• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Tuesday, December 31, 2013

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலிஸ் நேற்று முன்தினம் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற இந்திய சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 tendulதெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நம்ப முடியாத அளவுக்கு விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ள காலிசுக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாட்டை சரியான உத்வேகத்துடன் விளையாடி உள்ளீர்கள்.


உங்களுக்கு எதிராக நான் விளையாடிய நாட்கள் மகிழ்ச்சிகரமானது. காலிஸ் நீங்கள் உண்மையான ஒரு சாம்பியன். கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னரான வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமானது அல்ல' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காற்றும் நீரும் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படித்தான் ஹீரோயின்கள் இல்லாத சினிமாவையும் கற்பனை செய்ய முடியாது. என்னதான் ஹீரோயின்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும் அந்த அழகிகள் உலவாவிட்டால் சினிமா வறண்டு போய்விடும். 2013ம் ஆண்டு தன் அழகால் சினிமாவை அழகாக்கிய அழகிகள் பற்றி பார்க்கலாம்.


ஹன்சிகா: சிம்புவுடன் காதல், பின்பு பரிவு, ஆந்திரத்து ஹீரோவுடன் புது காதல், அம்மாவுடன் கருத்து வேறுபாடு என ஆயிரம் கிசுகிசுவில் சிக்கினாலும் ஹன்சிகா தன் படங்களில் தீவிரம் கவனம் செலுத்தினார். அதனால் இந்த ஆண்டு சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி என 4 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதில் சேட்டை தவிர மற்ற அனைத்தும் அவருக்கு வெற்றிப் படங்கள்தான்.


Top Tamil Actress 2013


அனுஷ்கா: ஆறடி அனுஷ்காவுக்கு இந்த ஆண்டு அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் என மூன்று படங்கள். அவரைப் பொறுத்தவரை மூன்றுமே சரியாக அமையவில்லை. அலெக்ஸ் பாண்டியன் பிளாப், இரண்டாம் உலகம் பட்ட கஷ்டமெல்லாம் பாழாய்ப்போன படம். சிங்கம் 2 ஹிட்டானாலும் அவரது கேரக்டர் பேசப்படவில்லை.


tamil_actress_2013_v4t (3)


நயன்தாரா: நயன் நடிச்சது இரண்டே படம்தான். இரண்டுமே ஹிட்டு, அவர் காட்டில் பெய்தது துட்டு மழை. ராஜாராணியில் ரொமான்ஸ், ஆரம்பத்தில் ஆக்ஷன் கிளாமர்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடினார்.


tamil_actress_2013_v4t (6)


நஸ்ரியா: நேரம் படத்தின் மூலம் வந்த நல்ல நேரம் நஸ்ரியாவுக்கு எல்லாமே ஜெயம்தான். ராஜாராணியில் இமேஜ் எகிற நய்யாண்டியில் கொஞ்சம் இறங்கியது. சின்ன தொப்புள் பிரச்சினையை பெருசாக்க இண்டஸ்ட்ரி அவரை பார்த்து பயந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.


Top Tamil Actress 2013


த்ரிஷா: சினிமாவுக்கு வந்து பத்து வருஷமானலும் இப்பவும் பிரிஜ்லேருந்து எடுத்த ஆப்பிள் மாதிரிதான் இருக்கிறார். சமர் கைவிட்டது. என்றென்றும் புன்னகை அவருக்கு புன்னகையை கொடுத்தது.


tamil_actress_2013_v4t (9)


லட்சுமி மேனன்: இன்றைய தேதிக்கு ராசியான நடிகையா இருக்கிறவர் இவர். லட்சுமியின் தேதிக்காக பணப்பையுடன் வீட்டு வாசலில் ரேஷன் கடை கியூதான். இந்த ஆண்டு நடித்த குட்டிப்புலி, பாண்டியநாடு இரண்டுமே லட்சுமியிடம் லட்சுமியை குவித்தது.


tamil_actress_2013_v4t (5)


டாப்ஸி: வெள்ளாவி பொண்ணுக்கு இந்த வரும் இரண்டு படங்கள்தான் கிடைத்தது. இரண்டிலுமே இணை ஹீரோயின்தான். ஆரம்பம், மறந்தேன் மன்னித்தேன். டாப்ஸி டாப்புக்கு வர இன்னும் கடுமையா உழைக்கணும்.


tamil_actress_2013_v4t (1)


ப்ரியா ஆனந்த்: எதிர்நீச்சல் நல்ல இடத்தை கொடுத்துது. வணக்கம் சென்னையில் அதை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டார்.


tamil_actress_2013_v4t (8)


பிந்து மாதவி: கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா ஹிட்டாக பிந்து பிசியாகிவிட்டார். இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ஹிட்டாக வருத்தப்படாத நடிகைகள் சங்கத்தில் இணைந்து விட்டார்.


tamil_actress_2013_v4t (2)

இன்றுடன் முடியும் 2013 சிறந்த காமெடி நடிகனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் பரோட்டா சூரி. கடந்த ஆண்டு நகைச்சுவை உலகை கட்டுக்குள் வைத்திருந்த நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி, தனது பிரத்தியேக நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவரை கவிழ்பதற்கு சதி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


Parotta-Soori


சமீபகாலமாக சில படங்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக ரஜினி போன்ற சில மெகா நடிகர்களிடம் அப்படங்களைப்பற்றி கமெண்ட் வாங்கி அதை விளம்பரம் செய்கின்றனர்.


அதேபோல், விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்திற்கும் ரஜினியிடம் கருத்து கேட்டனர். இதற்கு வித்தியாசமான ஆக்சன் படம் என்று கருத்து சொல்லியிருந்தார்.


அதை அப்படத்தின் விளம்பரங்களில் பயன்படுத்தியிருந்தனர். இந்த சமயத்தில், காமெடி நடிகர் சூரியின் டுவிட்டரில், சிலர் மொக்கைப் படங்களையெல்லாம் பிரபலங்களை பார்க்க வைத்து, அவர்களிடம் ஆகா ஓகோவென்று அப்படங்களை பேச வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.


அதனால் அதை நம்பி தியேட்டர் பக்கம் போகாதீர்கள் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்ததாம். அவர், இவன் வேற மாதிரி படத்தைப்பற்றி ரஜினி சென்னதைதான் அப்படி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.


ஆனால், சூரிதரப்பு இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம், சூரி தன் பெயரில் டுவிட்டர் கணக்கே இதுவரை தொடங்கவில்லையாம். அதை பயன்படுத்த அவருக்கு நேரம்கூட இல்லையாம். அப்படியிருக்க வேறு யாரோதான் தன் பெயரில் இப்படி டுவிட்டர் ஆரம்பித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என்கிறார்கள்.


அதுவும் இப்போது நான் மார்க்கெட்டில் பிசியாக இருப்பதால் என் வளர்ச்சிக்கு ஏதாவது வகையில் சதி செய்ய வேண்டும் என்பதற்காக யாரோ விஷமிகள்தான் இப்படி அவதூறு பரப்பி என் பெயரை டேமேஜ் செய்துள்ளனர் என்று தன் நிலையை விளக்கியுள்ளார் சூரி.

இன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்தாண்டு வெளியான படங்களின் பட்டியல் இதோ ஒரே பார்வையில்....

1.அன்னக்கொடி
2.அலெக்ஸ் பாண்டியன்
3.அடுத்த கட்டம்
4.அறிந்தும் அறியாதவன்
5.அன்பா அழகா
6.அப்பாவுக்கு கல்யாணம்
7.ஆரம்பம்
8.ஆதி பகவன்
9.ஆண்டவ பெருமாள்
10.அழகன் அழகி
11.ஆதலால் காதல் செய்வீர்
12.ஆர்யா சூர்யா
13.அஞ்சல்துறை
14.ஆல் இன் ஆல் அழகுராஜா
15.ஆப்பிள் பெண்ணே
16.பட்டத்து யானை
17.புல்லுக்கட்டு முத்தம்மா
18.பீட்சா 2 வில்லா
19.பிரியாணி
20.சோக்காலி
21.சொன்னா புரியாது
22.சுட்டகதை
23.தீயா வேலை செய்யணும் குமாரு
24.தீக்குளிக்கும் பச்சை மரம்
25.தேசிங்கு ராஜா
26.தங்க மீன்கள்
27.தலைமுறைகள்
28.இசக்கி
29.இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
30.இங்கு காதல் கற்றுத் தரப்படும்
31.இரண்டாம் உலகம்
32.இவன் வேற மாதிரி
33.என்னாச்சு
34.கல்லாப்பெட்டி
35.குட்டிப்புலி
36.காதலே என்னை காதலி
37.கயவன்
38.கல்யாண சமையல் சாதம்
39.கோலாகலம்
40.மாசாணி
41.மெய்யழகி
42.மரியான்
43.முத்து நகரம்
44.நடிகையின் டயரி
45.நிலா மீது காதல்
46.நய்யாண்டி
47.நிர்ணயம்
48.நுகம்
49.நான்காம் தமிழன்
50.பொன்மாலைபொழுது
51.பேசாமல் பேசினால்
52.சுண்டாட்டம்
53.பதவி மதில்மேல் பூனை
54.கீரிப்புள்ள
55.பரதேசி
56.கருட பார்வை
57.கந்தா
58.நானும் என் ஜமுனாவும்
59.மறந்தேன் மன்னித்தேன்
60.கருப்பம்பட்டி
61.கண்பேசும் வார்த்தைகள்
62.மாடபுரம்
63.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
64.நேரம்
65.நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ
66.எதிர்நீச்சல்
67.மூன்று பேர் மூன்று காதல்
68.மனிதனாக இரு
69.ஒருவர் மீது இருவர் சாய்ந்து
70.யாருடா மகேஷ
71.நான் ராஜாவாக போகிறேன்
72.ரெஜினா
73.இரு கில்லாடிகள்
74.உதயம் என்.எச் 4
75.திருமதி தமிழ்
76.சிக்கி முக்கி
77.உனக்கு 20 எனக்கு 40
78.நினைவுகள் அழிவதில்லை
79.மறு விசாரணை
80. 4
81.சேட்டை
82.சூதுகவ்வும்
83.மாமன் மச்சான்
84.கேடி பில்லா கில்லாடி ரங்கா
85.பிப்ரவரி 31
86.விஸ்வரூபம்
87.வனயுத்தம்
88.ஜில்லுனு ஒரு சந்திப்பு
89.மவுன விழிகள்
90.நேசம் நெசப்படுதே
91.ஹரிதாஸ்
92.நான்காம் பிறை
93.சுடச்சுட
94.வெள்ளச்சி
95.சந்தமாமா
96.ஒன்துல குரு
97.லொள்ளு தாதா பராக் பராக்
98.மயில்பாறை
99.புதுமுகங்கள் தேவை
100.நண்பர்கள் கவனத்திற்கு
101.கனவு காதலன்
102.குறும்புக்கார பசங்க
103.கள்ளத்துப்பாக்கி
104.சமர்
105.புத்தகம்
106.டேவிட்
107.கடல்
108.காதல் வலி
109.பத்தாயிரம் கோடி
110.விஜயநகரம்
111.கண்ணா லட்டு தின்ன ஆசையா
112.யமுனா
113.சொல்ல மாட்டேன்
114.தில்லுமுல்லு
115.சிங்கம்&2
116.மரியான்
117.சத்திரம் பேருந்து நிலையம்
118.களியாட்டம்
119.நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
120.ஞாபகங்கள் தாலாட்டும்
121.தலைவா
122. 555
123.சுவடுகள்
124.சும்மா நச்சுன்னு இருக்கு
125.ரகளபுரம்
126.சித்திரையில் நிலாச்சோறு
127.வணக்கம் சென்னை
128.நினைவுகள் உன்னோடு
129.ராஜாராணி
130.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
131.யா யா
132. 6 மெழுகுவர்த்திகள்
133.மத்தாப்பூ
134.மூடர்கூடம்
135.உன்னோடு ஒரு நாள்
136.வருத்தப்படாத வாலிபர் சங்கம்
137.முத்து நகரம்
138.பாண்டியநாடு
139.ராவண தேசம்
140.விடியும் முன்
141.ஜன்னல் ஓரம்
142.நவீன சரஸ்வதி சபதம்
143.வெள்ளை
144.தகராறு
145.ஈகோ
146. 3டி
147.என்றென்றும் புன்னகை
148.விழா
149.மதயானைக்கூட்டம்
150.புவனக்காடு
151.சந்தித்ததும் சிந்தித்ததும்
152.சென்னையில் ஒரு நாள்
Posted by V4Tamil .com on 2:31 PM in , ,    No comments »

பேண்டஸியான கதைகளாக இயக்கி வந்தவர்கள்கூட சமீபகாலமாக சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளனர்.


அந்த வகையில், நான் ஈ என்ற படத்தை இயக்கிய தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலி இப்போது பாகுபாலி என்ற 16 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த சரித்திர கதையை படமாக்கி வருகிறார். பிரபாஸ்-அனுஷ்கா, தமன்னா நடிக்கிறார்கள்.


அவரைத் தொடர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரும் ஒரு சரித்திர படத்தை இயக்குகிறாராம். தற்போது விக்ரம்-எமிஜாக்சனை வைத்து ஐ என்ற படத்தை இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து மலையாள நடிகர் மம்முட்டியை பிரதான கதாபாத்திரமாக வைத்து அந்த படத்தை இயக்குகிறாராம்.


புராணக்கதைகளில் ஷங்கரை அதிகம் பாதித்த கதாபாத்திரம் கர்ணனாம். அதனால் கர்ணனை மையமாக வைத்து ஒரு சரித்திர கதையை தயார் பண்ணி விட்ட அவர், அதில் கர்ணனாக நடிக்க பொருத்தமான நடிகர் யார் என்று பரிசீலனை செய்தபோது மம்முட்டிதான் மனக்கண்ணில் வந்து நின்றாராம்.


ஏற்கனவே பழஸிராஜாவில் மம்முட்டியின் பிரமாதமான நடிப்பை பார்த்த ஷங்கர், இன்றைய நிலையில் கர்ணன் கதாபாத்திரத்திற்கு மம்முட்டியை தவிர சிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது என்றும் கருதி, அவரிடம் பேசி வைத்துள்ளாராம். ஆக, மோகன்லாலைத் தொடர்ந்து மம்முட்டியும் தமிழில் அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகி வருகிறார்.

சிட்டி சப்ஜெக்டுகளில் என்னதான் தூசு படியாமல் நடித்தாலும், கிராமத்து கதை என்று வருகிறபோது சேற்றுக்குள் உருண்டு புரள்கிற மாதிரியான காட்சிகளும் இருக்கும். ஆரம்பம் படம் வரை ஜீன்ஸ்-டீசர்ட் என்று நடித்துக்கொண்டிருந்த அஜீத், வீரம் படத்தில் வேஷ்டி-சட்டைக்கு மாறியுள்ளார். ஐந்து அண்ணன்-தம்பிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.


இரண்டு குடும்பத்திற்கிடையே நடைபெறும் பிரச்னை என்பதால், முதலில் பாசமிகு அண்ணனாக நடித்துள்ள அஜீத், பின்னர் குடும்பத்துக்காக ஆக்ஷன் கோதாவில் குதிக்கிறாராம். மேலும், தமன்னாவை வாய்க்கால் வரப்புகளில் துள்ளிக்குதித்து காதலிக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளதாம்.


மேலும், ஒரு சண்டை காட்சியில் மாட்டு வண்டியில் தப்பித்து செல்லும் வில்லன்களை, தானும் ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்தே துரத்தி துரத்தி சண்டை செய்யும் காட்சியிலும் நடித்துள்ளாராம் அஜீத்.


சில நாட்களாக இந்த காட்சியை படமாக்கி முடித்த பிறகு, அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டதாம். அஜீத் சார்பிலேயே இந்த விருந்து நடத்தப்பட்டதால் அவரே கிராம மக்களுக்கு உணவு பரிமாறினாராம்.

Posted by V4Tamil .com on 2:10 PM in , ,    No comments »

ஆசியா அறிவியல் என்பதில் மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளது எனலாம், இன்று வெளிநாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் ஆசிய நாட்டை சார்ந்தவர்கள் தான். ஆனால் இன்று பல்வேறான மக்கள் அறிவியலை தவறாக புரிந்து கொண்டிருகிறார்கள். அதாவது சில இயற்கையான விஷயங்களை தான் சொல்கிறேன் .ரெக்னாலஜியும் அறிவியலும் ஒன்றுதான் அறிவியலின் உதவியுடன் தான் ரெக்னாலஜி இயங்கிக் கொண்டிருகிறது. ஏனெனில் அறிவியலையும் ரெக்னாலஜியையும் சரியாக புரிந்து கொள்வது என்பது இன்றியமையாதது. இப்பொழுது அறிவியலில் நாம் தவறாக புரிந்து கொண்ட சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போமா.

வைரம் வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.09-1386573796-d1


வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.


09-1386573794-b4


எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.09-1386573797-e3
சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.09-1386573801-water2மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.09-1386574184-p5


தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.09-1386573799-o6


மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

09-1386573795-b7

Posted by V4Tamil .com on 7:00 AM in ,    No comments »

விண்வெளியிலிருந்து பூமியை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா? உங்களது ஆர்வத்தை தீர்த்து வைக்க அமெரிக்க நிறுவனமொன்று தயாராகியுள்ளது.



விண்வெளியிலிருந்து புவியின் வடிவத்தினையும் சில நிமிடங்களுக்கு பூச்சிய நிறை நிலையை அனுபவிக்கும் நோக்கில் இச்சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணத்தில் சூப் விருந்தும் நட்சத்திரங்களுடன் ஸெல்பீ படங்களும் எடுக்கக்கூடியதாக இருக்கும்.


இதனை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைத் தளமாகக்கொண்ட வேர்ல்ட் வீவ் என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ளது.





புவியின் மேற்பரப்பிலிருந்து 19 மைல் தொலைவுக்கு ஹீலியம் வாயு பலூனில் 8 பேரை அழைத்துச் செல்ல இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது. இப்பயணம் தொடர்பில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.


விண்வெளியிலிருந்து எமது கிரகத்தின் ஆச்சரியங்களை ரசிக்கும் இச்சுற்றுலாவிற்கான கட்டணம்தான் தலையைசுற்ற வைக்கிறது. சுமார் எட்டரை மணிநேர பலூன் பயணத்துக்கு 75,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபா)  மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.


இச்சுற்றுலாவுக்கு 40 மில்லியன் கன மீற்றர் ஹீலியம் பலூன் பயன்படுத்தப்படவுள்ளது. அதாவது ஒரு கால்பந்தட்ட மைதானத்தின் அளவினை ஒத்தது. விமானமொன்றுடன் இணைத்து இந்த பலூன் நியூ மெக்ஸிகோ பாலைவனத்திலுள்ள சேர் ரிச்சர்ட் ப்ரன்ஸன்ஸ் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து மேலெழும்பவுள்ளது.




இச்சுற்றுலா குறித்து பயணத்தை ஏற்பாடு செய்துள்ள குறித்த நிறுவத்தில் நிறைவேற்று அதிகாரி ஜேன் பொய்ன்டர் கூறுகையில், 'சில மணி நேரங்களுக்கு விண்வெளியிலிருந்து புவினைக் காணும் அனுபவத்தினை மக்களுக்கு கொடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


'இப்பயணத்தில் 6 பயணிகளும் 2 பணியாளர்களும் பயணிக்கவுள்ளனா. புவியின் எல்லையை அடைய ஒன்றரை மணி நேரமாகும். பயணிகள் இரண்டரை மணிநேரம் பூமிக்கு மேல் மிதக்கலாம். பின்னர் 20-40 நிமிடத்தில் தரை இறங்கலாம். இதற்கு பயணிகளுக்கு எதுவிதமான பயிற்சிகளும் தேவையில்லை. பாதுகாப்பானது.' என்கிறார் பொய்ன்டர்.


உயர்தர சொகுசான அனுபவமாக இதனை நினைக்கலாம் என தெரிவித்துள்ளார் பொய்ன்டரின் கணவரும் நாஸாவின் பாதுகாப்பு பொறிமுறை வடிவமைப்பாளராக இருந்த டபெர் மெக்கலம். இந்த தம்பதியினர் செவ்வாயில் மனித வாழ்க்கை குறித்து அரிசோனாவில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங்கை மும்பையில் நடத்தினார். படம் ஹிட்டானதை தொடர்ந்து விஜய் நடித்த தலைவா பட ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது. அதேபோல் அஜீத் நடித்த ஆரம்பம் படமும் மும்பையில் படமாக்கப்பட்டது. இதையடுத்து பல கோலிவுட் படங்களுக்கு மும்பை பிரதான லொகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது.


தற்போது ஜில்லா படத்தில் நடித்து வரும் விஜய் இப்படத்தையடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால் ஷூட்டிங் லொகேஷனை கொல்கத்தாவுக்கு மாற்றி இருக்கிறார். ஸ்கிரிப்ட்டை ஒரு பக்கம் மெருகேற்றிக் கொண்டிருக்கும் முருகதாஸ், தனது உதவி இயக்குனர்களுடன் கொல்கத்தா சென்று ஷூட்டிங்கை நடத்துவதற்கான பிரதான இடங்களை தேர்வு செய்து வருகின்றார். இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்

tamil-movies-jayam-ravi-nayanthara-movie-pooja-photos01

போலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதற்கான பயிற்சி பெறுகிறார். அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்த நயன்தாரா அப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படத்துக்கு பிறகு சாஃப்டான வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்குகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்கிறார். இதற்காக உடலை ஸ்லிம் தோற்றத்துக்கு மாற்றுவதுடன் சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக பயிற்சி பெறுகிறார்.


இதற்கான போலீஸ் டிரெயினிங்கை சிறப்பு பயிற்சியாளர் மூலம் பெறுகிறார். நயன்தாரா வேடம் பற்றி இயக்குனர் ராஜாவிடம் கேட்டபோது, என்னுடைய படங்களில் ஹீரோயின்களுக்கு எப்போதுமே வலுவான வேடமாக இருக்கும். இப்படத்திலும் அதுபோல் ஒரு வலுவான கதாபாத்திரத்தில்தான் நயன்தாரா நடிக்க உள்ளார். ஏற்கும் கதாபாத்திரத்துக்கு அவர் எப்போதும் பொருத்தமான நடிப்பை வெளியிடுவார்.


அதை இந்த படத்திலும எதிர்பார்க்கலாம்‘ என்றார். போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா என்றதற்கு வேடம் பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்று மறுத்துவிட்டார் ராஜா. இந்த படத்துக்காக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரயில் செட் போடப்பட்டுள்ளது. இந்த ரயிலில் படமாக்க வேண்டிய காட்சிகளை ராஜா இயக்கி வருகிறார்.


கண்டறிந்த ஆண்டு: 1801 ஆகும். அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமருந்துகண்டுபிடிக்கப்பட்டதாலேயே பல உயிர்களை மருத்துவரீதியாகக் காப்பாற்ற முடிந்தது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அத்தகைய மயக்க மருந்து எவ்விதம் யாரால் கண்டறியப்பட்டது என்று காணலாம்.


26.4-Humphry-Davy


1846ல், Oliver Wendell Holmes என்பவரால்


உணர்ச்சியற்ற எனும் பொருள் தரும் அனஸ்தீசியா எனும் கிரேக்க மொழிச் சொல் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்த மயக்க மருந்து முறை என்பது பல மருத்துவர்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பே செயல்பாட்டில் இருந்து வந்தது தான். முற்கால சீன மருத்துவர்கள் மூளைக்குச் செய்தி அனுப்பும் நரம்புகளை அக்குபஞ்சர் ஊசிகளின் மூலம் நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சையின் போது வலியேற்படாமல் தவிர்த்திருக்கின்றனர். ரோமானிய மற்றும் எகிப்திய மருத்துவர்கள் மாண்ட்ரகோரா எனும் செடியின் வேரை (மான்ட்ரேக்) பயன்படுத்தி நோயாளிகளை மயக்கமுறச் செய்திருக்கின்றனர். கோக்கோ இலைகளைக் கடித்து மென்று அதன் சாறைப் புண்களின் மீது துப்பி அதன் மூலம் வலியைக் குறைக்கச் செய்ததும் உண்டு.


19ம் நூற்றாண்டில் மூன்று வெவ்வேறு அறிவியலாளர்கள் நவீன அனஸ்தீசிய முறையைக் கண்டறிந்ததாகக் கூறினாலும், அதற்கு முன்பே ஹம்ஃப்ரி டேவி இம்முறையைக் கண்டறிந்து விட்டார்.


ஸ்காட்லாந்தில் சர் யங் சிம்ப்சன் க்ளோரோபார்ம் எனப்படும் மருந்தை பஞ்சில் முக்கி அதை நுகரச் செய்வதன் மூலம் மயக்க நிலையை எட்டச் செய்யும் முறையைக் கண்டறிந்தார். 1838ல் விக்டோரியா ராணி தனது ஏழாவது குழந்தையைப் பிரசவிக்கும் போது க்ளோரோபார்மைப் பயன்படுத்தும் வரை அந்த முறை பிரபலமடைந்திருக்கவில்லை. அதன்பின்னர் க்ளோரோபார்ம் வரலாற்றில் பல போர்களில் முக்கியமாக அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


ஜார்ஜிய மருத்துவர் க்ராஃபோர்ட் லாங் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நீதிபதியின் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சையின் போது ஈதரைப் பயன்படுத்திச் சிறப்பாக அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார். அந்த நீதிபதி எந்த ஒரு வலியையும் உணர முடியவில்லை. 1842ல் இதைச் செய்த லாங் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாண்டுகள் கழித்து பாஸ்டனில் வெல் எனும் பல்மருத்துவர் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைப்பதை அறிந்து கொண்டார். ஆனாலும் அவர் அறுவைசிகிச்சையின் போது ஈதரைச் செலுத்தும் அளவைக் குறைத்ததால் விரைவிலேயே வலியால் நோயாளி துடித்து விட்டார்.


1845ல் போஸ்டனின் இன்னுமொரு பல்மருத்துவர் வில்லியம் மார்ட்டன் மீண்டும் ஈதரைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையைச் செம்மையாகச் செய்து முடித்தார். அவரது மயக்கமருந்தாக ஈதரைப் பயன்படுத்தும் முயற்சி குறித்த கட்டுரைகளே பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள் பலரும் ஈதரை முதன்மையான மயக்கமருந்தாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.


இவ்வாறு மூவர் மயக்கமருந்து குறித்துக் கண்டறிந்திருந்தாலும், ஹம்ஃப்ரி டேவி 1801 லேயே நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கலந்து நைட்ரஸ் ஆக்சைடைக் கண்டறிந்து அதற்கு சிரிப்பூட்டும் வாயு என்று பெயரும் இட்டார். அதிகமாக அதை உட்கொண்டால் மயக்கமும் நேரிட்டதைக் கண்டறிந்த அவர், அதனை மருத்துவமனைகளில் நோயாளிகளின் வலியைக் குறைக்கப்பயன்படுத்தலாம் என்று குறிப்பும் எழுதி வைத்தார்.


யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட டேவி தான் முதன்முதலில் நவீன மயக்கமருந்து குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பதே உண்மை.

இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.


Tamil-Daily-News_57846796513

டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 334 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. விஜய் 97, புஜாரா 60, கோஹ்லி 46, ரகானே 51* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஸ்டெய்ன் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 500 ரன் குவித்தது. கடைசி டெஸ்டில் களமிறங்கிய காலிஸ் 115 ரன் விளாசினார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 6 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 166 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்திருந்தது.

புஜாரா 32, கோஹ்லி 11 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்டெயின் வீசிய முதல் பந்திலேயே கோஹ்லி விக்கெட் கீப்பரிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். பந்து கோஹ்லியின் மட்டையில் படாமல் தோள்பட்டையில் உரசி சென்ற நிலையில், நடுவரின் தவறான கணிப்பால் இந்தியா முக்கியமான விக்கெட்டை இழந்தது. அடுத்து புஜாராவும் மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் ஸ்டெயினின் துல்லியமான வேகத்தில் கிளீன் போல்டாக இந்திய அணி தடுமாறியது. ரோகித் 25 ரன் எடுத்து பிலேண்டர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

ரகானே - கேப்டன் டோனி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. டோனி 15 ரன் எடுத்து ராபின் பீட்டர்சன் சுழலில் அல்விரோ வசம் பிடிபட்டார். அதே ஓவரிலேயே ஜடேஜா (8) தேவையில்லாமல் 2வது சிக்சர் விளாச ஆசைப்பட்டு விக்கெட்டை தானம் செய்ய, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஜாகீர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாக்குப்பிடித்து 41 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன் எடுத்தார். ரகானே - ஜாகீர் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.
இஷாந்த் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி விக்கெட்டுக்கு முகமது ஷமி கம்பெனி கொடுக்க, சதத்தை நெருங்கினார் ரகானே. எனினும், பிலேண்டரின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை பூர்த்தி செய்ய நினைத்த அவர் 96 ரன் எடுத்த நிலையில் (157 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டம்புகள் சிதற பரிதாபமாக அவுட் ஆனார். இந்தியா 2வது இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஷமி (1) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டெய்ன், பிலேண்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 11.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 59 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ரோகித் பந்தில் தொடர்ச்சியாக சிக்சர், பவுண்டரி விளாசி வெற்றியை வசப்படுத்தினார் தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித். அல்விரோ பீட்டர்சன் 31, ஸ்மித் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டர்பன் டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஸ்டெய்ன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். டிவில்லியர்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஸ்டெய்ன் 350

*தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் தனது 350வது விக்கெட்டை நேற்று கைப்பற்றினார். இஷாந்த் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் இந்த சாதனை மைல் கல்லை எட்டினார்.

*நடுவர்களில் சில தவறான முடிவுகள் இந்திய அணிக்கு நேற்று பெரும் பின்னடைவை கொடுத்தன. டிஆர்எஸ் முறையை கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் இனியாவது தனது பிடிவாத போக்கை கைவிடுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

*இந்த போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்ற ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை, தென் ஆப்ரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித் மற்றும் மார்னி மார்கெல் இருவரும் தங்கள் தோள்களில் சுமந்தபடி கிங்ஸ்மீட் மைதானத்தை வலம் வந்தனர்.

*தென் ஆப்ரிக்க மண்ணில் இந்தியா 5வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. வெளிநாட்டு மைதானங்களில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்டில், இந்திய அணி 9வது தோல்வியை சந்தித்துள்ளது.

9726ce29-1f88-4b6f-a9f9-86fe9ca2eccd_S_secvpf

மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.


அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீனா மாலிக் வந்திருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தேன். இதில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.


பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நாங்கள் ஆரே பகுதியில் ஆடம்பர குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். மேலும் வீனாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தேன்.


இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி வீனாவிற்கு துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி விசாரிக்க வீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், இனிமேல் என் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்றும், தொடர்ந்து ஏதேனும் தொந்தரவு செய்தால் மானபங்கம் அல்லது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடருவேன் என்று மிரட்டினார். மேலும் என் தாயாருக்கு போன் செய்து அவரையும் மிரட்டினார். இவ்வாறு தொழில் அதிபர் பிரசான்த் பிரதாப் சிங் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீனா மாலிக் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மின் உதி­ரிப்­பாகம் மற்றும் கைய­டக்க தொலை­பேசி ஆகிய துறை­களில் புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நாட்டின் முன்­னிலை மின் உதி­ரிப்­பாக நிறு­வ­ன­மான ஒரெஞ்ச் முதற்­த­ட­வை­யாக அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­களை உள்­ள­டக்­கிய கைய­டக்க தொலை­பே­சி­களை சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.


2


ஹொங்­கொங்கில் அமைந்­துள்ள டெலி டோக் நிறு­வ­னத்­துடன் இணைந்து ஒரெஞ்ச் நிறு­வனம் இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ள­துடன் அதற்­கான வைபவம் கொழும்பு கல­தாரி ஹோட்­டலில் அண்­மையில் நடை­பெற்­றது.


“ எமது நிறு­வனம்் டெலி டோக் நிறு­வ­னத்­துடன் இணைந்து கைய­டக்க தொலை­பே­சி­களை மாத்­தி­ர­மன்றி மின் உதி­ரிப்­பா­கங்­க­ளையும் எதிர்­கா­லத்தில் உற்­பத்தி செய்யும். கைய­டக்க தொலை­பேசி, மின் உதி­ரிப்­பாகம் ஆகிய இரண்டு துறை­க­ளையும் ஒரே துறை­யாக மாற்­று­வதே எமது நோக்கம்” என ஒரெல் கோப்­ப­ரேஷன் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் குஷான் கொடி­து­வக்கு தெரி­வித்தார்.


கலர் போ ஒரெஞ்ச் கைய­டக்க தொலை­பே­சிகள் X40, X 200, F 3, F 2, X110 ஆகிய வடி­வங்­களில் சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் மின்­சா­ர­முள்ள வீடு­க­ளி­லுள்ள மின் உப­க­ர­ணங்­களை கைய­டக்க தொலை­பேசி ஊடாக கட்­டுப்­ப­டுத்தக் கூடிய புதிய அப் (App) ஒன்­றையும் தமது நிறு­வனம் தயா­ரித்­துள்­ள­தாக ஒரெஞ்ச் நிறு­வ­னத்தின் கைய­டக்க தொலை­பேசி பிரிவின் பொது முகா­மை­யாளர் கிஹான் சிகேரா தெரி­வித்­துள்ளார்.


பாவ­னை­யா­ளர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்ள புதிய அப் மூலம் மின்­சார குமிழ்­களின் வெளிச்­சத்தை குறைத்தல், மின்­கு­மிழ்­களை எரிய வைத்தல், அணைத்தல், அலாரத்துக்கு அமைய மின் உபகரணங்களை எரியவிடுதல், வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் மின்குமிழ்கள் தானாக ஒளிர்வது உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இதன்மூலம் மேற்கொள்ளலாம்

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாணம் ஆந்திரா மீடியாக்களுக்கு செய்தி சுரங்கம். அவ்வப்போது பரபரப்பு செய்திகளை தருவார். இந்த முறை அவர் தந்திருப்பது அவரது மூன்றாவது திருமணம் பற்றியது.


Pavan-kalyan2


ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு மனைவிகளை பிரிந்த பவன் இப்போது அன்னா லெல்னோவா என்ற ஆஸ்திரேலிய மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். வெறும் வதந்தியாக இருந்த இந்த செய்தி அவரது திருமண ஒப்பந்தம் வெளியானதை தொடர்ந்து உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

1977ம் ஆண்டு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினியை காதலித்து இருவீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடமே அவருடன் வாழ்ந்த பவன், அவரை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் சில படங்களில் நடித்த ரேணு தேசாயை திருமணம் செய்து கொண்டார். ரேணுவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு அவரையும் பிரிந்து விட்டார்.


தற்போது ஆஸ்திரேலிய அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து ஒரு குழந்தையும் இருப்பதாக தங்களது திருமண ஒப்பந்தத்தில் கூறியிருக்கிறார்கள். யார் இந்த ஆஸ்திரேலிய அழகி அன்னா. அவருக்கும் பவனுக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது. எங்கு குடும்பம் நடத்தினார்கள் என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர ரசிகர்கள்.

Monday, December 30, 2013

துபாயில் பிரபு... முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு

துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் பிரபுவுக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டல் அரங்கில் துபாய் முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடிகர் பிரபுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவுக்கும், அவரது துணைவியாருக்கும் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நினைவு பரிசினை சங்க தலைவர் மோகன், துணைச் செயலாளர் சிகாமணி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பேசுகையில் தான் துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகவும், முத்தமிழ்ச் சங்க வரவேற்ப்பில் கலந்து கொள்வதில் மக்ழ்ச்சியளிப்பதாக நன்றியுடன் தெரிவித்தார்.


இதற்கு முன் தானும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் 2012ஆம் வருடம் துபாய் வந்தபோது துபாய் முத்தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பை நினைவு கூர்ந்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் ஷா, அணிஸ், சிகாமணி, ஷாஃபி, ராஜன், கணேஷ், அஜய், கணேஷ், ஹிதாயத்துல்லா, பாலா, வேலு, சுரேஷ், ஷாஃபிக், வெங்கட், ராஜா, நடராஜன், பாரதி, நூர்ஜஹான், ஷர்மிளா, வசந்தி மற்றும் திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தில் ஆர்யா-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இவர்களுடன் நடிகர் ஷாமும் இணைந்துள்ளார்.

சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞன், அவனுக்கு துணையாக மற்றொரு இளைஞன். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் ஷாம் நடிக்கிறாராம். இவர் ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா ஒருவரே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் வேறு கதாநாயகி இல்லை. ஜனவரி 14-ந் தேதி குலுமணாலியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மாடல் ஜோதிகாப் போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம். கும்கி, சுந்தரப் பாண்டியன், குட்டிப்புலி மற்றும் பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். மலையாள வரவான லட்சுமிமேனன், தான் இதுவரை நடித்துள்ள படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பிரபலமானவர். கண்களால் உணர்ச்சிகளைக் காட்டும் அவரது ரோல் மாடல் நடிகை ஜோதிகா தானாம்.


jyothika454-600-jpg

பிரபு சாலமனின் கும்கி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். ஆனால், அவரது சுந்தர பாண்டியன் படமே முதலில் திரைக்கு வந்தது.தற்போது பதினோராம் வகுப்பு படித்து வரும் லட்சுமிமேனன், தனது முதல் படமான கும்கியில் யானையைக் கண்டு மிரண்டு ஓடும் காட்சிகளில் கண்களில் அப்படியொரு பிரமிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் லட்சுமிமேனன்.


29-1388300481-kumki-600

கண்களில் உணர்ச்சிகளில் வெளிப் படுத்தும் வித்தையை நடிகை ஜோதிகாவைப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டாராம் லட்சுமிமேனன். சினிமாவில் இவரது ரோல் மாடல் என்றால் அது ஜோதிகா தானாம்.கண்களில் உணர்ச்சிகளில் வெளிப் படுத்தும் வித்தையை நடிகை ஜோதிகாவைப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டாராம் லட்சுமிமேனன். சினிமாவில் இவரது ரோல் மாடல் என்றால் அது ஜோதிகா தானாம்.


ஜோதிகாவின் நடிப்புக்காகவே காக்க காக்க, சந்திரமுகி படங்களை பலமுறை பார்த்து லயித்திருக்கிறாராம் லட்சுமிமேனன்.சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட பாண்டிய நாடு படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமிமேனன். அப்படத்தில் ஆசிரியராக வரும் லட்சுமிமேனன், அசப்பில் அப்படியே நடை, உடை பாவனைகளில் ‘காக்க காக்க' ஜோதிகாவை ஞாபகப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.அதேபோல், தற்போதுள்ள நடிகைகளில் ஜோதிகாவிற்குப் பிடித்த நடிகை லட்சுமிமேனன் தானாம்.


sddefault

களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”.இதில் நாயகனாக வர்ஷனும், கதாநாயகியாக சானியா தாராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.பேசும் போது….
ஒரு தயாரிப்பாளரே கவுன்சிலிங் வேண்டு என்று கேட்பது நல்ல விஷயம் இன்னும் மூன்று மாதங்களில் இதற்கான அனைத்து முயற்சிகளையும் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய பாரதிராஜா….


நான் படைத்துறைக்கு வந்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு முன்னால் பேசிய எல்லோருமே இந்த படத்தின் இயக்குனர் திலகராஜன் நல்ல அறிவாளி.ஆனால் வறுமையில் வாடுகிறார் என்று பேசினார்கள் வறுமை ஒருநாள் வளமையாக மாறும். அவருக்கு தான் வறுமையே தவிர அவரது அறிவுக்கு வறுமை கிடையாது.


நானும் வறுமையில் இருந்து வந்தவன்தான் இன்று எனக்கு நான்கு கார்கள் பல வீடுகள் இருக்கிறது. எனக்கு பின் நிலையாக இருப்பது நான் படைத்த படைப்புகளும் எனது சிந்தனைகள் மட்டுமே. எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு இன்று பழமையாகி கிடக்கிறது ஆனால் அவரது படைப்புகளும் படங்களும் என்றுமே பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிந்தனைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று பாரதிராஜா பேசினார்.


மற்றும் ஆர்.பி.சௌத்திரி, விக்ரமன், நாசர், விவேக், கமிலா நாசர், கே.எஸ்.சீனிவாசன், ஈ.ராம்தாஸ், பேரரசு, சித்ராலட்சுமணன்,கே.ராஜன்,ஜி.சிவா, எஸ்.ஏ.ராஜ்குமார்,நா.முத்துகுமார் விவேகா,ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சிதம்பரம் செல்வராஜ், இசையமைப்பாளர் தாஜ் நூர்,கதாநாயகன் வர்ஷன், கதாநாயகி சானியா தாரா, இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசினார்கள்.இயக்குனர் திலகராஜன் நன்றி தெரிவித்தார்.



Alisha-Abdulla







பைக் வீராங்கனையான அலிஷா ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடிக்கிறார்.

இந்தியாவின் ஒரே பைக் ரேஸ் வீராங்கனை என்ற புகழ் பெற்றவர் அலிஷா அப்துல்லா. சென்னையை சேர்ந்த இவர் பைக் வீராங்கனை மட்டுமல்ல கார் ரேஸ் வீராங்கனையும் ஆவார். இவரது தந்தை அப்துல்லா 7 முறை இந்திய அளவில் பைக் ரேஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.


ஆனால் இப்போது அலிஷாவையும் சினிமா உலகம் விட்டு வைக்கவில்லை. அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தில் அலிஷாவும் நடிக்கிறார். படத்தில் அவர் பைக் ரேஸ் வீராங்கனையாக வருகிறார். யுவராஜ் போஸ் இயக்கிவரும் இந்தப்படத்தில் பைக் சேசிங் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்காட்சிகளில் ஒரு நிஜ பைக்கர் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் அலிஷாவுக்கு அடித்திருக்கிறது இந்த லக்கி சான்ஸ்.


இந்தியாவின் மிக வேகமான பெண் என்ற பெயர் பெற்ற இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அலிஷா, ஏற்கெனவே அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இப்போது வாய்ப்பு தேடிவந்திருப்பது அதர்வாவுடன் நடிக்கத்தான்.





ramba_v4t (1)


ஒரு காலத்தில் ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்பா. தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த சில படங்கள் சரிவர ஓடாததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வாழும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி ஒரு குழந்தைக்கும் தாயும் ஆகிவிட்டார்.


திருமணத்திற்கு பிறகு இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டும் இவர் மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முன்வந்துள்ளார். தற்போது புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


ரம்பா மீண்டும் நடிக்க வந்துள்ளதை அறிந்த பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அவரை அணுகி உள்ளனர். நல்ல கதை, நல்ல சம்பளம் கொடுத்தால் நடிக்க ரெடி என ரம்பா கூறி வருகிறாராம். வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததும் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Posted by V4Tamil .com on 3:46 AM in ,    No comments »
santhanam_124_35201175010123 copy

மலையாள  சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாள திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார்.தற்போது இவர் மலையாளத்தில் ‘சலாலா மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நஸ்ரியா தான் துல்கருக்கு ஜோடி. மேலும் படத்தில் நஸ்ரியா முதன் முறையாக ‘உம்மச்சி ராக்’ என்ற ஒரு பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.




இந்நிலையில்  ‘சலாலா மொபைல்ஸ்’ படத்தில் சந்தானம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறாராம். இதன்மூலம் அவர் மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார். இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் சந்தானம், இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.ஆனால் படம் வரும்வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம். படம் வரும் ஜனவரி-23ஆம் தேதி வெளியாகிறது.





ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.


கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்கிறார்கள்.


அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மதன்கார்க்கி எழுதுகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. துப்பாக்கி படத்தை மும்பை பின்னணியில் சொன்ன முருகதாஸ் இந்தப் படத்தை கொல்கத்தா பின்னணியில் சொல்லப் போகிறாராம்.


இதற்காக படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.



தூம் 3 – விமர்சனம்




ஒரு தனி மனிதனின் கோபம் தான் இந்த தூம் 3. சிகாகோவில் ஒரு பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஜாக்கி ஷெராப். வங்கியில் கடன் வாங்கி இந்த சர்க்கஸை நடத்தி வரும் அவர் ஒரு கட்டத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை சரியாக நடத்த முடியாமல் வங்கியின் மூலம் தனது சர்க்கஸை மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஜாக்கி ஷெராபின் மகனாக ஆமிர் கான். இப்படி தன் உயிராக நினைத்து வாழ்ந்து வந்த சர்க்கஸை மூட வைத்துவிட்டார்களே என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கியின் மிது கடும் கோபம் கொள்ளும் ஆமிர் கான் அந்த வங்கியை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.



ஆமிர் கான் ஒவ்வொரு முறையும் வங்கியில் திருடும் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு நம் இந்திய சினிமாவை உயர்த்தி காட்டுகிறது. தொடர்ந்து ஒரே வங்கியில் திருடும் ஆமிர் கான் ஒரு இந்தியன் என்பதை கண்டறிந்து இந்தியாவில் இருந்து இரண்டு ஸ்பெஷல் போலீஸான அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இருவரை சிகாகோவிற்கு வரவழைக்கிறது அந்த வங்கி. அந்த திருடனை பிடிக்கனும்னா மறுபடியும் அவனை திருட வைக்கனும் என்று திட்டம் போடுகிறார். திருடனை பிடிக்க போஸீஸ் ஒரு பக்கம் திட்டம் தீட்ட, வங்கியில் கொள்ளை அடிக்க ஆமிர் கான் ஒரு பக்கம் திட்டம் தீட்ட என பரபரப்பான திரைக்கதையால் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார்கள்.


இப்படி வங்கியில் கொள்ளையடிக்கும் பணத்தின் மூலம் அதே சர்க்கஸ் நிகழ்ச்சியை சிகாகோவில் துவங்குகிறார் ஆமிர் கான். வங்கியில் கொள்ளையடிக்கும் பணத்தில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை வீதியில் பறக்கவிட்டு செல்வதும், ஒரு கட்டத்தில் வங்கியில் கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கும் போது அபிஷேக் பச்சனால் சுடப்படுகிறார் ஆமிர் கான். இருந்தாலும் போலீஸிடம் சிக்காமல் சாமர்த்தியமாக தப்பிப்பது சூப்பர். தான் சுட்ட அந்த திருடன் ஆமிர் கான் தான் என்று உறுதி செய்து அவரை கைது செய்ய சர்க்கஸுக்கு செல்கிறார். அங்கே அவரை சட்டையை கழட்டி காட்டச் சொல்ல அந்த த்ரில்லர் நம் மனதிலும் பக்… பக்… பக்… என்று அடிக்க வைக்கிறது. ஆனால் குண்டடி பட்டதற்கான ஒரு அடையாளமும் இல்லாமல் அமீர் கான் இருப்பது எப்படி என்று புரியாமல் ஏமாற்றத்துடன் செல்கிறார் அபிஷேக் பச்சன். அதே கேள்வியோடு உட்கார்த்திருக்கும் நமக்கும் ஒரு அதிர்ச்சியை தருகிறது அடுத்த காட்சி படத்தின் பெரிய சஸ்பென்ஸே அது தான். ஒரு இடத்தில் மறந்து மற்றொரு இடத்தில் தோன்றுவது என்பது கண் கட்டி வித்தை மக்களை ஏமாற்றும் செயல் என்பதை அந்த சர்க்கஸ் நிகழ்ச்சி மூலம் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.


கதாபத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆமீர் கான், அவரின் கோபம், சந்தோஷம் ஆகிய இரண்டிலும் வெவ்வெறு ஆமிர் கானை பார்க்க முடிகிறது. கேத்ரினா கைஃப்க்கு அப்படி ஒன்றும் முக்கியதுவம் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் அவரின் கவர்ச்சி, அந்த லிப் டு லிப் முத்த காட்சி என அவரின் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். அபிஷேக் பச்சன் தனது கம்பீரமான போலீஸ் திமிருடன் வந்து கைத்தட்டல் வாங்கியிருக்கிறார். காமெடிக்கு உதய் சோப்ரா முன் பாகத்தில் பார்த்த அதே காமெடிதான் புதிதாக ஒன்றும் இல்லை.


ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் சிறப்பான பாடல்களும், பின்னணி இசையும் கலக்கியிருக்கிறார்.தூம் வரிசையில் வந்த இந்த தூம் 3 எந்த விதத்திலும் தொய்வடைய வில்லை அதே கம்பீரத்துடன் வெற்றியை நிலைநாட்டியிருகிறது.




சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இப்படம் முழுக்க முழுக்க ஆக்சனை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் வருகிறாராம். இப்படத்தில் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக குங்பூ தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள இருக்கிறாராம். வில்லன் ஒரு குங்பூ வீரன் என்பதால் அவருடன் சண்டை போடுவதற்காக இந்த பயிற்சியை பெறுகிறாராம்.


இந்த படத்தையும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கு அனேகமாக ‘எதிர்நீச்சல்-2’ என பெயர் வைப்பார்கள் என தெரிகிறது.


AmalaPaul_Sivakarthikeyan_v4t

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான மீரா ஜாஸ்மின், தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் நடித்து வருகிறார்.


Kollywood-news-8161


துபாயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் நந்தவனம் பகுதியைச் சேர்ந்த டைட்டஸ், சுகதகுமாரி தம்பதிகளின் மகனான அனில் ஜான் டைட்டஸ், சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் படித்துள்ளார்.

மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, திருவனந்தபுரத்தில் இருக்கும் எல்.எம்.எஸ் சர்ச்சில் நடைபெறுகிறது. இதில் மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகினர் கலந்துகொள்கின்றனர். திருமணத்துக்குப் பிறகும் மீரா ஜாஸ்மின் தொடர்ந்து நடிப்பார் என்று, அவரது தரப்பில் ஒருவர் தெரிவித்தார்.ஏற்கனவே மீரா ஜாஸ்மினையும், மாண்டலின் ராஜேசையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியானது. இந்நிலையில், துபாய் என்ஜினீயரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்ய இருப்பதாக கேரளாவில் செய்தி வெளியாகி இருப்பது, மலையாளப் படவுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தட­வை­யாக நாட்டில் அறி­முகம் செய்யும் சேவைகள் வரி­சையில்் இம்­முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்­துள்­ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்­போன்­க­ளுக்கு புதிய ஒப்­பந்த திட்டம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.


184141-1


மொபிடெல் வாடிக்­கை­யா­ளர்கள் இதற்­கென 18 மாத கால ஒப்­பந்தம் ஒன்றைச் செய்­து­கொள்ள வேண்டும். இந்த ஒப்­பந்தம் விஷேட பாவ­னைக்குப் பிந்­திய மொபிடெல் கட்­டண முறை­யொன்­றுடன் கூடி­யது. மாதாந்த அடிப்­ப­டையில் பின்­வரும் உள்­ளம்­சங்கள் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கி­றது. 2GB டேடா, 100 M2M நிமி­டங்கள் மற்றும் 500 M2M குறுந்­த­க­வல்கள் போன்­றன வழங்­கப்­படும். இந்த ஒப்­பந்­தத்தில் கையொப்­ப­மிடும் போது, ஆரம்பக் கட்­ட­ண­மாக ரூபா 10,000/- வைச் செலுத்த வேண்டும்.


ஒப்­பந்த கால முடிவில் வாடிக்­கை­யாளர் புதிய ஸ்மார்ட்­போனைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.


Huawei Ascend Y220 ஸ்மார்ட் போன் இரட்டை SIM பாவனை கொண்­டது. 3.5 அங்­குல தொடுகை திரை, 0.3MP சக்தி கொண்ட பின் பக்க கெமறா மற்றும்் RAM 256MB அதி உயர் நினை­வாற்றல், 512 MB ROM, நுண் SD கார்ட், (32G வரை) என­பன போன்ற பண்­பு­க­ளோடு கறுப்பு நிறத்தில் கிடைக்­கின்­றது.

veeram4

சிறுத்தை பட வெற்றிக்குப் பிறகு தனது இரண்டாவது படைப்பான வீரம் படத்தை இயக்கிவிட்டார் சிவா. ஆரம்பம் படம் ரிலீஸ் ஆனதுமே வீரம் படத்தில் நடிக்க போய்விட்டார் அஜித் படப்பிடிப்பு 3 மாதங்கள் கூட நடக்கவில்லை. அதற்குள்ளே படத்தின் அனைத்து காட்சிகளையும் எடுத்துவிட்டார் இயக்குநர் சிவா. முழுக்க முழுக்க ஒரு காமெடி மற்றும் சென்ட்டிமெண்ட் படமாக இந்த படம் உருவாகியுள்ளதாம். படம் சம்பந்தமான புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. அதாவது எல்லா படங்களைப் போல் இறுதி க்ளைமேக்ஸில் ஒரு அதிரடி ஆக்‌ஷன் காட்சியை வைத்து படத்தை முடிக்காமல். கடைசி 30 நிமிடங்கள் சென்ட்டிமெண்டை வைத்து படத்தை முடித்திருக்கிறாராம் சிவா. அஜித் அறிமுக காட்சியும் ஆங்காங்கே ஆக்‌ஷனும் அதிரடியாகவும், காமெடியில் சந்தானம் பட்டையை கிளப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அஜித்துடன் தமன்னா, விதார்த், நாசர், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசையமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்றாகும்.


இந்த நிலையில், தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கட்டுகளை இழந்த நிலையில், 68 ஓட்டங்களை பெற்றிருந்தது.


முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இனிங்சிற்காக 334 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க அணி 500 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி, இந்திய அணி, 8 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், 98 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கட் தொடரை 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்ட பின்னர் ஐந்து போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் தொடரை நழு­வ­விட்ட இலங்கை அணி, நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­கொள்ள முயற்­சிக்­க­வுள்­ளது.Pakistan-Sri-Lanka-Match


இந்த டெஸ்ட் தொடரை மிகுந்த நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக இரண்டு நாடு­க­ளி­னதும் கிரிக்கட் அணித் தலை­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளதால் இத் தொடர் விறு­வி­றுப்பைத் தோற்­று­விக்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது.இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி அபு­தாபி ஷெய்க் சய்யத் விளை­யாட்­ட­ரங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.


இதனைத் தொடர்ந்து இரண்­டா­வது டெஸ்ட் போட்டி துபாய் விளை­யாட்­ட­ரங்கில் ஜன­வரி 8 முதல் 12 வரையும் கடைசி டெஸ்ட் போட்டி ஷார்ஜா விளை­யாட்­ட­ரங்கில் ஜன­வரி 16 முதல் 20 வரையும் நடை­பெ­ற­வுள்­ளன.இலங்கை அணியைப் பலப்­ப­டுத்தும் பொருட்டு சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல ஜய­வர்­தன (முன்னாள் அணித் தலைவர்), விக்கட் காப்­பாளர் பிர­சன்ன ஜய­வர்­தன, சுழல் பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகியோர் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.


இவர்­க­ளை­விட எஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை­யி­லான இலங்கை குழாமில் குமார் சங்­கக்­கார, தினேஷ் சந்­திமால், திமுத் கரு­ணா­ரட்ன, லஹிரு திரி­மான்ன, நுவன் குல­சே­கர, சுரங்க லக்மால், ஷமிந்த எரங்க, நுவன் ப்ரதீப், சச்­சித்ர சேனா­நா­யக்க, டில்­றுவன் பெரேரா, புது­முகம் விஷ்வா பெர்­னாண்டோ (இட­துகை வேகப்­பந்­து­வீச்­சாளர்) ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றனர்.


இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் மஹேல ஜய­வர்­தன (138 டெஸ்ட்கள், 10,806 ஓட்­டங்கள்), குமார் சங்­கக்­கார (117 டெஸ்ட்கள், 10,486 ஓட்­டங்கள்), பிர­சன்ன ஜய­வர்­தன (52 டெஸ்ட்கள், 1,900 ஓட்­டங்கள்), எஞ்­சலோ மெத்யூஸ் (33 டெஸ்ட்கள், 1792 ஓட்­டங்கள்), ரங்­கன ஹேரத் (47 டெஸ்ட்கள், 200 விக்­கட்கள்), நுவன் குல­சே­கர (20 டெஸ்ட்கள், 46 விக்­கட்கள்) ஆகிய வீரர்­களே அனு­ப­வ­சா­லி­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.


எனவே இலங்கை அணியை நல்ல நிலைக்கு இட்­டுச்­செல்லும் பாரிய பொறுப்பு இவர்­க­ளது கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.


பாகிஸ்தான் அணியைப் பொறுத்­த­மட்டில் யூனிஸ் கான் (86 போட்­டிகள், 7,௧௧­௪ ஓட்­டங்கள்), அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் (43 டெஸ்ட்கள், 2,854 ஓட்­டங்கள்), மொஹமத் ஹவீஸ் (34 டெஸ்ட்கள் 2061 ஓட்­டங்கள், 34 விக்­கட்கள்) அஸ்ஹர் அலி (31 டெஸ்ட்கள், 2,081 ஓட்­டங்கள்), உமர் குல் 47 டெஸ்ட்கள், 163 விக்­கட்கள்), சயீத் அஜ்மால் (30 டெஸ்கள், 159 விக்­கட்கள்), அப்துர் ரெஹ்மான் (19 டெஸ்ட்கள், 90 விக்­கட்கள்) ஆகியோர் பிர­தான வீரர்­க­ளாக இடம்­பெ­று­கின்­றனர்.


வர­லாறு


பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான அங்­கு­ரார்ப்­பண டெஸ்ட் தொடர் பாகிஸ்­தானில் 1982 மார்ச் மாதம் நடை­பெற்­றது. 3 போட்­டிகள் கொண்ட அத் தொடரில் பாகிஸ்தான் 2 க்கு 0 என வெற்­றி­பெற்­றி­ருந்­தது. தொடர்ந்து 1985 இல் மீண்டும் பாகிஸ்­தானில் நடை­பெற்ற தொட­ரிலும் 2 க்கு 0 என பாகிஸ்தான் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.


1986இல் இலங்­கையில் நடை­பெற்ற தொடரில் இலங்கை முதல் தட­வை­யாக பாகிஸ்­தானை டெஸ்ட் போட்­டியொன்றில் வெற்­றி­கொண்­ட­துடன் தொட­ரையும் 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்­டது.


கொழும்பு சி சி சி மைதா­னத்தில் 1986 மார்ச் 14 முதல் 18 வரை நடை­பெற்ற அந்­த இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் டுலீப் மெண்டிஸ் தலை­மை­யி­லான இலங்கை அணி, இம்றான் கான் தலை­மை­யி­லான பாகிஸ்தான் அணியை 8 விக்­கட்­களால் வெற்றி­கொண்­டது.


பாகிஸ்தான் முதல் இன்: 132 (கோசல குறுப்­பு­ஆ­ராச்சி 44 க்கு 5 விக்., அஷன்த டி மெல் 39 க்கு 3 விக்.), 2வது இன்: 172 (ரவீந்­திரன் ரட்­நா­யக்க 37 க்கு 5 விக்.) இலங்கை முதல் இன்: 273 (அர்­ஜுன ரண­துங்க 73 ரவி ரட்­நா­யக்க 38, அர­விந்த டி சில்வா 37, சிதத் வெத்­த­முனி 37), 2வது இன்: 32 க்கு 2 விக்.


அதன் பின்னர் நடை­பெற்ற இரண்டு தொடர்­க­ளிலும் தோல்வி அடைந்த இலங்கை 1995இல் பாகிஸ்­தானை அதன் சொந்த மண்ணில் முதல் தட­வை­யாக தொடர் ஒன்றில் வெற்­றி­கொண்­டது. அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை அணி மூன்று போட்­டிகள் கொண்ட அந்தத் தொடரை 2 க்கு 1 என வெற்­றிக்­கொண்டு வர­லாறு படைத்­தது. அத் தொடரில் பாகிஸ்­தானின் அணித் தலை­வ­ராக பிர­பல தொலைக்­காட்சி வர்­ண­னை­யாளர் ரமீஸ் ராஜா தலைமை தாங்­கி­யி­ருந்தார்.


இவ்­வா­றாக இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர்கள் இரண்டு நாடு­க­ளிலும் மாறி மாறி நடந்­து­வந்­த­போ­திலும் 2009ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி காலை இலங்கை அணி­யினர் பய­ணித்த பஸ் வண்டி மீது லாகூரில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் இலங்கை உட்­பட மற்­றைய நாடுகள் பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­வதை நிறுத்­திக்­கொண்­டன.


இதன் கார­ண­மா­கவே நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான டெஸ்ட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.இது­வரை இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் 43 போட்­டிகள் நடை­பெற்­றுள்­ள­துடன் 16இல் பாகிஸ்­தானும் 10இல் இலங்­கையும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 17 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

dhanu


ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sunday, December 29, 2013

ஆம். நம்பமுடியாவிட்டாலும் உண்மைதான். ஆனால் இங்கல்ல. நமது அயலவர்களிடம். பூமியின் விண்வெளி அயலவர்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனில், பூமியின் அனைத்து நகைக்கடைகளில் உள்ளவற்றிலும் பார்க்க அதிகளவான வைரங்கள் உண்டு. அந்த இரு கிரகங்களிலும் வைரங்கள் வளிமண்டலத்திலிருந்து இருந்து மழைத்துளியைப் போல் விழும் என்ற கோட்பாடு உள்ளது.

யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் உயர் விகிதத்தில் மீத்தேன் (methane) உள்ளது. இந்த கிரகங்களில் காணப்படும் உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக இது வைரம் அல்லது சிக்கலான ஆர்கானிக் உட்பொருட்களாக மாறிவிடுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  ஆராய்ச்சி  முடிவுகள், அமுக்கம் 19 GPa ஆகவும் வெப்பநிலை 2200 முதல் 3000 டிகிரி கெல்வின் ஆகவுமுள்ள நிலையில் மீத்தேன் வைரமாக மாற்றமடைவதாக கூறுகின்றன. மீத்தேனை வைரமாக மாற்றுவதில் முதன்மைக் காரணியாக வெப்பநிலை உள்ளபோதிலும் வளிமண்டல அழுத்தத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வைரங்கள் விழுவதால் வெளியிடப்படும் சக்தி நெப்டியூனின் காந்தசக்தியை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இதனால் இக்கிரகத்தின் வெப்பக் கதிர்வீச்சும் அதிகரிக்கும். வைர மழை ஒரு நிரூபிக்கப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும், இதற்குரிய சாத்தியங்களும் இருப்பதாக வாதங்கள் உள்ளன.

பிரமாண்ட பட்ஜெட், அதைவிட பிரமாண்ட எதிர்ப்பார்ப்பை கிளப்பும் விளம்பரங்கள் என்று வெளியாகிற பெரும்பாலான படங்கள் மக்களைக் கவராமல் போகின்றன. இந்த ஆண்டைப் பொறுத்தவரை பெரிய இயக்குநர்கள்... தமிழ் சினிமாவின் போக்கை கட்டமைத்தவர்கள் என்று கொண்டாடப்பட்ட இயக்குநர்களின் படங்கள் வெளியாகின. பெரும்பாலும் சொதப்பின.


கடல்


2013_flop_movies
மணிரத்னம் என்றாலே பலருக்கும் ஒரு மயக்கம். அவர்தான் சிறந்த இயக்குநர்.. அவர் என்ன எடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று.  இந்த ஆண்டு அவர் கொடுத்த மகா மட்டமான படம் கடல். கார்த்திக்கின் மகன் கவுதமை ஹீரோவாகவும், ராதாவின் மகள் துளசியை நாயகியாகவும் அறிமுகப்படுத்தினார் இந்தப் படத்தில். சொதப்பலான திரைக்கதை, மட்டமான வசனங்கள், என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாத அளவுக்கு புரியாத காட்சிகள்... மணிரத்னம் மினிரத்னமாகிவிட்டதை பறைசாற்றிய படம். ஒரே ஆறுதல் ரஹ்மானின் இரண்டு அருமையான மெலடிகள்!

அன்னக்கொடி


2013_flop_movies
ஒரே மாதிரி பார்முலாவுக்குள் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு புது ஆக்ஸிஜன் கொடுத்த பெருமைக்குரிய இயக்குநர் பாரதிராஜா. அவர் இயக்கத்தில் சிலஆண்டுகளுக்கு முன் வெளியான பொம்மலாட்டம் கூட அவரது இயக்கத் திறனும் படைப்பாற்றலும் இன்னும் வீர்யமாக இருப்பதை மெய்ப்பித்தது. ஆனால் இந்த ஆண்டு அவர் இயக்கியதாக சொல்லப்பட்ட அன்னக்கொடி, நச்சுக் கொடியாக மாறி அவரை நேசித்தவர்களை வதைத்துவிட்டது. இது பாரதிராஜா படம்தானா... அல்லது உதவியாளர்களை இஷ்டப்படி எடுக்கவிட்டு இவர் பேரைப் போட்டுக் கொண்டாரா.. மாமனாரின் இன்பவெறி கதைக்கு ஏன் மெனக்கெட்டு இவ்வளவு பில்ட் அப்... உலக சினிமா வரலாற்றிலேயே இத்தனை கேவலமான க்ளைமாக்ஸ் இருக்காது.... என்றெல்லாம் விமர்சனங்கள் குவிந்தது இந்தப் படத்துக்கு.

இரண்டாம் உலகம்


2013_flop_movies
இன்றைய இயக்குநர்களில் பெரும் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் செல்வராகவன். ஆனால் படத்தை அறிவிப்பதும் பின்னர் விலகிக் கொள்வது அல்லது கைவிடுவதுமான அவரது போக்கு... அவரது தொழில்முறைத் தன்மையை சந்தேகத்துக்குள்ளாக்கியது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆரம்பித்த சறுக்கல் இரண்டாம் உலகம் வரை அவருக்குத் தொடர்கிறது. குறிப்பாக இரண்டாம் உலகம். அதீத கற்பனை உலகைக் காட்டுவதாக புறப்பட்ட அவர், அதற்கான அதிகபட்ச மெனக்கெடல்களை மேற்கொள்ளவில்லை. படத்தின் காட்சிகள் அனைத்தும் மனோரீதியாக அவரது அமைதியின்மையைப் பிரதிபலிப்பது போன்ற தெளிவின்றியும் அரைகுறையாகவும் அமைந்தது ரசிகர்களை ஈர்க்கவில்லை. பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை உண்டாக்கிய இந்தப் படத்தால் செல்வா தனது பெரிய சொத்து ஒன்றையே இழக்க நேர்ந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போன்ற வலுவான சங்கங்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேர்ந்தது.

ஆதி பகவன்


2013_flop_movies
இந்தத் தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் என்று கருதப்பட்டவர் அமீர். ஆனால் அந்த பெயரை தகர்த்தது யோகி. அதன் பிறகு படைப்பை விட, திரையுலக அரசியலை அவர் அதிகம் நேசிக்க ஆரம்பித்துவிட்டதால், ஆதி பகவன் படத்தை நான்கு ஆண்டுகள் இழுத்தார். அப்படியாவது படம் சிறப்பாக வந்ததா என்றால்... பெரும் தோல்விப்படமாக அமைந்தது. ஜெயம் ரவி போன்ற நடிகரை நான்காண்டுகள் காக்க வைத்த பெருமை மட்டுமே படத்துக்கு மிஞ்சியது.

நய்யாண்டி


2013_flop_movies
ஒரு படம் வென்றால், என்னமோ அதன் கதையைக் கேட்க நான் இப்படி கவனம் செலுத்தினேன்... இப்படி மெனக்கெட்டேன் என்று மிகையாகக் காட்டிக் கொள்ளும் தனுஷ், எப்படி இந்த படத்தை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. களவாணி, வாகை சூடவா போன்ற நல்ல படங்களைத் தந்த சற்குணத்தின் நய்யாண்டி. இந்தப் படத்தை யாருக்காக எடுத்தார் சற்குணம் என்றே புரியவில்லை. போதாக்குறைக்கு இந்த 'ஆழாக்கு' நஸ்ரியாவின் தொப்புள் சர்ச்சை வேறு.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search