு இலங்கை வீரர் ஒருவர் அணுகப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளார்.
எனினும் இது குறித்த அவர் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு தகவல் வழங்கி இருக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வீரர் நேற்றையதினம் சிறிலங்கா கிரிக்கட் நிறைவேற்று குழுவின் முன்னால் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
குற்றம் சுத்தப்பட்டுள்ள வீரர் முன்னர் இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடி இருந்த போதும், பின்னர் சரியாக திறமையை வெளிப்படுத்தாக காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றுகூறப்படுகிறது.

பங்களாதேஸ் பிரீமியர் லீக் தொடரின், டாகா கிளேடியேட்டர் அணியில் பங்கு பற்றி இருந்த 9 வீரர்கள் ஆட்டநிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

Tuesday, August 13, 2013

shruti_hassan12ஸ்ருதி ஹாசன் தனது சம்பத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன்.

அதன் பிறகு ஏனோ தமிழில் ஒரு படங்களில் மட்டும் நடித்த இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தினார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.

கடந்த மாதம் இந்தியில் ஸ்ருதி நடிப்பில் வெளியான டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன.

மேலும் தெலுங்கிலும் ஸ்ருதி நடித்த கப்பார் சிங்கைத் தொடர்ந்து அண்மையில் வெளியான பலுபு படமும் வெற்றிபெற்றுள்ளது. தெலுங்கு மற்றும் இந்தியில் ஸ்ருதிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.

பலுபு படத்தில் ஸ்ருதியுடைய சம்பளம் ரூ.1 கோடி. தற்போது அந்த சம்பளத்திலிருந்து மேலும் அதிகரித்து இனிமுதல் சம்பளமாக ரூ.1.50 கோடி கேட்க போகிறாராம்.

 
Posted by V4Tamil .com on 7:44 PM in , ,    No comments »

Monday, August 12, 2013

வெலிவேரிய குடிநீர் பிரச்சினைக்கு காரணமென பிரதேசமக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொழிற்சாலை தவறாக இயங்கியமை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அந்த தொழிற்சாலை மூடப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளை இன்றைய தினம் சந்தித்த ஜனாதிபதி, பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு தீர்வுகளை முன்வைத்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் குடிநீர் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொழிற்சாலை தவறாக இயங்கியமை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டால், அதனை மூடுவதற்கும், தொழிற்சாலை உரிய விதிமுறைகளுக்கு அமைய இயங்கினால், முதலீட்டு வலயத்தில் அதனை மீண்டும் அமைப்பதற்கு காலஅவகாசம் வழங்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக, ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரான்சில் அதிக அளவில் உற்பத்தியாகும் முட்டைகளின் விலையை உயர்த்த வலியுறுத்தும் போராட்டத்தில் தினமும் சுமார் 1,00,000 முட்டைகள் சாலைகளில் போட்டு உடைக்கபடுகின்றன.

பிரான்சில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு ஏற்ப விலையை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், விவாசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படாததால், அவர்கள் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்படி, முட்டையின் விலையை அதிகரிக்கும் வரை தினமும் சுமார் 1,00,000 முட்டைகளை சாலைகளில் போட்டு உடைக்க முடிவு செய்தனர்.

போராட்டத்தின் ஒரு கட்டமாக கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் திரண்ட விவசாயிகள் சுமார் 2 லட்சம் முட்டைகளை கீழே போட்டு உடைத்தனர்.

இது தொடர்பாக கூறிய விவசாயி ஒருவர், அளவிற்கு அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதிகளவில் முட்டைகள் கிடைக்கின்றன. இதனால் முட்டை விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பராமரிப்புக்கு ஆகும் செலவைக்கூட எங்களால் முட்டை வியாபாரத்தின் மூலம் பெற இயலுவதில்லை எனக் கவலை தெரிவித்தார்.

 
Posted by V4Tamil .com on 9:17 PM in    No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search