விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை மரியன் பர்டோலி ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.கிராண்ட்ஸ்லாம் விருது பெற்று 40 நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஓய்வு பெறுவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மரியன் பர்டோலி, தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக போட்டிகளில் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
28 வயதான பிரான்ஸ் வீராங்கனையான மரியன் பர்டோலி, உலக தரவரிசைப் பட்டியலில் 7ஆம் இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment