Friday, August 16, 2013

images14 ஆவது உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகள் ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெறுகின்றன. இதில் இன்று காலை  நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளின், ஈட்டி எறிதல் மகளிர் பிரிவு போட்டியில் இலங்கையின் நதீகா லக்மாலி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

"பி" பிரிவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய நதீகா லக்மாலி 60.39 மீற்றர் தூரத்துற்கு ஈட்டியை எறிந்து வெற்றி பெற்றதுடன், ஈட்டி எறிதல் மகளிர் பிரிவில் உலகின் தலைசிறந்த 12 வீராங்கனைகள் வரிசையில் இன்றைய வெற்றியுடன் தன்னையும் இணைத்துள்ளார்.

குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திக்கா ஜயசிங்கவை அடுத்து உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் நதீகா லக்மாலி தன்வசப்படுத்தினார்.
Posted by V4Tamil .com on 4:01 AM in ,    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search