• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Thursday, January 9, 2014


சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே நாம் ஆச்சர்யப் படுவதுண்டு.

ஆனால் 112 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆகவேண்டும்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் என்ற தீயணைப்பு நிலையத்தில் தான் இந்த அதிசய மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின்விளக்கை உருவாக்கியவர் அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்.

அடோல்ப் சைலெட் 2.5 வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த விளக்கை கண்டுபிடித்தார். இந்த விளக்கைப் போல மற்றொரு விளக்கை இனிமேல் யாரும் உருவாகவே கூடாது என்று நினைத்த அவர் அதன் தயாரிப்பு குறிப்புகளை எரித்துவிட்டார்.

மேலும் அவர் தனது குறிப்பில் இதைப் போன்ற வேறொரு விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்கமுடியாது என்று எழுதி வைத்துள்ளார்.

இந்த விளக்கைப் போல இன்னொரு விளக்கை உருவாகும் முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

அடோல்ப் சைலேடால் 1901 ஆம் ஆண்டு எரிய வைக்கப்பட்ட இந்த மின்விளக்கு கடந்த 112 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது.

Posted by V4Tamil .com on 2:37 AM in    No comments »



போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கொழும்பு - கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால், காலி வீதியின் இரண்டு வழித் தடங்களும் மூடப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

Posted by V4Tamil .com on 1:46 AM in    No comments »


மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இன்று பகல் 11.30 மணியளவில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ்  நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற ஆணையாளர் அ.பிறேம்சங்கர், மல்லாகம் நீதிமன்ற நீதிபதிகளான சி.சதீஷ்கரன், மேலதிக நீதிபதி மொகமட் போன்றோர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மேளவாத்தியம்இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி,  மல்லாகம் மகா வித்தியாலயம்,  உடுவிஜல் மகளிர் கல்லாரி  மாணவ மாணவிகளின் மேலைத்தேய பேன்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.


அத்தோடு தேசியக்கொடி ஏற்றல், நினைவுப் பலகை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றன. தொடர்ந்து நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரர் திறந்து வைக்கும் நிகழ்வு

இடம்பெற்றது.





Posted by V4Tamil .com on 1:27 AM in    No comments »


கடந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த  Jessica Bennett என்ற பெண் தனது 19மாத Jonah என்ற கைக்குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். விமான பயணம் செய்துகொண்டிருந்தபோது குழந்தை Jonah  திடீரென அழுக ஆரம்பித்தது. இதனால் அருகில் தூங்கிக்கொண்டிருந்த Joe Rickey Hundley என்பவர் குழந்தை அழுகை சத்தத்தால் எரிச்சல் அடைந்து ஆத்திரத்தில் குழந்தையை அடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த Jessica Bennett விமான ஊழியர்களிடம் புகார் கூறினார்.

விமானம் தரையிறங்கியவுடன் Jessica Bennett, காவல்நிலையத்தில்  Joe Rickey Hundley மீது புகார் அளித்தார். அவருடைய புகாரின்பேரில் Joe Rickey Hundleyமீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. Joe Rickey Hundley தனது தவறை ஒப்புக்கொண்டு தான் செய்த செயலுக்காக வருந்துவதாக நீதிபதியிடம் கூறினார்.

இருப்பினும் அவருக்கு நீதிபதி 8 மாத சிறைதண்டனை கொடுத்து நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த சம்பவத்தின்போது தனது குழந்தை மிகவும் பயந்துவிட்டதாகவும், இதுபோன்ற பொறுப்பற்றவர்களுக்கு இந்த தண்டனை அவசியம்தான் என்றும் தீர்ப்பு வெளியானவுடன் குழந்தையின் தாயார் Jessica Bennett செய்தியாளர்களிடம் கூறினார். தண்டனை பெற்ற Joe Rickey Hundley என்பவர் Unitech Composites and Structures, என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 1:19 AM in    No comments »

தனது 90 வயது தாயாரின் ஓய்­வூ­தியப் பணத்தைப் பெறு­வ­தற்­காக 54 வயது மக­னொ­ருவர், இறந்த தாயின் சட­லத்தை குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.
ஹம்­ஷி­யரில் போர்ட்ஸ்­மவுத் நகரில் வசிக்கும் பிலிப் பரோ என்ற நபரே, இயற்கை மர­ண­ம­டைந்த தனது தாயா­ரான லூஸி பரோவின் உடலை சட்­டப்­பி­ர­காரம் நல்­ல­டக்கம் செய்­யாது குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்­துள்ளார்.

ஆரம்­பத்தில் பிலிப் தனது தாயாரை படு­கொலை செய்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­பட்­டது. எனினும், லூஸியின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கைகள் அவர் இயற்கை மரணம் எய்­தி­யதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.
இந்­நி­லையில் தனது தாயார் இறந்து விட்­டதை மறைத்து அவ­ரது ஓய்­வூ­திய அனு­கூ­லங்­களைப் பெற்­றமை மற்றும் தனது தாயாரின் சட­லத்தை உரிய முறையில் நல்­ல­டக்கம் செய்யத் தவ­றி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுகள் பிலிப் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.
பிரித்­தா­னிய சட்டப் பிர­காரம் பிலிப் தனது குற்றங்களுக்காக கால வரையறையற்ற சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடு மென தெரிவிக்கப்படுகிறது.
Posted by V4Tamil .com on 1:01 AM in    No comments »
Posted by V4Tamil .com on 12:51 AM in    No comments »
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.


நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஆம் ஆத்மிக் கட்சியை பாராட்டி கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். நடிகை நமீதாவும் பாராட்டினார். அவர் இக்கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் ஆம் ஆத்மி கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. விஜய் தனிகட்சி துவங்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அதை உறுதிபடுத்தவில்லை.விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக கூறப்படுவது உண்மையா என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

ஆம் ஆத்மி கட்சியில் தேர்வது குறித்து நடிகர் விஜய்யோ வேறு எந்த திரையுலக நட்சத்திரங்களோ எங்களை அணுகவில்லை. விஜய் எங்கள் கட்சியில் தாராளமாக சேரலாம். வேறு நடிகர்களும் வரலாம். அவர்கள் கட்சியில் சேர எந்த தடையும் இல்லை.
கட்சியில் விஜய் சேர்ந்தாலும் அவர் சாதாரண உறுப்பினராகவே இருக்க முடியும். ஆம் ஆத்மி கட்சியில் பதவிக்கு வர அவர் விரும்பினால் அவரது நேர்மை மற்றும் ஊழலற்ற நடவடிக்கைகள் குறித்து விசாரித்து அதன்பின்னரே பொறுப்பு வழங்கப்படும். நன்னடத்தை உள்ளவர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்கள்; ஊழல் செய்யாதவர்கள் போன்றோருக்கு மட்டுமே கட்சியில் பதவி வழங்கப்படும். இதை விசாரிப்பதற்கு கட்சியில் தனியாக குழு ஒன்று செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Posted by V4Tamil .com on 12:09 AM  No comments »

சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, துர்கை என எண்ணற்ற பெண் தெய்வங்களை வழிபடும் குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில்  வன்முறைக்கு ஆளாகின்றனர். திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது, உணவு கொடுக்காமல் துன்புறுத்துவது, தனி அறையில் அடைத்து வைப்பது,  நடத்தையை மோசமாகச் சித்தரிப்பது, கொலை செய்வது என்று பல்வேறு விதங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நிகழ்த்தப்படுகின்றன. குற்றங்களைச் சந்திக்காத குழந்தையோ, பெண்களோ மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பது வேதனையும் அதிர்ச்சியும்  அளிக்கக்கூடிய விஷயம்.


குழந்தைகளைப் பொறுத்த வரை அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, உறவினர்கள் மற்றும் ஆசிரியர்களால் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இப்படி  வன்முறையால் பாதிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் மனதளவில் மிகவும் காயப்பட்டுப் போகிறார்கள். பிடிவாதம், முரட்டுத்தனம்  வந்துவிடுகிறது. சில குழந்தைகள் மனப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.  15-45 வயதுக்குட்பட்ட பெண்களில் 68 சதவிகிதம் பேர் குடும்ப  வன்முறைக்கு இலக்காவதாக சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது. வீட்டில் உள்ள அம்மா, அப்பா, கணவன், உறவினர்கள் மூலம் இந்த வன்முறை  அரங்கேற்றப்படுகிறது. 

சமையல் சரியில்லை, சொல் பேச்சுக் கேட்பதில்லை, எதிர்த்துப் பேசுதல், வரதட்சணை, சந்தேகம் போன்ற காரணங்களால் திருமணம் ஆன பெண்கள்  கணவன் மூலம் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். அடித்தல், முடியைப் பிடித்து இழுத்தல், பல்லை உடைத்தல், சூடு வைத்தல், கை, கால்களை  முறித்தல் போன்ற உடல்ரீதியான பயங்கரங்களுக்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் மனதளவில்  மிகவும் பலவீனமடைந்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள். 7.5 சதவிகித பெண்கள் தற்கொலை முடிவை  எடுப்பதற்குக் காரணம் குடும்ப வன்முறைதான்.

காயங்களுக்கு அடுத்த மிகப்பெரிய வன்முறை பாலியல் தொடர்பானது. இல்லறம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து, மனம் விரும்பி ஈடுபடுவது  என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. விருப்பமோ, விருப்பமின்மையோ அது தங்களின் உரிமை என்றே நினைக்கிறார்கள். இதனால் மனைவிக்கு  ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிட்டாலும் வற்புறுத்தி, திட்டி, அடித்து, உறவில் ஈடுபடுகிறார்கள். மனமும் உடலும் காயப்பட்ட பெண்கள் மேலும்  விரக்தியடைகிறார்கள். இந்தியாவில் மட்டும் அதிக அளவில் பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவது ஏன்?     

ஒரு பெண்ணை அடிப்பதோ, அரவணைப்பதோ இங்கு ஆணின் உரிமையாக காலம் காலமாக நினைக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு முன்பு அப்பா  அடிக்கலாம்... திருமணத்துக்குப் பின்பு கணவன் அடிக்கலாம். இந்த எண்ணம் ஆண்களுக்கு மட்டுமல்ல... அடி வாங்கும் பெண்களுக்கும் இருப்பதுதான்  மிகப்பெரிய பிரச்னை. படித்த பெண்கள் கூட, கோபம் வரும்போதோ... இல்லை தாங்கள் தவறு செய்யும்போதோ கணவன் அடிப்பது குற்றமில்லை  என்றே கருதுகிறார்கள். இதனாலும், ஆண்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்பதே தெரியாமல் போய் விடுகிறது. கணவனை எதிர்த்து சண்டையிடும்  சில பெண்கள் கூட, புகார் அளிக்க முன்வராதது இன்னொரு ஆபத்தாக பெண்களுக்கும், இன்னொரு பாதுகாப்பாக ஆண்களுக்கும் அமைந்துவிடுகிறது. 

இதனால் குடும்ப வன்முறையில் இறங்குபவர்கள் குற்றவாளியாக சட்டத்துக்கு முன் வருவதில்லை. அப்படியே சிலர் சட்டத்தின் உதவியை  நாடும்போது, நடவடிக்கைகள் எளிதில் எடுக்கப்படுவதில்லை. கணவனுக்காக இன்ப துன்பங்களில் பங்கேற்கலாம்... விட்டுக் கொடுக்கலாம். அதே  வேளையில், பெண் தன்னை எந்த விதத்திலும் தாழ்த்திக்கொள்ளவோ, இரண்டாம்தர பிரஜையாகவோ கருத வேண்டியதில்லை. கணவனை மனைவி  மதிப்பது போல, மனைவியையும் கணவன் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆளும் மனப்பான்மை இருக்கும் ஆண்களிடம்தான் பெண்களை  அடிமைப்படுத்தும் மனப்பான்மை தோன்றும். முதலில் பெண்களாகிய நாம், நம்மை ஆணுக்கு இணையான மனுஷியாக நினைப்போம். நம்  ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்போம். 
Posted by V4Tamil .com on 12:03 AM  No comments »

Wednesday, January 8, 2014


கடந்த 1 வாரமாக தேடப்பட்டு வந்த மராத்திய நடிகை அல்கோ புனேகர் இன்று சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் சிறிய வேடங்களில் நடித்து வருபவர் அல்கா புனேகர்(49). தானே பகுதியில் கணவருடன் வசித்து இவர் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி காணாமல் போனார்.

இது குறித்து அவரது கணவர் சஞ்சய் புனேகர் கோபுரி பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அல்கா நவி மும்பைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 27 ம் திகதி புறப்பட்டு சென்றதாகவும், அங்கிருந்து புனே செல்ல திட்டமிட்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், அல்கா பயணம் செய்த கார் ராய்காட் மாவட்டத்தில் காபோலி பகுதியில் 700 அடி ஆழமான பள்ளத்தாக்கில் உருக்குலைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உருக்குலைந்த காரில் சோதனையிட்டபோது, அல்காவின் கைப்பேசி சிக்கியது.அதில் அவருடன் அலோக் பலிவால் மற்றும் சஞ்சய்குமார் சோன்கர் ஆகியோர் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது.

சஞ்சய்குமார் சோன்கர் அல்காவின் முன்னாள் நண்பர் ஆவார். அவருக்கு பின்பு அலோக் பலிவாவால் என்பவருடன் அல்காவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 24 வயது எம்.பி.ஏ பட்டதாரியான அலோக் பலிவால் மும்பையில் பொறியியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் நடிகை அல்கா கடந்த 1 வருடமாக நெருங்கி பழகி வந்தது விசாரணையில் அம்பலமானது.

மேலும், கணவர் கண்டித்த போதும், அவரது எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவரின் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்ட அல்காவும், அவரது காதலனும் இதற்காக முன்னாள் நண்பர் சஞ்சய் குமார் உதவியை நாடியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கார் விபத்து மற்றும் தானேயில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகம் ஆடியுள்ளார்கள்.

இந்நிலையில் தானேயில் அல்காவின் முன்னாள் நண்பர் சஞ்சய்குமார் பொலிசில் சிக்கினார். அவர் மூலமாக நடிகை அல்கா வையும், காதலனையும் காரில் தப்பிக்க வைத்து நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சஞ்சய்குமாரை கைது செய்த பொலிசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் நடிகை அல்கா, காதலன் அலோக் பலிவாலுடன் தலைமறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தானே பொலிசார் ரகசியமாக சென்னை சென்று நடிகை அல்காவையும், அவரது காதலரையும் கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து அவர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திய பொலிசார் ‘நடிகை அல்கா உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதி. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளனர்.

Posted by V4Tamil .com on 11:30 PM in    No comments »
வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் சபை அமர்வு இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி வீழ்ந்தார்.


அவைத்தலைவர் அவைக்கு வருகை தரும் போதும் வெளியேறும் போதும் அவருக்கு முன்னே செங்கோலுடன் வருகை தரும் படைக்கலச்சேவிதர் சபை நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி வீழ்ந்தார். தொடர்ந்து, வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவப்பிரகாசம் சிவமோகன் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

இவருக்கு பதிலாக பிரதிப்படைக்கலச்சேவிதர் பொறுப்புக்களை ஏற்றதுடன் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. 
Posted by V4Tamil .com on 10:59 PM  No comments »
களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போனவர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டிக்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இறங்கினார் ஓவியா.



ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப்பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் கமர்சியல் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மதயானைககூட்டம் படத்தில் நடித்த அவர் தற்போது புலிவால் என்ற படத்துக்காக மறுபடியும் கவர்ச்சி அரிதாரம் பூசியிருக்கிறார்.

கலகலப்பு படத்தில் நடித்தபோது இருந்ததைவிட, தற்போது தனது உடம்பில் பூசினாற் போன்று சதை போட்டிருக்கும் ஓவியா, புலிவால் படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக கவர்ச்சியான உடைதரித்து கலக்கல் நடனமாடியிருக்கிறார்.

இதேபடத்தில் இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அனன்யாவை தனது கவர்ச்சியால் ஓரங்கட்டியிருப்பவர், இதன்பிறகு அதிரடி கிளாமர் ஹீரோயினாக மாறவும் முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்.அதனால், கமர்சியல் டைரக்டர்களாக தேடிப்பிடித்து படவேட்டையை தொடங்கியிருக்கிறாராம் ஓவியா.
Posted by V4Tamil .com on 10:51 PM  No comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டவான் அடர்ந்த காட்டுப்பகுதியில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது பாரியளவில செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சாசேனை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தெரிவித்தார்.

சோளம் செய்கைக்கு மத்தியில் பெரும் பாதுகாப்பான முறையில் அடர்ந்த யானைக்காட்டுப்பகுதியில் இக்கஞ்சாசேனை செய்கை பண்ணபபட்டிருந்தது.மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் பணிப்புரையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காட்டில் செய்கை பண்ணப்பட்ட மூன்று அடி உயரமான 70 கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு மரத்திலிருந்து 1 கிலோ கஞ்சாவை அறுவடை செய்யமுடியும். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாமரங்கள் இன்று மட்டக்களப்பு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் நேற்று மாலை வரை இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 10:51 PM in    No comments »

விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29 ஆம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Posted by V4Tamil .com on 10:37 PM  No comments »
நீண்ட இடைவேளைக்கு பின்னர் சிம்பு மீண்டும் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இந்த படத்தை சிம்புவின் குடும்ப நிறுவனம்தான் தயாரிக்கிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுக ஆகிறார்.



சிம்பு, நயன் தாரா இருவரும் இணைந்து ஏழு வருடங்களுக்கு முன் வல்லவன் என்ற படத்தில்தான் கடைசியாக நடித்தனர். அதன்பின்னர் அவர்களுடைய வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.


பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் நடந்தது. நயன் தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. சிம்புவுக்கு நேற்று காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தயாரிப்பாளர் என்ற முறையில் படப்பிடிப்புக்கு வந்திருந்தாராம். இதனால் நயன் தாராவுக்கு டென்ஷன் எகிறியுள்ளது.


உடனே இயக்குனர் பாண்டிராஜை கூப்பிட்டு படப்பிடிப்புக்கு சம்மந்தம் இல்லாதவர்களை முதலில் வெளியேற்றுங்கள். அப்போதுதான் படப்பிடிப்பு நடக்கும், அல்லது நான் வெளியேற வேண்டியநிலை இருக்கும் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நான் படத்தின் தயாரிப்பாளர் நான் ஏன் வெளியேற வேண்டும் என சிம்புவும் பதிலுக்கு எகிற பிரச்சனை பெரிதாவதை கண்டு டி.ராஜேந்தருக்கு போன் செய்துள்ளார் பாண்டிராஜ். அதன்பின்னர் சிம்பு வெளியேற படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததாம். இந்த சம்பவம் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted by V4Tamil .com on 10:37 PM in    No comments »
தனது 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தனது 50வது பிறந்தநாளை வரும் 17ம் தேதி கொண்டாடுகிறார். ஆனால் அவரின் பிறந்தநாள் பார்ட்டி வரும் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது. பிறந்தநாளையொட்டி ஒபாமா தனது மனைவிக்கு ஒரு பரிசை அளித்துள்ளார்.





ஒபாமா தனது மனைவி மிஷல் மற்றும் மகள்கள் மாலியா(15), ஷாஷா(12) ஆகியோருடன் ஹவாயில் விடுமுறையை கழிக்கச் சென்றார். அவர் மகள்களை அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட்டார். ஆனால் மிஷல் கணவரின் பிறந்தநாள் பரிசாக கூடுதல் நாட்கள் ஹவாயில் இருந்துவிட்டு வரவிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் வரும் 18ம் தேதி நடக்கும் தன்னுடைய 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு மிஷல் சிலருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பில் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.


பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு, சவுகரியமான ஷூக்கள் அணிந்து, நடன அசைவுகளை ஒத்திகை பார்த்துவிட்டு வருமாறு மிஷல் விருந்தாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விருந்தில் சாப்பாடு வழங்கப்படாதாம். இந்த நிபந்தனைகள் பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது.


மிஷல் யார், யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் ஹிப் ஹாப் கலைஞர் ஜே ஜி மற்றும் அவரது மனைவியும், பாப் பாடகியுமான பியான்ஸே நோலஸ் ஆகியோரும் நிச்சயம் விருந்துக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Posted by V4Tamil .com on 10:32 PM  No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search