• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Thursday, October 31, 2013

நேற்று மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித் நடித்த ஆரம்பம் படம். நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம், பட்டாசு, வானவேடிக்கையுடன் துவங்கியது ஆரம்பம் படத்தின் முதல்நாள் முதல் காட்சி. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கைத்தட்டி விசிலடித்து ஆட்டம் போட்டு ஆரம்பத்தை ரசித்துப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.இது ஒருபக்கம் இருக்க இன்று பேஸ்புக்கில் ஒரு செய்தி படம் கண்ணில் பட்டது. அதாவது ஆரம்பம் பார்த்த அஜித் ரசிகர் தற்கொலை என்பதுதான் அந்த செய்தி படம். மேலும் அதில் ஆரம்பம் படம் தோல்வி அடைந்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பொய்யான செய்திப் படங்களை இப்படி உருவாக்கி வெளியிடுகிறார்களே என்பதுதான் அதியாக காரணம்.


 ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிவைத்தார். ஆனால் ஆள் வளருகிற அளவுக்கு இன்று அறிவு வளராமல் போய்விடுகிறது. அதனால்தான் அறிவியலை பயன்படுத்தி இது போன்ற வேலைகளை எல்லாம் இவர்களால் பார்க்க முடிகிறது. போட்டோஷாப்பை பயன்படுத்தி இந்த படத்தில் வரும் செய்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்னே ஒரு கீழ்த்தரமான புத்தி. இதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?


 குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று இன்று சிலரது கையில் சிக்கிக் கொண்ட பேஸ்புக்கால் இது போன்ற பொய்யான செய்திகள் உலகம் முழுவதும் எளிதில் பரவிவிடுகின்றன. இதை திட்டமிட்டு சில விஷமிகள் உருவாக்குகிறார்கள் என்றால் இதை பகிர்பவர்களாவது கொஞ்சம் யோசிக்க வேண்டும் அல்லவா? இந்த செய்தி உண்மைதானா என்று யோசித்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இது போன்ற பொய்ப் பிரச்சார படங்கள் பேஸ்புக்கில் சாதாரண மனிதர்களால் எளிதில் பகிரப்பட்டு விரைவில் நிறைய பேரை சென்றடைந்து விடுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான புத்தி உடையவர்கள் என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. எனினும், பேஸ்புக் போன்றவற்றில் வரும் இது போன்ற செய்தி, படங்களை உண்மை தன்மை அறிந்து பகிரும் பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால் பொய் பிரச்சார செய்திகள், படங்கள் நிறையபேரை சென்றடைவதை நம்மால் முடிந்த அளவுக்கு தடுக்க முடியும்.

Posted by V4Tamil .com on 10:10 PM in    No comments »

w4இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரும், துணை தலைவருமான விராட் கோலி, நாக்பூரில் நடந்த ஆஸி.க்கு எதிரான 6-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 66 பந்துகளில் 115 ஓட்டங்களை விளாசி, பிரமாதப்படுத்தினார்.
ஒரு நாள் போட்டியில் அவரது 17-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 17 சதங்களை (112 இன்னிங்ஸ்) எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி (170-வது இன்னிங்சில் 17-வது சதம்) இந்த பெருமையை தக்க வைத்திருந்தார். மேலும் இலக்கை துரத்திப்பிடிப்பதற்கான (சேசிங்) ஆட்டத்தில் (2-வது பேட்டிங்) கோலியின் 11-வது சதமாக அமைந்தது.

இவை அனைத்தும் வெற்றியிலேயே முடிந்திருக்கிறது. இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் (14 சதம்) மட்டுமே அவரை விட முன்னிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 24 வயதான விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் ஆரூடம் கூறியுள்ளார்.

இதுவரை 118 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அதில் 112 இன்னிங்சில் களம் இறங்கி 17 சதங்களுடன் 4919 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இதே எண்ணிக்கையிலான ஆட்டத்தில் டெண்டுல்கர் 8 சதத்துடன் 4001 ஓட்டங்களையே எடுத்திருந்தார்.

இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், ‘சாதனைகள் என்பதே முறியடிக்கப்படக் கூடியது தான். ஆனால் டெண்டுல்கரின் சில சாதனைகளை அதாவது 200 டெஸ்டில் பங்கேற்றவர், 51 டெஸ்ட் சதம் ஆகியவற்றை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் விராட் கோலி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, ஒரு நாள் போட்டியில் டெண்டுல்கரின் அதிக சதங்கள் (49 சதம்) சாதனையை முறியடிக்க ‘வாய்ப்புள்ளது.

அதற்கு இன்னும் 32 சதங்கள் தான் கோலிக்கு தேவைப்படுகிறது. நிறைய ஒரு நாள் போட்டிகளில் இந்தியா விளையாடும் போது, கோலியால் இந்த சாதனையை செய்ய முடியும். இந்த கிரிக்கெட் சீசனில் கோலி 20 அல்லது 22 சதங்களை எட்டி விடுவார்’ என்றார்.



Posted by V4Tamil .com on 10:02 PM in    No comments »

Wednesday, October 30, 2013

404775939Untitled-1

ஆறாவது ஒரு நாள் போட்டியில், அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்தியா.
இந்தியா மற்றும் ஆஸி. அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், 2,1 என்ற புள்ளிக்கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது.

மழை காரணமாக 4 மற்றும் 5வது போட்டிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், 6வது ஒரு நாள் போட்டி, நாக்பூரில் நேற்று நடந்தது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அவுஸ்திரேலியாவின் ஹூக்ஸ், பின்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவர்கள் வந்த வேகத்திலேயே முறையே 13, 20 ஓட்டங்களில் வெளியேறினர்.

வாட்சனும், பாய்லேயும் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை மளமளவென்று உயர்த்தினர். முகமது ஷமி பந்தில் வாட்சன் (102) போல்டானார்.
பாய்லே அதிரடி ஆட்டத்தின் மூலம், 156 ஓட்டங்களை விலாசினார். பின்வரிசையில் ஓக்ஸ் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை எடுத்தார்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸி. 6 விக்கெட்டுக்களை இழந்து 350 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து, இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். சர்மா (79), தவான் (100) வெளியேற, பின்னர் வந்த ரெய்னா (16), யுவராஜ் (0) பெரிதாக சோபிக்கவில்லை.

ஆனாலும் கோஹ்லி அதிரடியாக ஆடி 66 பந்துகளில் 115 ஓட்டங்களை விலாசினார். தோனி 25 ஓட்டங்களை எடுத்தார்.

49.3 ஓவர்களிலேயே இந்தியா 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 351 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலை சமன் செய்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.
Posted by V4Tamil .com on 11:52 PM in    No comments »

Monday, October 28, 2013

Bunker and dictator Enver Hoxha's of Albania — During the nearly forty-year leadership of Communist dictator Enver Hoxha of the People's Socialist Republic of Albania, over 700,000 bunkers were built in the country – one for every four inhabitants. The bunkers (Albanian: bunkerët) are still a ubiquitous sight in Albania, with an average of 24 bunkers for every square kilometer of the country.
Posted by V4Tamil .com on 7:23 PM in ,    9 comments »

tamil-cinema-6-movie-300x194கதை என்னவோ சின்னதாக இருந்தாலும், அதை எடுத்திருக்கும் விதம் நம்மை உட்கார வைக்கிறது. படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கி விடுகிறது. மகனுக்கும், தந்தைக்கும் இடையேயான அன்பை ஒரே பாடல் காட்சியில் விளக்கி கதைக்குள் நேராக செல்கிறார் இயக்குனர். அடுத்தடுத்த காட்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு பதற்றத்தை தோற்றி விடுகிறார்கள்.

ஐ.டி.யில் வேலை செய்யும் ஷாம், அவரது மனைவி பூனம் கவுர். இவர்களுக்கு ஒரு மகன். அன்பாகவும், அழகாகவும் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
6candle_JPG_1593306g


 


பீச்சுக்கு போகும்போது தனது மகனை தொலைத்து விடுகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு ஓடுகிற அவர்களிடம், 'விசாரிக்கிறோம்' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது இரக்க மனம் படைத்த அதிகாரி ஒருவர், சட்டத்தை நம்புவது வீண் என்று மாற்று வழியை காட்டுகிறார். கிடைக்கிற க்ளுவை வைத்துக் கொண்டு குழந்தையை தேடி புறப்படுகிறார் ஷாம். ஆந்திராவின் நகரியில் ஆரம்பித்து வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என்று தனது குழந்தையை தேடி ஷாம் நடத்தும் வேதனையான பயணம்தான் முழு படமும்.

இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று ஒரு புறம் பயம் வந்தாலும், மற்றொரு புறம் தன்னையறியாமல் ஆத்திரம் வருவது நிஜம். வெறும் காட்சிகளுக்காக மட்டும் கற்பனையை தட்டிவிடாமல் எங்கெல்லாம் இந்த கொடுமைகள் நடக்கிறதென தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார் துரை.

நாயகன் ஷாம். இதற்கு முன்பு இப்படிப்பட்ட படம் இவருக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி ஆறுதல் பட்டு கொள்ளலாம். அசத்தலான நடிப்பு, அதற்கேற்ற உழைப்பு. கடுமையாக தன்னை வருத்தி கொண்டிருக்கிறார். அதற்காகவே ஒரு சல்யூட்.
ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6-வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள். தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.

காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர். அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது. இதற்கு போலீஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.

குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம்.
போபாலில், மகன் கிடைக்கவிருக்கும் தருணத்தில், தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சும் சிறுமியை உதறவும் முடியாமல், அந்தப் பெண்ணின் சோகத்தைத் தாங்கவும் முடியாமல் ஷாம் பதறுமிடம் அவர் நடிப்பில் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார் என்பதற்கு சான்று. அந்தப் பெண்ணைக் காப்பாற்றி நகரின் பிரதான பகுதிக்கு வரும் அவர் எதிரில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தைக் காட்டி, 'இங்கே போ.. நல்லவர்கள் இருக்கிறார்கள்.. காப்பாற்றுவார்கள்,' என்று கூறிவிட்டு மீண்டும் மகனைத் தேடிப் போவார். எத்தனை நம்பிக்கை!

எங்கெங்கிருந்தோ கடத்தப்பட்டு வந்த சிறுவர்களை கொல்கத்தாவின் இருட்டறையில் அடைத்து அழுக்கு குப்பைகளுக்கு மத்தியில் அடித்து உதைத்து சோறுபோடும் காட்சி கண்களைக் குளமாக்கியது. இது சினிமா காட்சி மட்டுமல்ல, நிஜமான உண்மை என்பதை உணர்ந்து மனம் பட்ட பாட்டை எழுத வார்த்தைகளுக்கு வலிமையில்லை. அந்தக் காட்சியில் திரும்பத் திரும்ப 'இது கொடும பாய்... ஏன் இப்படி பண்றாங்க...இவங்கள்லாம் மனுசங்களே இல்லையா' என்ற ஷாமின் வேதனைக் கதறல் இன்னும் காதுகளை விட்டு அகலவில்லை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்
குழந்தை திரும்பக் கிடைப்பான் என காத்திருந்து வெறுத்து வேதனை மிஞ்சி, 'தொலைந்து போன மகனைத் தேடுவதை விட்டுவிடு.. உனக்கு எத்தனை குழந்தை வேண்டுமானாலும் நான் பெத்துத் தர்றேன்.. நீ திரும்பி வா' என கணவனிடம் போனில் கதறுகிறாள் மனைவி. அவளை ஆற்றுப்படுத்திவிட்டு, தன் மகனைத் தேடும் முயற்சியைத் தொடரும் அந்தத் தந்தையை, தம்பதியை படமாக்கிய யதார்த்தம் இதுவரை பார்க்காதது. அந்தக் காட்சியில் பூனம் கவுர் ஒரு சினிமா நடிகையாகவே தெரியவில்லை.

அந்தக் க்ளைமாக்ஸ்... அத்தனை இயல்பு...!
Posted by V4Tamil .com on 1:30 AM in , , , ,    No comments »

Sunday, October 27, 2013

''இந்த ரெண்டு வருசம்... எனக்கு ரெண்டு வாரம் மாதிரிண்ணே. நல்லா மல்லாக்கப் படுத்துத் தூங்குனேன். ஆசைப்பட்டதெல்லாம் வள்ளுவதக்குனு தின்னேன். என்னப் பெத்த ஆத்தா, பொண்டாட்டி, புள்ளகுட்டிகளோட நேரம் செலவழிச்சேன். ரொம்ப முக்கியமா, 'யார் நல்லவன்... யார் கெட்டவன்’னு அடையாளம் கண்டுக்கிட்டேன். அடிக்கடி குல தெய்வத்துக்குக் கும்பிடு போட்டுக்கிட்டேன். இது அந்த சாமியே எனக்குக் கொடுத்த வெயிட்டீஸ் பீரியட்ணே!'' - உற்சாகமும் பூரிப்பும் மீண்டும் வடிவேலு முகத்தில்!

'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ரீ-என்ட்ரி’ கொடுக்கிறார் வடிவேலு.

''கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த விகடகவி, தெனாலிராமன். அவனுக்கு அரசர்கிட்ட ரொம்ப நல்ல பேரு. அப்படி நல்ல பேரோட இருந்தா, சுத்துப்பட்டு ஆளுகளுக்குப் புடிக்குமா? சூழ்ச்சி செஞ்சு தெனாலிராமனை சூதுல சிக்க வெக்கிறாங்க. அதுல இருந்து எப்படி வெளில வர்றான்ங்கிற க்ளைமாக்ஸை நோக்கிப் படம் போகும்ணே.

படத்துல கிருஷ்ணதேவராயர் கேரக்டரும் வெளுத்தெடுக்கும். அதுலயும் நானே நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் தம்பி யுவராஜா சொன்னாப்ல. கருத்தான தம்பி. சொன்னா சரியாத்தான் இருக்கும்னு அந்த வேசத்தையும் நானே போட்டுக்கிட்டேன். ஏ சென்டர் கைதட்டி ரசிப்பாங்க... பி, சி சென்டர்லாம் அதிரும் பாருங்க!''



''தெனாலிராமன், அறிவுபூர்வமாப் பேசுற  ஒரு விகடகவி. நீங்க உடல்மொழியில பின்னுற கலைஞன். இந்த ரெண்டையும் சேர்த்து அந்தக் கேரக்டருக்கு எப்படி உயிர்கொடுத்திருக்கீங்க?''

'''தெனாலிராமன் தன் அறிவைப் பயன்படுத்தி அலட்டிக்காம காமெடிப் பண்ணினவர். நீங்க பாடி லாங்குவேஜ்ல பெர்ஃபாமன்ஸ் பண்றவர். உங்களுக்கு எப்புடி அந்த கேரக்டர் செட்டாகும்’னு பச்சையா, நேரடியா கேக்காம சுத்தி வளைச்சுக் கேக்கிறீங்க. உங்க சூது புரியுதுண்ணே. ஆனா, இது நல்ல கேள்வி. உங்கள மாதிரியே 'வடிவேலு நல்லாருக்கணும்’னு நினைக்கிற மிச்சம்சொச்ச நண்பர்களும் இதே கேள்வியக் கேட்டாக. அவுககிட்ட சொன்னதையே உங்கள்ட்டயும் சொல்றேன். நீங்க ஊருக்குச் சொல்லிடுங்க. கதையைச் சொன்னதும் உடனே ஷூட்டிங் கிளம்பிடலண்ணே. தினமும் காலையில டைரக்டர் என் ஆஃபீஸ் வந்துடுவார். அவரு ஒவ்வொரு சீனா சொல்லச்சொல்ல, இப்படி வெச்சுக்கலாமா, அப்படி வெச்சுக்கலாமானு விதவிதமா நடிச்சுக்காட்டுவேன். 'அண்ணே முதல்ல பண்ணினதையும், நாலாவதா பண்ணுனீங்கள்ல ஒரு மானரிசம் அதையும் சேர்த்துப் பண்ணுங்க, சரியா வரும்’னு பெஸ்டா பொறுக்கி எடுத்தார். இப்புடி ஆரம்பத்துல இருந்து க்ளைமேக்ஸ் வரை அவருக்கு லைவ்வா நடிச்சுக்காட்டி சீனை ஃபைனல் பண்றதுக்கு ரெண்டு மாசம் டயம் எடுத்துக்கிட்டோம்ணே. சந்தேகமே வேணாம்.. படம் பாருங்க பிச்சிக்கும்!''

''எந்த தைரியத்தில் கல்பாத்தி அகோரம் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கிட்டார்?''

''அப்புடில்லாம் ஒண்ணும் இல்லைண்ணே. நீங்களா ஏதாவது பத்த வெச்சிட்டுப் போய்டாதீங்க. நம்ம படத்தைப் பத்தி இந்த மாதிரி ஏகப்பட்ட வதந்தி சுத்தியடிக்குதுண்ணே. இதுக்கு முன்னயும் என்னை வெச்சுப் படம் பண்ண நிறைய தயாரிப்பாளர்கள் வந்தாங்க. ஆனா, நான்தான் நல்ல கதை வரட்டும்னு இருந்தேன். அகோரம் ஐயா அற்புதமான தயாரிப்பாளர். 'தெனாலிராமன் படத்தை உங்களை வெச்சு தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம்’னார். 'நான் எடுத்த எந்தப் பட ஷூட்டிங்குக்கும் இதுவரை போனதில்லை வடிவேலு’னு சொல்லிட்டு, சுற்றுலா போறமாதிரி குடும்பத்தோட வந்தார். மனுஷன் சொக்கத்தங்கம்ணே... ''

''உங்களைச் சுத்தி இருக்கிறவங்கள்ல 'நல்லவர் யார், கெட்டவர் யார்னு அடையாளம் கண்டுகிட்டேன்’னு சொன்னீங்களே. அவங்கள்லாம் யார் யார்னு சொல்லுங்களேன்!''

''அதைக் கண்டிப்பா சொல்லித்தானே ஆகணும். அப்பதானே மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். ஆனா, அந்தக் கச்சேரியை அப்புறமா வெச்சுக்கலாம்ணே. இத்தனை வருசமா சினிமால இருக்கேன். ஆனா, யார்ட்ட எப்படிப் பழகுறதுனு நினைச்சுப் பார்த்தாலே பயமா இருக்கு. மக்களுக்கும் சொல்றேன், நம்ம்ம்...பிப் பழகிடாதீங்க!''

''நீங்க நடிக்காத இந்த பீரியட்ல ஏகப்பட்ட காமெடியன்கள்  வந்துட்டாங்களே... உங்களுக்கு யாரைப் பிடிச்சிருக்கு?''

'''இவருக்குச் சிரிக்கக் கூடாது... அவருக்குச் சிரிக்கலாம்’னு எந்த நெனைப்பும் வெச்சுக்க மாட்டேன். நல்ல காமெடி யார் பண்ணாலும் சிரிப்பு வந்தா, சிரிச்சுத்தானே ஆகணும். ஒண்ணு ரெண்டு படங்கள்தாண்ணே பார்த்தேன். ஆனா, சிரிப்பு வரலை. முழுப் படத்தையும் உக்காந்து பாத்தா நம்ம தொழில எங்க மறந்திருவோமேனு பீதியா இருந்துச்சு. படம் பாக்குறதையே விட்டுட்டேன்.

எப்பவுமே நம்ம உடம்பைக் கெடுக்கும் சாப்பாட்டைச் சாப்பிடக் கூடாது. உனக்கு கறி சோறு சேராதுனா, அப்புறம் எதுக்கு அதை வளைச்சுக் கட்டித் திங்குற? உசுருக்கும் மனசுக்கும் கெடுதலான எந்த விஷயத்தையும் நம்ம பக்கத்துலயே அண்டவிடக் கூடாதுண்ணே. காமெடிங்கிற பேர்ல கெட்டதைக் காட்டுனா அதை பொண்டு பொடுசு, புள்ளகுட்டிகளோட உக்காந்து பார்க்க முடியுமா? அந்தக் கண்றாவியைப் பார்த்தா நமக்கு பிரஷர்தான் ஏறும். தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன். உங்க வீட்டு ரேஷன் கார்டுல எம் பேரு இல்லையே தவிர, நானும் உங்க குடும்பத்துல ஒரு பயதான். கண்ட கருமத்தையும் பாத்து கண்ணையும் மனசையும் கெடுத்துகாதீங்க!''

''தமிழக முதல்வரைச் சந்திக்க உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுதா?''

''ஏண்ணே... 'தமிழக முதல்வர்’ங்கிறது எவ்வளவு பெரிய பதவி. ஏழு கோடி மக்களை கட்டிக் காக்குறவங்க. அத்தனை பேரோட நல்லது கெட்டதுகளை முடிவெடுக்குறவங்க. அவங்களுக்குக் கட்டுப்பட்டவங்கதானே நான், நீங்க, எல்லாரும்! அவுக எப்பக் கூப்பிட்டாலும் போகாம, பார்க்காம இருக்க முடியுமா? முக்கியமான நபர்கிட்ட இருந்து சரியான தகவல் வந்தா, நான் போய்ப் பார்க்காமலா இருப்பேன்? ஆனா, நானா போய்ப் பார்க்கிறதுக்கு ஒரு காரணம் வேணும்ல! என்ன காரணம் சொல்லுவீங்க? 'தொழில் பண்றதைக் கெடுக்கிறாங்கம்மா... நடிக்க விடாமப் பண்றாங்கம்மா’னு சொல்லச் சொல்றீங்களா? நாலு சில்லறைப் பசங்க சேர்ந்து பண்ற விஷயத்தையெல்லாமா அவங்ககிட்ட கொண்டுபோறது? அவங்களுக்கு எவ்வளவு ஜோலி இருக்கும்? அதைப் பார்ப்பாங்களா, என்னைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு இருப்பாங்களா? இருந்தாலும், என்னைய பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும்ண்ணே. நான் அவங்களை எம்.ஜி.ஆர். மாதிரிதாண்ணே பார்த்துட்டு இருக்கேன்!''

''அப்புறம்... என்ன திட்டம்?''

''ஏன்ன்ன்ன்..? நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு. நான் அந்தக் கடையை மூடி ரொம்ப நாளாச்சுண்ணே. இப்போதைக்கு தெனாலிராமன்தான் என் குழந்தை. அவனை கண்ணுங்கருத்துமா வளர்க்கிறது மட்டும்தான் என் வேலை. வீட்ல உக்காந்திருக்கிற பல்லு போன பாட்டியில இருந்து, பல்லு முளைக்காத குழந்தை வரை இது எல்லாரும் பார்க்கக்கூடிய படம். அண்ணன், தங்கச்சி, அக்கா, தம்பினு ஒருத்தருக்கு தெரியாம மத்தவங்க ஒளிஞ்சு பார்க்கிற சினிமா இல்லை. ஒட்டுமொத்தக் குடும்பமும் கொத்துக் கொத்தா, கும்பல் கும்பலா உக்காந்து பார்த்து கைதட்டி சிரிச்சு ரசிக்க வேண்டிய படம். இந்தத் தெனாலிராமனை நான் கும்பிடுற குலசாமி நல்லபடியா மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்ப்பார்ணே!''
Posted by V4Tamil .com on 10:55 PM in , , ,    No comments »

taylorநியூஸிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்து, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தநிலையில் இந்த தொடரில் இருந்து நியூஸிலாந்து அணித் தலைவர் ப்ரண்டன் மேக்கல்லம் (Brendon McCullum), முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லர் (Ross Taylor) ஆகியோர் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயார்படுத்திக்கொள்ளவே, இருவரும் விலகியதாக நியூஸிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

இயன் பட்லர் (Ian Butler), லூக் ரோஞ்சி (Luke Ronchi) ஆகியோர் இவர்களுக்கு பதிலான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை வரவுள்ள நியூஸிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைவராக செயற்படுவார்.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் 10ம், 12ம் திகதிகளில் ஹம்பாந்தோட்டையிலும், மூன்றாவது போட்டி 16ம் திகதி தம்புள்ளையிலும் நடைபெறவுள்ளன.

அத்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளும் 19ம் 21ம் திகதிகளில் கண்டியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Posted by V4Tamil .com on 9:49 PM in    No comments »

llபாடகராகவும் புகழ் பெற்று வரும் நடிகர் தனுஷ், தான் அதிர்ஷ்டசாலி என தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் அமலாபால் ஜோடியாக தனுஷ் நடித்து வரும் படம் வேலையில்லாத பட்டதாரி. இப்படம் தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்திற்கு இசை அனிருத். இப்படத்திலும் தனுஷ் ஒரு மெலடிப் பாடல் பாடியுள்ளார். அப்பாடலில் இன்னும் ஓர் சிறப்பம்சம் என்னவென்றால், தனுஷூடன் அந்த மெலடி டூயட்டைப் பாடியது ஜானகியம்மா என்பது தான்.

கொலை வெறி பாடல் மூலம் உலகப் புகழ் அடைந்தார்கள் அனிருத்தும், தனுஷும். அப்பாடலிற்காக பிரதமர் மன்மோகன் சிங் தனுஷிற்கு விருந்தளித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வௌியான நைய்யாண்டி படத்திலும், டெடி பியர் என்ற பாடலைப் பாடியிருந்தார் தனுஷ்.

இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரை இசைப் பாடல்களைத் தவிர்த்து வந்த ஜானகியம்மா, இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து மெலடிப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

ஜானகியம்மாவுடன் பாடல் பாடிய அனுபவம் குறித்து தனது ட்வீட்டரில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ், ‘எங்களுக்காக மீண்டும் பாட சம்மதித்ததற்கு ஜானகியம்மாவிற்கு வேலையில்லாத பட்டதாரி படக்குழுவினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவன், அதனால் தான் ஜானகியம்மாவுடன் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது´ எனத் தெரிவித்துள்ளார்.

Posted by V4Tamil .com on 9:47 PM in    No comments »

Friday, October 25, 2013

g.vகதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சுக்கு, கதாநாயகியின் உதட்டில் முத்தம் தரக்கூடாது என்று அவரது மனைவி கட்டுப்பாடு விதித்துள்ளாராம். ‘வெயில்’, ‘ஆயிரத்தில் ஒருவன்‘, ‘தலைவா‘, ‘ராஜா ராணி‘ போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் அடுத்து ‘பென்சில்‘ என்ற படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். 


மணிநாகராஜ் இதனை இயக்குகிறார். நாயகனாக நடிப்பதுபற்றி பிரகாஷ் கூறியதாவது, பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘பென்சில்‘ படம் பள்ளி மாணவனை பற்றிய கதை. எனக்கு ஏற்ற விதத்தில் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.கூத்துப்பட்டறையை சேர்ந்த பாபு மற்றும் ‘ஆடுகளம்‘ நரேன் ஆகியோரிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். நடிப்பதற்கு என் மனைவி சைந்தவி தடை எதுவும் சொல்லவில்லை.


ஆனால் எந்த நாயகியுடன் நடித்தாலும் உதட்டில் முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது, நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார்.என் படம் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும்படித்தான் இருக்கும். நடிக்க வந்ததால் இசை அமைப்பதை நிறுத்த மாட்டேன். எனக்கு சோறுபோடுவது இசைதான் என்றார்

sanathஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிடமிருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறு அவரது மனைவி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.Ms. Sandra Tania Rosemary De Silva என்ற சனத் ஜயசூரியவின் மனைவியே இவ்வாறு விவகாரத்து கோரியுள்ளார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் 800 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jayasuriya-sandra-281x300

ஒரு பில்லியன் ரூபாவிற்கு மேல் சொத்துக்களை உடைய சனத் ஜயசூரிய பிள்ளைகளின் பாவனைக்காக இரண்டு மோட்டார் கார்களையும் வழங்க வேண்டுமென Sandra கோரியுள்ளார்.தற்போது வசித்து வரும் வீட்டையும் முழுமையாக நிர்மாணித்து தருமாறும் கோரியுள்ளார்.

வழக்குத் தாக்கல் செய்துள்ள Sandra , சனத் ஜயசூரியவின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.முதல் மனைவியை சனத் ஜயசூரிய விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Posted by V4Tamil .com on 9:20 PM in    No comments »

Thursday, October 24, 2013

Smith2(1)ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி முழுமையான ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது.

3 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றையநாள் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, இன்றையநாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

134 ஓட்டங்களுக்கு 4ஆவது விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்க அணி சார்பாக கிறேம் ஸ்மித், ஏபி.டி.வில்லியர்ஸ் இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 326 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் கிறேம் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 227 ஓட்டங்களையும் ஏபி.டி.வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 157 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சயீட் அஜ்மல் 2 விக்கெட்டுக்களையும் சுல்பிகர் பாபர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த பாகிஸ்தான் அணி 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க, தற்போது தென்னாபிரிக்க அணி 361 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 9:56 PM in    No comments »

Wednesday, October 23, 2013

australiaஇந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.றாஞ்சியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களைப் பெற்றது.

5 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டையும் 24 ஓட்டங்களுக்கு 2ஆவது விக்கெட்டையும் 32 ஓட்டங்களுக்கு 3ஆவது விக்கெட்டையும் இழந்தது. 4ஆவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்கள் பகிரப்பட்டப்போதிலும், 4ஆவது விக்கெட்டை இழந்து அவ்வணி 71 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால் கிளென் மக்ஸ்வெல், ஜோர்ஜ் பெய்லி இருவரும் சிறப்பாக ஆடி 153 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோர்ஜ் பெய்லி 94 பந்துகளில் 98 ஓட்டங்களையும் கிளென் மக்ஸ்வெல் 77 பந்துகளில் 92 ஓட்டங்களையும் மிற்சல் ஜோன்சன் 31 பந்துகளில் 25 ஓட்டங்களையும் ஜேம்ஸ் ஃபோக்னர் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும் வினய் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
2
96 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் போட்டியைத் தொடர முடியாது போக, போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 4 போட்டிகளின் நிறைவில் இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 11:17 PM in    No comments »
mano

பிரபல பின்னணிப் பாடகரான  மன்னா டே தனது 94ஆவது வயதில் பெங்களூரில் இன்று வியாழக்கிழமை  காலமானார். சுகவீனமடைந்த இவர் பெங்களூரிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே காலமானார். 
இவரது சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதுடன், இவர் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வந்ததாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல பின்னணி பாடகர் பிரபோத் சந்திரா டே என அழைக்கப்படும் மன்னா டே இந்தி, பெங்காளி, அஸ்ஸாம் மொழி, மராத்தி, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி ஆகிய மொழிகளில் பல பாடல்களைப்  பாடியுள்ளார். பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை இவர்  பெற்றுள்ளார்.
Posted by V4Tamil .com on 10:52 PM in    No comments »

Monday, October 21, 2013



இலங்கை கிரிக்கெட் அணி யின் பயிற்­சி­யா­ள­ராக அவுஸ்­தி­ரே­லிய அணியின் முன்னாள் தலை­வரும் இந்­திய அணியின் முன்னாள் பயிற்­சி­யா­ள­ரு­மான கிரேக் செப்பல் நிய­மிக்­கப்­ப­டலாம் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இ­லங்கை அணியின் தற்­போ­தைய பயிற்­சி­யா­ள­ரா­க­வுள்ள கிரஹம் போர்ட் தனது இரு ஆண்­டு­கால ஒப்­ப­ந்தம் அடுத்­த­ வ­ருடம் ஜன­வரி மாதத்­துடன் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் பயிற்­சி­யாளர் பத­வி­யி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் அணிக்­கான புதிய பயிற்­சி­யா­ளரைத் தெரிவுசெய்­வ­தற்­கான முயற்­சியில் இலங்கை கிரிக்கெட் சபை ஈடு­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லை­யி­லேயே இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக கிரேக் செப்பல் நியமிக்கப்படலாம் என
Posted by V4Tamil .com on 9:35 PM in    No comments »
kamalதெனாலி' திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது' என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

'இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது'
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Posted by V4Tamil .com on 9:32 PM in    No comments »
kilrkஉலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கையில் 400 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள கெசினோ நிலையத்திற்கு பிரச்சாரம் செய்யும் வகையில் மைக்கல் கிளார்குடன், ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரவுன்ஸ் நிறுவனம் முன்மொழிந்துள்ள கல்வி மற்றும் பயிற்சி அம்சங்கள் வெற்றிகரமாக இருந்தால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என கிளார்க் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கிளார்க், தொழில் வாய்ப்புத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவார் என்றும் கல்வித் தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்து வேலை தேடுபவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு அதரவு வழங்குவார் எனவும் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 450 அறைகளைக் கொண்ட சூதாட்ட நிலையம் ஒன்றை அமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அது தொடர்பான சட்டமூலம் ஒன்றையும் பாராளுமன்றில் சமர்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த கெசினோ திட்டத்திற்கு பிரதான எதிர்கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்கட்சிகள் மற்றும் மத பிரிவுகளும், ஆளும் கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posted by V4Tamil .com on 12:37 AM in    No comments »

Sunday, October 20, 2013

Mahendra-Singh-Dhoni_1128774

அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியில் 139 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி புதிய சாதனையை படைத்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக இருந்தபோது ஐயாயிரம் ஓட்டங்களை பெற்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையை இதன் மூலம் அவர் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மகேந்திர சிங் தோனி 139 ஓட்டங்களை பெற்றார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் மொஹமட் அசாருதீனும் ,இரண்டாவது இடத்தில் சௌரவ் கங்குலியும் இருக்கின்றனர்.
Posted by V4Tamil .com on 10:52 PM in    No comments »

Friday, October 18, 2013

vijay-in-thalaivaa-posters02நடிகர் விஜய், கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம், காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தனி மேடை போட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின், அவருக்கும் ஆளும்கட்சி தலைமைக்கும், சில முரண்பாடுகள் ஏற்பட அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம், மறைமுக அரசியலில் இறங்கினார். 

இதற்கிடையில், தலைவா படம் வெளியாக வேண்டிய தருணம் வந்தது. நடிகர் விஜயும், அவருடைய அப்பாவும், அரசியல் ரீதியாக செய்த மறைமுக கலாட்டாக்களால் கோபமடைந்திருந்த ஆட்சி தலைமை, படம் வெளியாவதற்கு சில தடைகளை மறைமுகமாக ஏற்படுத்தியது.

இதனால் நொந்து போன நடிகர் விஜய், வெறுத்துப்போய் ஊட்டிக்குச் சென்று தங்கிவிட்டார். மிக நீண்ட போராட்டத்துக்குப் பின், படம் ஒருவழியாக வெளியானது.

இருந்தாலும், தலைவா படம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தது.

தற்போது, அவர் நடித்துக் கொண்டிருக்கும், ஜில்லா படம் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவர் மீண்டும் அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

தன், விஜய் இரசிகர் மக்கள் நல நற்பணி மன்றத்தை மீண்டும் வேகப்படுத்தி, அரசியல் களத்தில் பரபரப்பாக செயல்பட வைப்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்கியிருக்கிறாராம்.

ஜில்லா படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்திருக்கிறது. அப்போது தனக்கு மிகவும் நம்பகமான சில மாவட்டத் தலைவர்களை அழைத்து, தன்னுடைய எண்ணஙகளையும், கருத்துக்களையும், அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து, விஜய் இரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, "தலைவா படம், கேரளாவில் ஓரளவுக்கு வெற்றியடைந்தது. ஆனால், தமிழகத்தில் படம், படு தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்று நடிகர் விஜய் கேட்டார். அதற்கு மாவட்டச் செயலர்கள் பலரும், பல விதமான கருத்துக்களைக் கூறினர்.

ஒரு சிலர், உருப்படியாகவும் நல்லவிதமாகவும் சில கருத்துக்களைக் கூறினர்.

அவர்கள் கூறியதாவது:

உங்களுக்கு, மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது. உங்கள் பலத்தை நீங்களே உணருவதில்லை. அப்படித்தான், தலைவா படம் வெளியீட்டுக்கு அரசு தரப்பில் மறைமுகமாக தடை ஏற்பட்டதும், நீங்கள் அரசுக்கு சரண்டர் ஆகி விட்டீர்கள்.

முதல்வரை கெஞ்சி, வாழ்த்தி அறிக்கை கொடுத்தீர்கள். இதை உங்களுடைய இரசிகர்களும், மக்களும் இரசிக்கவில்லை. படம் வெளியாக வேண்டும் என்பதற்காக, உங்கள் இமேஜை குறைத்துக் கொண்டது தவறு. நீங்கள் தைரியமாக அரசியல் செய்ய முன்வர வேண்டும்.‌

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், நடிகர் விஜய் பேசியதாகக் கூறப்படுவதாவது,

வரும் லோக்சபா தேர்தலிலேயே, நாம் யார் என்பதை, சிலருக்கு உணர்த்தியாக வேண்டும். அதனால் இப்போதிலிருந்தே, நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தலுக்குத் தயாராகுங்கள்.

கட்டாயம், 2016, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தனிக்கட்சியை ஆரம்பித்து விடலாம். அதற்கு தேவையான எல்லா விஷயங்களையும், தொடர்ச்சியாக நானும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.

Posted by V4Tamil .com on 9:43 PM in    No comments »

Monday, October 14, 2013










குறைந்த வயதுடைய எனக்கு விருது எதற்கு என்று விருதினை திருப்பி தரப்போகிறாராம் உலகநாயகன்.
மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

ஆனால் இந்த விருதை ஏற்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம் கமல்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விருதை பெற எனக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் விருதுக்கு என்னை பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும்.

அதே நேரம் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த இந்தக் கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள், இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என சிபாரிசு செய்யவும் நான் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Posted by V4Tamil .com on 10:04 PM in    No comments »

Sunday, October 13, 2013

sdfதயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிய கடனை திருப்பித் தராததால், அவர் தயாரித்துள்ள ஆரம்பம் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: 

எனது மகன் பி.ஆனந்தகிருஷ்ணன் சார்பில் இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் திகதி, ´கேடி´ என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ. 1.50 கோடி கடன் வாங்கினார்.

இந்தப் பணத்தை 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை.

தற்போது நடிகர்கள் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ள "ஆரம்பம்´ திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், என் மகனிடம் இருந்து வாங்கிய கடன் ரூ. 1.50 கோடி மற்றும் அதற்குரிய வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ. 4.60 கோடி தரவேண்டும் என அக்டோபர் 5-ஆம் திகதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸூக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.

அதனால், என் மகனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் "ஆரம்பம்´ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் நித்தேஷ் நட்ராஜ், வைபவ் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 25-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Posted by V4Tamil .com on 9:29 PM in    No comments »

Friday, October 11, 2013

downloadகௌதம் மேனன் இயக்குவதாக அறிவித்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்திலிருந்து விலகுகிறேன் என சூர்யா அதிரடியாக அறிவித்துள்ளார். ஆறுமாதங்கள் வரை அவரிடமிருந்து முழுமையான கதை வரும் என்று காத்திருந்ததாகவும், இனிமேலும் காத்திருக்க முடியாது என்பதால் கௌதம்மேனன் படத்திலிருந்து விலகுவதாகவும் சூர்யா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று மாலை சூர்யா விடுத்த அறிக்கை:

'கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் நாங்கள் இருவரும் இப்போது இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்புக்குச் செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாகக் கருதுகிறேன்.

இயக்குனர் கௌதமிடம் என்னுடைய இந்த கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்து கொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து ஒரு வருட காலம் கழிந்த பிறகும் கௌதம்இன்னும் முழு கதையை என்னிடம் திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.

'சிங்கம் - 2' திரைப்படம் முடிந்த பிறகு ஆறு மாதங்களாக முழு கதையையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டு விடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். ஒரு டெஸ்ட் {ட் செய்து கெட்டப் மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கௌதம் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன்.

பல மாதங்களாக ஷூட்டிங் போகாமல் வீட்டில் காத்திருக்கிறேன். கௌதமிடமிருந்து நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக் கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை. முன்பே, கௌதமின் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' திரைப்படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் மட்டும் ஷூட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும் கடைசியில் அந்த படம் நடக்கவில்லை.

இப்போது இந்த படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது. ஆறு மாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும், கௌதமும், கருத்தளவிலும் எதிரெதிர் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்த நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.

ஒரு திரைப்படம் உருவாவதில், பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கை இல்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன. நட்பின் அடிப்படையில் கவுதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன்.

இனி, நாங்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால், கௌதம் திரைப்படத்திலிருருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!' என்று சூர்யா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Posted by V4Tamil .com on 10:00 PM in ,    No comments »

Wednesday, October 9, 2013

images (1)

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் கால்பந்து பிரதானியுமான மணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA ) இத்தடையை விதித்துள்ளது. 
2004ம் ஆண்டு சுனாமி காலத்தில் கால்பந்து வளர்ச்சி மற்றும் பேரழிவு நிவாரண நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக மணிலால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பல சட்டதிட்டங்களை மீறி மணிலால் செயற்பட்டுள்ளார் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 8 வருட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by V4Tamil .com on 9:36 PM in ,    No comments »

Tuesday, October 8, 2013

Narziya-Nazim-Cute-Photos-Thirumanam-Ennum-Nikkah-Movie-01-300x200தமிழக திரைப்பட நடிகையான நஸ்ரியா என்பவர், தான் நடித்த திரைப்படத்தில், சில காட்சிகளில் தனது விருப்பத்துக்கு மாறாக வேறு ஒருவர் தன்னைப் போல் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்தக் காட்சிகள் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தான் சார்ந்த இஸ்லாமிய மதத்துக்கும் ஒவ்வாத வகையில் இருப்பதாகவும் ஆகவே அவற்றை உடனடியாக நீக்குமாறு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் சென்னை காவல்துறை ஆணையரைக் கேட்டிருக்கிறார்.

இவை குறித்து தான் ''நையாண்டி'' என்ற அந்தத் திரைப்படத்தின் இயக்குனரான சற்குணம் அவர்களிடம் முறையிட்டபோது அவர் தன்னை மிரட்டியதாகவும், தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தனது முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளார்.



தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நஸ்ரியா, சமீபத்தில் நடித்து தமிழில் வெளியாகியுள்ள ''ராஜா ராணி'' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார்.

''நையாண்டி'' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால், அப்படியான காட்சிகள் அந்தப் படத்தில் இருந்தால், அந்தத் திரைபடத்திற்கு தடை விதிக்கவும் நஸ்ரியா கோரியுள்ளார்.
இயக்குநர் சற்குணம் மறுக்கிறார்

நடிகை நஸ்ரியாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் சற்குணம், பாடல் காட்சியில் தான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து, அது தானில்லை என்பத நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் 'இனிக்க இனிக்க' என தொடங்கும் ஒரு பாடல் காட்சியில் நஸ்ரியா நடித்துள்ளதாகவும், இப்பாடலை படத்தொகுப்பு செய்யும் பொது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நெருக்கமான காட்சி தேவைப்படுவதாக தான் உணர்ந்ததாகவும், இதற்காக நாயகியை தொடர்பு கொண்டபொழுது, தான் கேரளா மாநிலத்தில் இருப்பதால் அந்த ஒரு குளோஸ்-அப் காட்சியை மட்டும் வேறு யாரையாவது நடிக்கவைத்து முடித்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் சற்குணம் கூறியுள்ளார். இவ்வாறு கூறிய நடிகை இப்போது தனக்கு சுயவிளம்பரம் தேடி கொள்வதற்காகவே இவ்வாறு புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

இப்படி திரைப்படம் வெளியாகும் சமையங்களில் உருவாகும் சர்ச்சைகள் விளம்பர நோக்கத்திற்கானவையே என்ற கருத்து சினிமா விமர்சகர்கள் மத்தியில் காணப்பட்டாலும், வேறு சிலரோ இது கடுமையான கண்டனத்துக்கு உரியது என்றும் தீர்வு காணப்படவேண்டிய பிரச்னை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Posted by V4Tamil .com on 10:09 PM in    No comments »

Monday, October 7, 2013










பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
சேரனின் முரண் படத்தை இயக்கியவர் ராஜன் மாதவ்.

இவர் தற்போது இயக்கும் உலா என்ற படத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பிராவோ நடிக்கிறார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ, ரசிகர்கள் மனதுக்குள் இடம்பிடித்த வீரர்.

மைதானத்தில் அவரது உடல் மொழியைக் கவனித்த இயக்குநர், தனது அடுத்த படத்தில் அவருக்கு சிறப்புத் தோற்றம் கொடுத்திருக்கிறார்.

விரைவில் தனது முதல் தமிழ்ப் படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கப் போகிறார் பிராவோ.

இந்த படத்தை ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
Posted by V4Tamil .com on 10:00 PM in ,    No comments »

Sunday, October 6, 2013

sachin-dravid-and-farewellமும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவரில் இருந்து ஓய்வு பெற்று விடைபெற்று சென்றனர்.
 இந்திய அணியின் சாதனை சிகரமும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான சச்சின் தெண்டுல்கர் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் லீக் தான், தனது கடைசி 20 ஓவர் தொடர் என்று கூறியிருந்தார்.


இதன்படி நேற்று நடந்த இறுதிப்போட்டியுடன் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பிரியா விடை கொடுத்தனர். மும்பை வீரர்களும் இருபக்கமும் அணிவகுத்து நின்று சச்சினுக்கு மரியாதை செய்தனர். 40 வயதான தெண்டுல்கர் இந்த தொடரில் மொத்தம் 70 ரன்கள் (15, 5, 0, 35, 15 ரன்) மட்டுமே எடுத்தார்.


இதேபோல், மற்றொரு ஜாம்பவான் 40 வயதான ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கும் இது தான் கடைசி 20 ஓவர் தொடராகும். அவர் இந்த தொடரில் வெறும் 48 ரன்கள் மட்டுமே (1, 31, 0, 10, 5, 1) எடுத்தார். என்றாலும் அவரது கேப்டன்ஷிப் பாராட்டும்படி இருந்தது.

 
Posted by V4Tamil .com on 10:59 PM in ,    No comments »
3பிக்கி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கமல்ஹாசன் அது தொடர்பான விழா பற்றிய அறிவிப்பிற்காக பெங்களூர் சென்றிருந்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை மீடியாக்கள் கேட்க, எல்லாவற்றுக்கும் ஆணியடித்தாற் போல பதில் சொல்லியிருக்கிறார் அவர். அதில் முக்கியமான சில கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் ‘ரொம்ம்ம்ம்ம்ப’ யோசிக்க வைக்கிற ரகம்.

‘விஸ்வரூபம்’ படத்திற்கு சிக்கல் வந்த போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்து கொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒருபோதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. ‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல ‘தலைவா’ படத்திற்கும் ஏற்பட்டது. அது பற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்?


அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைதானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்?
Posted by V4Tamil .com on 10:22 PM in    No comments »

Friday, October 4, 2013

csk-bg

சென்னை சுப்பர் கிங்ஸ்ஸின் தீவிர இரசிகன். போடாத பந்துக்கே டோனி ஆறு அடிக்கோணும் என்று ஆசைப்படுபவன். சென்னை சுப்பர் கிங்ஸ்னா அப்படியொரு வெறி. தல டோனியோட தனிப்பட்ட அபிமானி என்பதையும் தாண்டி சென்னை அணி எப்போதுமே என் தெரிவு. கடைசியாக நடந்த IPL இல் சொதப்பிய சென்னை அணியை குறை சொல்ல முடியாமல் ஒதுங்கியவன். இருந்தும் நேற்றைய ஆட்டத்தை பற்றி அறியாமல் இருக்க முடியவில்லை. 159 ஓட்டங்களுக்குள் அடக்கி விட்டார்கள் என்றுதும் மகிழ்ந்த மனம் , சென்னை ஆட்டத்தை கேட்கையில் கடுப்பாகியது.


24663

என்னதான் இவர்களின் பிரச்சினை ?  மட்டைப்பது பற்றி புள்ளிவிபரத்தோட கதைக்க எனக்கு தெரியாது. தனிப்பட்ட கெட்டித்தனங்களின் மதிப்பீடும் கிடையாது . மட்டைப்பந்தை இரசித்து பார்க்கும் ஒரு அப்பாவி இரசிகனாக என் எண்ண ஓட்டங்களையே பதிவிடுகிறேன். புள்ளியும் , விபரமும் தெரிந்து கோலம் போடத்தெரிந்தவர்கள் கோவித்துக்கொள்ள வேண்டாம்.

முடிந்த IPL இன் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் கொடுக்கும் பேட்டிகளில் டோனி சொல்லிய சாட்டுக்களைச் அப்படியே சாக்குத்தனமாக நம்பிய எனக்கு கிடைத்திருக்கும் சாட்டையடி . டோனி மீதான விமர்சனங்களை சென்னை தலைவனாக இருக்கும் ஒரே காரணத்திற்காக கண்மூடி மறுத்த என் போக்கை திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வுகள். இதுக்கு மேலயும் நான் திருந்தேல்லை என்றால் நாய் வாலாகத்தான் இருக்க முடியும்.ஒவ்வொரு ஆட்டத்தைக் காணும் போதும் கதிரை நுனிக்கு அழைத்து வந்ததன் பின்னணி என்ன ? மட்டைப்பந்தை சூதாட்டமாக பார்க்கத் தூண்டும் நடத்தைகள்.

24665
பணம் கொழிக்கும் வியாபாரமாக மட்டைப்பந்தை மாற்றிவிட்டவகளிடம் ஏமாந்து போன ஒருவனாக. நல்ல அணி ஆனால் முக்கிய சந்தர்பங்களில் அதிஸ்டம் கை கொடுப்பதில்லை என்கிற வெட்டி வாதத்தை விலத்திபார்க்க முயல்கிறேன். நல்ல தலைவனாக டோனியை சித்தரிப்பதை எதிர்க்கிறேன். நல்ல தலைமை என்பது இக்கட்டான சூழலில் பதறாமல் இருப்பது போல் காட்டிக்கொள்வதில்லை, மாறாக அந்த பதற்றத்தை தணிக்க பங்களிப்பு செய்யவேண்டும் என்பதை டோனிக்கு புரியவைக்க வேண்டும். சென்னையின் தோல்விகளுக்கு ஒட்டு மொத்தமாக டோனியை குறை சொல்வது தப்பில்லை. ஏனென்றால் சென்னை அணியின் வெற்றியையும் , பாரட்டுகளையும் மொத்தமாக டோனிக்கு குத்தகைக்கு கொடுத்தவர்கள் நாமல்லவா. அதில் ஒரு நியாமும் இருக்கத்தான் செய்கிறது. நன்றாக விளையாடுவார்களோ இல்லையோ தன் தலைமைக்கும் , பணம் சம்பாதிப்புக்கும் பாதகம் செய்யாதவர்களே அணிக்கு தெரிவு செய்வார் டோனி என்ற குற்றச்சாட்டுள்ளது .


அவரின் அண்மைய செயற்பாடுகள் ,அவரின் அணித்தெரிவு நபர்கள் அதையே உறுதிப்படுத்துகிறார்கள். தம்பி ரைனா இல்லாட்டி ஒட்டமெடுக்க ஆளில்லாமல்தான் இருக்கிறது. வயசு போன காலத்திலயும் கசி காசிக்கு போகாம இருக்க ஏதோ செய்யுது. முரளி விஜய் என்றொரு தம்பியும் இருக்கிறாராம். பத்திரிநாத்  பயலும் அங்க இங்க திரியுது. அவையள் ஏன் அணியில இருக்கினம் என்று அவைக்கே தெரியுமோ தெரியல. பாவம் பந்தையும் போட்டு , போடுற பந்துக்கும் அடிக்க வேண்டிய நிலையில் அஸ்வின்,பிராவோ.


24703
இப்படியே போச்சுன்னா பேரிச்சம் பழம் வாங்கத்தான் சென்னை அணி பயன்படும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் காசு பார்க்க நாங்கள் காய்ந்து ஆட்டம் பார்க்கிறோம். கடுப்பாயிடுவோம்....அப்புறம் நீங்க கண்டமாக வேண்டியிருக்கும். எங்களுக்கு அரவணைக்கவும் தெரியும் அரிவாள் எடுக்கவும் தெரியும் என்கி மறந்திடாதீங்க பயபுள்ளைகளே ..! Be Careful

- வெட்டி வீராசாமி. 

Posted by V4Tamil .com on 9:00 PM in    No comments »

raja_rani_theatrical_trailerவெளிவந்து ஒரே வாரத்தில் சக்கைப்போடு போட்டிக்கொண்டிருக்கும் ராஜா-ராணி குழாமிற்கு முதலில் எமது வாழ்த்துகள். புதுமுக இயக்குநர் அட்லி இன் அருமையான படைப்பு. பின்ணனி இசை, பாடல்கள் எவையும் எடுத்துக் கொடுக்காத நிலையிலும் சலிப்புத் தட்டாமல் படத்தை பார்க்க வைத்த அட்லிக்கு ஒரு பாராட்டு. நடித்தவர்கள் பற்றி தனித்தனியே சொல்வதென்றால் ஒரு பார்வைக்குள் அடக்கிவிடமுடியாது. வழமை போலவே காதா பாத்திரமாய் வாழ்ந்திருக்கும் சத்தியராஜ், தமக்கொரு அப்பா  இதுபோல் இல்லாதவர்களை ஏங்க வைக்கிறார். ஆர்யா,  சந்தானம் கூட்டணி கலக்கலுக்கு குறைவேயில்லை. பாஸ் என்கிற பாஸ்கரனில் வேலையற்ற பொறுப்பற்றவராக சுத்திவந்த ஆர்யா இதில் ஒரு வேலையிலிருக்கிறார் அவ்வளவே.


நச்சென்று இருக்கும் நஸ்ரியா நம்ளையெல்லாம் ஒருக்கால் பார்க்க வைக்கிறார். கொடுப்பா பாருங்க ஒரு வரவு குத்தாட்டத்தோட அவ்வளவுதான். அதோட கவுந்த ஆர்யா கல்யாணம் வரைக்கும் போயிர்ரார் என்றால் பாருங்களேன். மீள் வரவாய் கும் என்றிருகும் நயனுக்கு நல்லாவே சதை போட்டிருக்கு. நடிப்பில் அசத்திருக்காங்க இருந்தாலும் நஸ்ரியாவோட பார்க்கையில் வயசு தெரியுது.

Raja-Rani-Tamil-Movie-nayantara-sexy-stills-2-586x449

எல்லாரையும் தூக்கி சாப்பிடுற மாதிரி நம்ம ஜெய். நயன் கொடுமை தாங்காமா அழுவார் பாருங்க. அப்பப்பா அப்படியொரு அழுகை நாமே அழுகிற மாதிரி இருக்கும். முதல் காதலோடு முடிந்து விடுவதில்லை வாழ்க்கை என்ற சின்ன கருவை எடுத்து கொண்டு அனைவரும் பார்த்து இரசிக்கும் வண்ணம் செதுக்கியிருக்கும் அட்லி. அண்மைய உண்மை நிகழ்வுகான மதுவுக்கு நாம் அடிமை என்பதையும் காட்டாமல் இல்லை. தினசரி குடிக்கிறவராக வருகிற ஆர்யாவை  நாம் குடிகாரனாக பார்காது சாதரணமாக ஏற்றுக்கொள்வது எம்முள் எங்கோ ஒழிந்திருக்கும்  உண்மையை ஒங்கி அறைந்து சொல்லிச் செல்கிறது.

raja-rani-tamil-movie-stills-01

சங்கரின் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லி என்பதுஅவரது சின்ன சின்ன பிரமாண்டங்களில் தலைகாட்டுகிறது. மற்றப்படிக்கு படத்தை எந்தவிதமான தொய்வும் இல்லாம் ஒரு முழு நேர சித்திரமாக குடும்பத்தோடு இரசிக்க க்கூடியதாக தந்திருக்கிறார். அமைக்கப்பட்டிருக்கும் காட்சியமைப்புகள்  மணமான ஆண்களிடம் அதிகம் வரவேற்பையும் கைதட்டல்களையும் பெற்றிருந்ததை திரையரங்கில் காணக்கூடியதாக இருந்தது. குடும்பத்தோட பாருங்க. மனைவியை பக்கத்தில இருத்திட்டு மெய்மறந்து கை தட்டி குட்டு வாங்கியவனாக  என்னோட மதிப்பெண்
நூற்றுக்கு


60

Thursday, October 3, 2013

876451830rugb225இலங்கை தேசிய றகர் அணிக்கு ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள செரண்டிப் சர்வதேச றகர் கிண்ண போட்டிக்கு நாமல் ராஜபக்ஷவே இலங்கை றகர் அணியை வழி நடத்தவுள்ளார்.
Posted by V4Tamil .com on 9:19 PM in ,    No comments »

Wednesday, October 2, 2013

makaகல்வி அமைச்சினால் அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ரி.டனுசிகா 19 வயதுப் பிரிவினருக்கான கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் 2.60 மீற்றர் உயரம் பாய்ந்து முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

இதேவேளை அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீராங்கனை கே.டிலக்ஷனா 19 வயதுப் பிரிவு கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 2.50 மீற்றர் உயரம் பாய்ந்து மூன்றாம் இ;த்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்துக்குப் பிறகு தரணி இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படத்துக்கு ‘ராஸ்கல்’ எனப் பெயர் வைத்துள்ளனர். விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கதாநாயகி செலக்ஷனை நடத்திப் பார்த்தார் தரணி. மும்பையில் ரூம் போட்டு கூட யோசித்துப் பார்த்தார். ஆனால், யாருமே செலக்ட் ஆகவில்லை.

ஒருவழியாக 'இந்தா... அந்தா'வென ஹன்சிகா மோத்வானியைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார், தரணி. இதனால் கடும் கொந்தளிப்பில் தகிக்கிறார், திரிஷா. தன்னைத்தான் அந்தப் படத்துக்கு ஹீரோயினாக்குவார் என த்ரிஷா கட்டிய மனக்கோட்டை இடிந்ததுதான் இதற்குக் காரணமாம்.
இத்தனைக்கும் விக்ரம், தரணி இருவரும் த்ரிஷா, அவரது அம்மா இருவருக்கும் குடும்ப நண்பர்கள். அப்படி இருந்தும் தன்னைக் கழற்றி விட்டார்களே என்கிற ஆத்திரத்தில் இருக்கிறாராம் திரிஷா.

Posted by V4Tamil .com on 6:50 PM in , , ,    No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search