• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Monday, September 30, 2013

news_401தமிழ், தெலுங்கு படங்களில் தற்போது நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் அனுஷ்கா.

செல்வராகவன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இரண்டாம் உலகம். 

இப்படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா, தெலுங்கில் வேறு ருத்தரமா தேவி, பாகுபலி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் டைட் ஷெடியூலில் இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை தமிழ் மற்றும் தெலுங்கில் புது படங்களுக்கு கமிட் ஆவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளாராம் அனுஷ்கா.

இந்த இரு படங்களும் தமிழ், தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 9:49 PM in ,    No comments »
EPL(23)இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின்நேற்றைய போட்டிகளில் நோர்விச் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றிபெற்றன.


ஸ்ரோக் சிட்டி அணிக்கும், நோர்விச் சிட்டி அணிக்குமிடையிலான போட்டியில் நோர்விச் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.  


இப்போட்டியில் 34ஆவது நிமிடத்தில் நோர்விச் சிட்டி அணியின் ஜொனதன் ஹொவ்சன் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக நோர்விச் சிட்டி அணி முதற்பாதியை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்களைப் பெற்றுக் கொள்ளாது விட, நோர்விச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்றது.


லிவர்பூல் அணிக்கும், சண்டர்லான்ட் அணிக்குமிடையிலான போட்டியில் லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


இப்போட்டியில் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி சார்பாக 28ஆவது நிமிடத்தில் டானியல் ஸ்ரர்ட்ஜ் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். 38ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸ் கோலொன்றைப் பெற்றுக் கொடுக்க, லிவர்பூல் அணி முதற்பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.


இப்போட்டியின் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே, 52ஆவது நிமிடத்தில் எமானுலே கியச்செரினி கோலொன்றைப் பெற்று சண்டர்லான்ட் அணிக்கு நம்பிக்கையளித்த போதிலும், அதன் பின்னர் கோல்களைப் பெற்றுக் கொள்ள அவ்வணி தடுமாறியது. 89ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸ் தனது இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுக்க லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
Posted by V4Tamil .com on 9:37 PM in ,    No comments »

Thursday, September 26, 2013

lalithamodi592013

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் ஆணையரான க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.

நிதி மோசடிகளில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அந்தக் குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அவர் மீது முன்வைக்கப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று கண்டறிந்ததை அடுத்து, அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புகளை பேணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மோடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு டில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் வாரியக் கூட்டம் நடைபெற்று குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வடிவமைத்து அதை வெற்றிகரமாக நடத்தியவர் என்று, கிரிக்கெட் வாரியமே அவரை முன்னர் புகழ்ந்தது.

இதேவேளை, 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில், புனே மற்றும் கொச்சி ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டன. இது தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்தது. அதற்கு லலித் மோடியே காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்போது கொச்சி அணியின் உரிமையாளர்கள் யார் என்பதை மோடி டுவிட்டரில் வெளியிட சர்ச்சை ஆரம்பித்தது. இதையடுத்து அப்போது வெளியுறவுத்துறை துணை அமைச்சராக இருந்த சஷி தரூர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

2010 ஆம் ஆண்டின் ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் முடிந்த பிறகு, மோடி அந்தப் போட்டியின் ஆணையர் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவரிடம் விளக்கம் கேட்ட கிரிக்கெட் வாரியத்தின் கடிதங்களுக்கு மோடி பதலளித்தார் என்றாலும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்கவில்லை.

இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறும், லலித் மோடி தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 11:43 PM in ,    No comments »
837466592Untitled-1

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி சென்னை சூப்பர் கிங்சின் இன்னிங்சை முரளிவிஜயும், மைக் ஹஸ்சியும் தொடங்கினர். தொடர்ந்து 2-வது முறையாக ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார் முரளிவிஜய்.

அடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். சிறிது நேரத்தில் ஹஸ்சி 23 ஓட்டங்களில் விக்கெட்டை ஆட்டமிழந்தார்.

ரெய்னா துரிதமான ஓட்ட சேகரிப்பில் ஈடுபட்டார். 20 ஒவர் கிரிக்கெட்டில் தனது 25-வது அரைசதத்தை கடந்த ரெய்னா, ஐதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதற்கிடையே பத்ரிநாத் 13 ஓட்டங்களில் வெளியேற, டோனி களம் கண்டார்.

சொந்த ஊர் இரசிகர்களின் முன்னிலையில் கடந்த ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த டோனி, இந்த முறை மெகா விருந்தே படைத்து விட்டார்.

18-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேராவை டோனி, கதி கலங்க வைத்தார். அந்த ஓவரில் மட்டும் டோனி 5 சிக்சர்களை தூக்கியடித்து, இரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

இதில் ஒரு சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. இந்த தொடரின் நீண்ட தூரம் ஓடிய சிக்சர் இது தான். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 34 ஓட்டங்கள் (5 சிக்சர், ஒரு 2 ரன், 2 வைடு) வந்தது.

இதனால் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் எகிறியது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 175 ஆக உயர்ந்த போது, ரெய்னா (84) ஆட்டமிழந்தார்.

டைசி ஓவரிலும் அசுரத்தனமான தாக்குதல் தொடுத்த டோனி, மேலும் இரு சிக்சர் விளாசினார். இதனால் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 ஓட்டங்களை தொட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களை குவித்தது. சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை அணியின் அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.

டோனி 63 ஓட்டங்களுடன் (19 பந்து) களத்தில் இருந்தார். இதில் ஒரு பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும்.

ஐதராபாத் தரப்பில் ஸ்டெயின், டுமினி நேர்த்தியாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், திசர பெரேரா 3 ஓவர்களில் 60 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.

சாம்பியன்ஸ் லீக்கில் ஓர் இன்னிங்சில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த மோசமான பந்து வீச்சாளர் வரிசையில் பெரேரா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு, தலைவர் ஷிகர்தவானும், பார்த்தீவ் பட்டேலும் அருமையான தொடக்கம் தந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 88 ஓட்டங்களை சேர்த்த இந்த ஜோடியில் பட்டேல் 38 ஓட்டங்களுடனும், தவான் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்னால் வந்த துடுப்பாட்ட வீரர்களில் டேரன் சேமி (50) கடும் சவாலாக இருந்தார். என்றாலும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர அதை தொட முடியவில்லை.

ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னை வீரர்களின் களத்தடுப்பு படுமோசமாக இருந்தது. பல பிடிகளை கோட்டை விட்டதால் தான், ஐதராபாத் அணி இவ்வளவு ஓட்டங்களை எடுத்து விட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் டைட்டன்சை வென்றிருந்தது. தனது 3-வது ஆட்டத்தில் சென்னை அணி பிரிஸ்பேனுடன் நாளை மோதுகிறது.

நேற்றைய போட்டியின் சாதனைகள்:

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி 16 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை டோனி பெற்றார்.

இதற்கு முன்பு 2009-ம்ஆ ண்டு நியூ சவுத் வேல்சுக்கு எதிராக டிரினிடாட் அண்ட் டொபாக்கோ வீரர் கீரன் பொல்லார்ட் 18 பந்துகளில் அரைசதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

19 பந்துகளில் 63 ஓட்டங்களை திரட்டிய டோனியின் ஸ்டிரைக் ரேட் விகிதம் 331.51 ஆக இருந்தது. சாம்பியன்ஸ் லீக்கில் இதுவும் ஒரு வகையில் சாதனை தான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, சாம்பியன்ஸ் லீக்கில் 500 ஓட்டங்களை கடந்தார். அவர் இதுவரை 16 ஆட்டங்களில் ஆடி 518 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

டேவிட் வார்னர் 556 ஓட்டங்களுடனும், பொல்லார்ட் 521 ஓட்டங்களுடனும் முதல் இரு இடங்களை வகிக்கிறார்கள்.

Kochadayaan-2_1334631074வருமா வராதா என்ற கேள்வியைத் தாண்டி கோச்சடையான் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவதாரையே மிரட்டும் வகையில் கோச்சடையானை சௌந்தர்யா உருவாக்கியிருப்பதாக கூறுகிறார்கள். 

சமீபத்தில் கோச்சடையானின் டீஸர் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் ஒரு பாடலை மட்டும் விளம்பரத்துக்காக வெளியிடுகிறார்கள்.

எங்கே போகுதோ வானம் எனத் தொடங்கும் அந்தப் பாடலை ரஹ்மான் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். பாடலை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

அக்டோபர் 7ம் திகதி இந்தப் பாடலை வெளியிடவுள்ளது கோச்சடையான் குழு.

 


Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search