• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Saturday, November 30, 2013

பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். சென்னை, மகாலிங்கபுரத்தில் தனது வீட்டில் வசித்து வந்த ரகுராமிற்கு  30ம் தேதி மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார்.


மறைந்த ரகுராமிற்கு கிரிஜா என்ற மனைவியும், காயத்ரி ரகுராம், சுஜா ரகுராம் என்ற இரு மகள்களும் உள்ளனர். கிரிஜாவும் நடன இயக்குனர் தான். இவர் பிரபல நடன இயக்குனர் கலாவின் சகோதரி ஆவார். மகள்கள் காயத்ரியும், சுஜாவும் நடன இயக்குநர்களாக உள்ளனர். இதில் காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.மறைந்த ரகுராமின் உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், “வை ராஜா வை படத்தின்” பாடல் பிடிப்பிற்காக பாங்கொக் சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த பிறகு, ரகுராமின் இறுதிசடங்கு திங்களன்று (Dec 2ம் தேதி ) நடைபெறுகிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த நிமிர்ந்து நில் முடிவடைந்த நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான தயாரிப்புகளில் ஜெயம் ரவி இறங்கியிருக்கிறார். நிமிர்ந்து நில் ஜெயம் ரவிக்கு முக்கியமான படம். அமீரின் ஆதி பகவன் தந்த அடியை நிமிர்ந்து நில்தான் சரி செய்ய வேண்டும். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் சமுத்திரக்கனி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழில் படத்தை எடுத்த பின் தெலுங்கில் மாற்றஞ் செய்து, இரு மொழிப் படம் என்கிற பூச்சு வேலையெல்லாம் இல்லை. தெலுங்கில் இதே கதையில் நவீன் பாபு என்கிற “நானி” நடித்திருக்கிறார். ஆனால் இரண்டு மொழிகளுக்கும் ஒரே நாயகி, அமலா பால். இதை அடுத்து ஆரம்பிக்க இருக்கும் புதுப்படத்தில் நயனுடன் சோடி ஜெயம் ரவி சேர்வதாக முடிவாகியுள்ளது. படத்திற்கான கதை , இயக்குநர் முடிவாகாத நிலையிலும் நாயகித் தெரிவை முடித்துவிட்டார் ஜெயம் ரவி.

’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடித்து வரும் படம் ‘ஹேபி நியூ இயர்’.


prabhu-srk-630

ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பட்த்தை ஃபாராகான் இயக்கி வருகிறார்.ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே மீண்டும் ஜோடி சேரும் இப்படத்தில் அபிஷேக் பச்சனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.நடன இயக்குனராக இருந்து இயக்குனராக புரொமோஷன் பெற்றவர் ஃபாராகான்.


பெரும்பாலான பாலிவுட் நடிகர் - நடிகைகளை நடனம் ஆட வைத்து அனுபவம் பெற்றுள்ள ஃபாராகான், தான் இயக்கும் படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஷாருக்கானை நடனம் ஆட வைக்க நம்ம ஊர் பிரபுதேவாவை அழைத்து, பட்டையை கிளப்பும் அந்த நடன காட்சியை படமாக்கியும் விட்டார்கள்! இந்தப் பாடல் காட்சியில் ஷாருக்குடன் பிரபுதேவாவும் ஆடியிருக்கிறார் இல்லையா… ஃபாராகான் மேடம்?

சிம்புவுடனான காதல் செய்திகள் வெளியானபோது தனது திரைச்சந்தை ஆட்டம் கண்டு விடும் என்றுதான் பயந்தார் ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதல் என்றதும், இதெல்லாம் எங்கே நிலைக்கப்போகிறது என்று நினைத்தது விட்டார்களோ என்னவோ, கோலிவுட்டில் ஹன்சிகாவுக்கு வழக்கம்போல் படம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, அரண்மனை படத்தில் இதுவரை நடித்திராத அளவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பதால் தனது கதாநாயகி அந்தஸ்து இன்னும உயரப்போவதாக உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. மேலும், திரையுலககில் நல்ல நிலையிருக்கும் இருக்கும் பல நாயகர்கள் தங்கள் படங்களுக்கு ஹன்சிகாவை தெரிவு செய்யுமாறு வெளிப்படையாகவே கூறி வருவதால், தனக்கான மவுசு குண்டு மணி அளவுகூட குறையவில்லை என்று நினைக்கிறாராம் ஹன்சிகா.


அதனால், யாராது காதல் கல்யாணம் பற்றி பேச்செடுத்தால், இப்போது அதைப்பற்றி யோசிக்கவே எனக்கு நேரமில்லை. எனது முழு கவனமும் நடிப்பு மீதுதான் உள்ளது என்கிறாராம். அதோடு, எப்போது வேண்டுமானாலும், காதல் வரும், எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால், சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு என்பது இப்போது மட்டும்தான் கிடைக்கும். அதனால்,. மனசை அலைய விடாமல், இப்போதைக்கு இதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதை விடுத்து காதல் கல்யாணம் என்று தன்னை மறந்து சுற்றிக்கொண்டிருந்தால், வாழ்க்கையை அமைக்க முடியாது என்று அடுத்த கேள்வி சிம்புவைப்பற்றி அவர்கள் கேட்பதற்கு முன்னமே எதிர்கேள்வி கேட்காமல் இருக்க முற்றுப்புள்ளி வைத்து விடுகிறாராம் ஹன்சிகா.

ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாகிவிட்டார்களாம். இந்நிலையில் விஜய், மோகன்லாலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். விஜய்யின் அழைப்பை ஏற்று தனது குடும்பத்தினருடன் மோகன்லால் , விஜய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். விருந்தில் லால் ஏட்டன் குடும்பத்தாரை அசத்தியுள்ளனர் விஜய் குடும்பத்தினர். அசந்துபோன மோகன்லால், விஜய் குடும்பத்தாரை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார். லாலின் அழைப்பை ஏற்று விஜய் தனது குடும்பத்தாருடன் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் மோகன் லால் வீட்டுக்கு சென்றுள்ளார். விருந்தில் கேரளத்து பாரம்பரிய உணவு வகைகளை வைத்து லால் ஏட்டன் அசத்திவிட்டாராம்,விருந்து முடிந்த உடன் தன் கையால் வரை ஆறடி ஓவியத்தை மோகன்லால் விஜய்க்கு பரிசளித்துள்ளார். அவர் விஜய்யைதான் ஓவியமாக வரைந்து கொடுத்த அந்த பரிசை பார்த்த விஜய் நெகிழ்ந்துவிட்டாராம்.

அடுத்த உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பலவீனமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.

Arjuna-Ranatunga-PTI

 இது குறித்து மும்பையில் நேற்று அவர் கூறியதாவது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக அமைந்துள்ளது. ஆனால், உலக கோப்பையை மீண்டும் வெல்லும் அளவுக்கு அந்த அணியின் பந்துவீச்சு வலுவாக உள்ளதா என்பது தெரியவில்லை. இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.


 ரோகித் ஷர்மா மிக திறமையான வீரர். சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது ஆட்டத்தை பார்த்தபோதே, இவர் ஏன் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். அந்த அளவு அவரது ஆட்டம் என்னை கவர்ந்தது. அதே போல விராத் கோஹ்லியும் திறமை வாய்ந்தவர். இடது கை ஆட்டக்காரர் ஷிகார் தவானின் வருகையால் இந்திய பேட்டிங் மேலும் வலுவாகி உள்ளது.


 அதே சமயம் பந்துவீச்சு பலவீனமாகி வருகிறது. உள்ளூரில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை. வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளைக் குவிப்பதே மிகவும் முக்கியம். தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற அணிகளுக்கு எதிராக அவர்கள் மண்ணில் சிறப்பாக விளையாடினால் தான் உண்மையான திறமை என்ன என்பது தெரியவரும்.


 தற்போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் அவ்வளவு திருப்தியாக இல்லாததால், அந்த அணியால் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சாதிப்பது கடினம். இவ்வாறு ரணதுங்கா கூறியுள்ளார்.

Posted by V4Tamil .com on 3:00 AM in    No comments »

Friday, November 29, 2013

சில வருடங்களாக தனது 150வது படம் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. திரையில் அவரது காலம் முடிந்து அவரது மகன் வயது நாயகர்களின் புதிய காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களை தூக்கி சாப்பிடுவது போல் இருக்க வேண்டும் தனது 150வது படம் என்று ஆந்திர சூப்பர்ஸ்டார் நினைப்பதில் எந்த தவறுமில்லை. கடைசியாக தனது மகன் ராம் சரண் தேஜாவின் மஹாதீரா படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார் சிரஞ்சீவி. அதன் பிறகு அரசியல் அவரை ஆட்கொண்டுவிட்டது. இந்நிலையில் ஆந்திராவில் சிரஞ்சீவியின் 150வது படம் குறித்து மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். புயல் வருவது மாதி‌ரி அவ்வப்போது இது நிகழக் கூடியதுதான் என்றாலும் இந்தமுறை படத்தை இயக்கப் போவது நம்மூர் ஷங்கர் என்ற சேதியையும் சேர்த்து கிசுகிசுக்கிறார்கள்.இந்த‌ச் செய்தியை இதுவரை சிரஞ்சீவியோ, ஷங்கரோ உறுதி செய்யவில்லை. என்றாலும் சிரஞ்சீவி - 150வது படம் - ஷங்கர் - அட, கூட்டு கலக்கலா இருக்கே என்று ஆந்திராவாலாக்கள் குதூகலிக்கிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சில வீரர்கள் சிக்கினார்கள். சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில்ஈடுபட்ட வீரர்கள், புரோக்கர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

fabio-capello_1425176c

இந்த நிலையில் இங்கிலாந்தில் கால்பந்து போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் நடந்த கிளப்புகள் இடையேயான லிக் போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பதை தேசிய குற்ற தடுப்பு ஏஜென்சி கண்டுபிடித்தனர். 3 வீரர்கள் உள்பட 6 பேர் இதில் ஈடுபட்டனர்.


இதில் ஒருவர் முன்னாள் பிரிமீயர் லீக் போட்டி வீரர் ஆவார். இவர் ஏஜென்டாக செயல்பட்டு உள்ளார். இவர்கள் சிங்கப்பூரை சேர்ந்த புக்கியிடம் ஆட்டம் குறித்து தகவல்களை பரிமாறி கொண்டுள்ளனர். இதற்காக பேரம் பேசப்பட்டது.


இவர்கள் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற தடுப்பு ஏஜென்சி கூறி உள்ளது.கால்பந்து அசோஷியேசன் மற்றும் சூதாட்டம் கமிஷன் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய குற்ற தடுப்பு ஏஜென்சி இந்த சூதாட்டத்தை கண்டுபிடித்து உள்ளது. இது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Posted by V4Tamil .com on 11:00 AM in    No comments »
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் கார் ஓட்டிச் சென்ற போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil-Daily-News_61515009404

இதனையடுத்து அவர் மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சிசிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் பால்ய நண்பரான காம்ப்ளி, சச்சினுடன் இணைந்து சிறு வயதிலேயே கிரிக்கெட் களத்தில் இறங்கியவர் ஆவார்.


இளம் வயதில் சாதனைகள் பல செய்தபோதும் அவர் கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசிக்கவில்லை. அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் காம்ப்ளி.

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து சச்சின்  ஓய்வு பெற்றபோது, தன்னை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று பெரிதும் வருத்தம் தெரிவித்திருந்தார் காம்ப்ளி .

Posted by V4Tamil .com on 9:44 AM in    No comments »

அஜீத், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த், முனிஷ், சுஹில் நடித்து வந்த வீரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இதனை பட நிறுவனம் அறிவித்திருக்கிறது. படம் பொங்கலுக்கு வெளியாவதையும் உறுதி செய்திருக்கிறது. தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு பணிகள் துவங்கி இருக்கிறது. கடைசி கட்டமாக அஜீத், சந்தானம் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. "பொதுவாக சந்தானம் நடிக்கும்போது உடன் நடிப்பர்கள் ரொம்ப தயங்குவார்கள். சந்தானத்தின் நேரநகைச்சுவையில் அவர்களும் சிரித்து விடுவார்கள். இதனால் நிறைய எடுகைகள் எடுத்துக்கொளவார்கள். ஆனால் தல அஜீத் நடிக்கும்போது சந்தானம் திணறிவிட்டார். சில காட்சிகளில் அவரே சிரித்து விட்டார். தல நகைச்சுவையிலும் நீங்கதான் தல என்றார் சந்தானம். நாங்களே தல இந்த அளவுக்கு நகைச்சுவை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் அவரது நகைச்சுவைகள் ரொம்ப பேசப்படும்" என்கிறார் இயக்குநர் சிவா.

sachin452
கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்திய சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதேபோல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் நிலையில், விருதுக்கு தேர்வு செய்தது தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.


சச்சினுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் கனகசபை என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், சச்சின் மற்றும் சி.என்.ஆர். ராவ் ஆகியோர் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்ததில், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் கூறியிருந்தார்.

Posted by V4Tamil .com on 8:00 AM in ,    No comments »
ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்த ‌ரிச்சா வாய்ப்புகள் அவ்வளவாக வராத காரணத்தால் திரைக்கு தற்காலிகமாக முழுக்கு போடுகிறார்.  அமேரிக்காவைல் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் 2008ல் சினிமாவுக்குள் நுழைந்தார் ‌ரிச்சா. தொடக்கம் எல்லாம் நன்றாகதான் இருந்தது. ஆனால் போகப் போக வாய்ப்புகள் குறைந்தன. கவர்ச்சியாக நடிக்கும்படி ஆனது. இப்போது தெலுங்கில் Bhai என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். வேறு படம் கையில் இல்லாத நிலையில் ஒதுங்கிகொள்வது என முடிவுக்கு வந்துள்ளார். மேலும் படங்கள் பார்க்க
Posted by V4Tamil .com on 4:44 AM in    No comments »
இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட்  துடுப்பாட்ட வீரரான  ரெக் சிம்சன் தனது 93 ஆவது வயதில் காலமானார்.

Reg-Simpson

இங்கிலாந்தில் மிக வயதான டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இவர் கருதப்பட்டிருந்தார்.இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பல்வேறு வெற்றிவாய்ப்புக்களுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.


ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ரெக் சிம்சன் பிராந்திய அணிகளின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று செயற்பட்டிருந்தார்.

Posted by V4Tamil .com on 3:37 AM in    No comments »
விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றிபெற்றது.

 


 இப்படத்தின் பாகம் 2 2012ஆம் ஆண்டு சக்ரி டொலட்டி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது தோல்வியடைந்தது.  தற்போது அஜித்தின் ஆரம்பம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவில் அஜித் நடித்த பில்லா 3 இன்று வெளியாகவுள்ளது.


 இவ்வாறொரு படம் குறித்த அறிவுப்புகளே இல்லாமல் படம் வெளியாகவுள்ளதா? என நினைக்க வேண்டாம். தமிழ் சினிமாவில் ஸ்டைலான திரைப்படங்களுக்கு புதியதோர் ஆரம்பத்தினை ஏற்படுத்திய அஜித்தின் பில்லா பாகம் 1 இனையே மொழிமாற்றம் செய்து பில்லா 3 என்ற பெயரில் ஆந்திராவில் வெளியிடப்போகின்றார்கள்.

Posted by V4Tamil .com on 2:31 AM in    No comments »

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பிராந்தியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


e

40 வயதான சச்சின் டெண்டுல்கர் யுனிசெவ் தூதுவராக நியமிக்கப்பட்டமை குறித்து  மும்பையில் இன்று நடைபெற்ற பைவமொன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பணிப்பாளரான டாக்டர் கரீன் ஹல்ஷோப்பும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.


இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் சுகாதார விழிப்புணர்வு செயற்றிட்டங்களிலும் பிரசாரங்களிலும் டெண்டுல்கர் ஈடுபடவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் உரையாற்றிய சச்சின் டெண்டுல்கர், தனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் இதுவெனக் கூறினார். 'யுனிசெவ் தூதுவராக என்னால் முடிந்தளவு சிறப்பாக செயற்படுவதற்கு நான் எதிர்பார்க்கிறேன்' என அவர் தெரிவித்தார்.


இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Tamil-Daily-News_97904169560

2013ல் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 4 சதம், 7 அரை சதம் உட்பட 1237 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். சக இந்திய வீரர்கள் ரோகித் 25 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1159 ரன் குவித்து 2வது இடத்திலும், தவான் 1150 ரன் குவித்து 3வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி 5வது இடத்திலும் உள்ளனர்.

அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் அதிக ரன் குவித்து முதலிடத்தை பிடிக்க கோஹ்லி, ரோகித், தவான் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருவதால், ஆஸி. வீரர் பெய்லி மேற்கொண்டு முன்னேற வாய்ப்பில்லை. அதே சமயம், பாக். வீரர் மிஸ்பா இன்னும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதால், முதல் இடம் பிடிக்க அவருக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் ரன் குவிப்பு டாப் 5 வீரர்கள் 

2013ல் இதுவரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்களில் முன்னிலை வகிக்கும் முதல் 5 வீரர்கள் பற்றிய விவரம்:

வீரர்        போட்டி    ரன்    அதிகம்    சராசரி    ரன்வேகம்    100    50

கோஹ்லி (இந்தியா)    31    1237    115*    56.22    98.17    4    7
ரோகித் (இந்தியா)    25    1159    209    55.19    82.14    2    8
தவான் (இந்தியா)    23    1150    119    54.76    98.12    5    4
மிஸ்பா (பாக்.)        28    1144    96*    49.73    71.58    0    12
பெய்லி (ஆஸி.)        22    1098    156    64.58    100    2    8

Posted by V4Tamil .com on 1:59 AM in    No comments »
Posted by V4Tamil .com on 1:22 AM in    No comments »

Posted by V4Tamil .com on 12:37 AM in    No comments »

Thursday, November 28, 2013

Posted by V4Tamil .com on 11:36 PM in    No comments »

South Indian renowned actress based in USA, Richa Gangopadhyay says it's not goodbye to acting...but cheers till next time! Richa, who is awaiting Nagarjuna's Bhai release this 25th planning to continue her studies she left in 2008 after relocating to India and briefed it in her twitter page. "I was thinking deeply for the last one year if I want to just continue doing films or pick up my studies in the US where I left off when I moved to India in 2008 to try my luck in Indian films. I intentionally did not want to sign other films after Bhai this year, even though I have been getting many offers, as I did not want to leave the projects midway."
Posted by V4Tamil .com on 11:02 PM in , ,    No comments »

'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என தலைப்பு வைத்திருக்கிறார். 'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி நடவடிக்கை மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம். ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு  விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இறுவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.குறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவையும் அந்த சீ.டி மற்றும் புகைப்படங்களில் அடங்குவதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


'தமிழில் முதல்தர நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் நிரந்தரமாகி இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக அவர் இலங்கைக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை வந்த அந்த நடிகை, 'இங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும்' பிரசாரம் செய்தார்.


இதேவேளை, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழிலதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சீ.டி.யாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீ.டி.தான் இப்போது சென்னையின் வி.வி.ஐ.பி.கள் சிலரிடம் உள்ளதாம்.இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டபோது, 'அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக' தெரிவிக்கப்படுகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்



சென்னை: சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், 20,20 போட்டிகளில் ஆடியுள்ளார். 28 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2007ம் ஆண்டு தனது சிறுவயது தோழியான நிதிகா வன்ஜரா என்பவரை திருமணம் செய்தார்.

Evening-Tamil-News-Paper_86606562138

இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கிற்கும் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பாலிகலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 21 வயதான தீபிகா பாலிகலும் சென்னையை சேர்ந்தவர்தான். இவர் இந்தியா சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

மத்திய அரசின் உயர்ந்த விருதான அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார். கடந்த  ஆண்டு ஜிம் ஒன்றில் தினேஷ் கார்த்திக்கும், தீபிகாவும் சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பில் காதல் மலரவில்லை என்றாலும் இருவரும் ஒரே உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனைகளை பெற்று உடற்பயிற்சி செய்து வந்துள்ளனர்.

நட்பாக பழக ஆரம்பித்த இவர்களுக்குள் நண்பர்கள் வாயிலாக காதல் அரும்பியுள்ளது. இதை தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்தனர். இவர்களது விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் திருமணத்திற்கு பச்சைகொடி காட்டியுள்ளனர்.

ஓராண்டு காலம் காதலித்து வந்த தினேஷ் கார்த்திக் , தீபிகா ஜோடிக்கு  சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருதரப்பை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமண தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.



Posted by V4Tamil .com on 7:48 AM in ,    No comments »

ராதிகாவின் ராடன் நிறுவனம் மலையாள சினிமா தயா‌ரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து படங்கள் தயா‌ரித்து வருகிறது. லிஸ்டினின் மே‌ஜிக் ஃப்ரேம்ஸ் தயா‌ரித்த ட்ராபிஃக்தான் தமிழில் “சென்னையில் ஒருநாள்” படமானது. சப்பாகுருஸ் படம்தான் புலிவாலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படங்களை ராடனும், மே‌ஜிக் ஃப்ரேம்ஸும் இணைந்து தயா‌ரித்தன , தயா‌ரிக்கின்றன. இதையடுத்து லிஸ்டனின் இன்னொரு மிகப்பெரிய வெற்றியான உஸ்தாத் ஹோட்டலை தமிழில் ‌மீள்தாயாரிப்பு செய்கிறார்கள். விக்ரம் பிரபு, துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளார். திலகனின் வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பதுதான் கேள்வி.இவை தவிர தனுஷ் நடிக்கும் படத்தையும் ராடன் தயா‌ரிக்க உள்ளது. அது எந்தப் படம் என்ற தகவல் இல்லை.

பூமி மட்டுமல்ல... எந்த உலகமும் பெண்களின் விழி ஈர்ப்பு விசையால் மட்டும் சுழல்கிறது என்பதே... 'இரண்டாம் உலகம்!’


ஓர் உலகத்தில்  ஆர்யா - அனுஷ்கா இருக்கிறார்கள். அவர்களிடையே காதல். இன்னோர் உலகத்திலும்  ஆர்யா, அனுஷ்கா இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடையே மோதல். இரண்டாம் உலகத்தின் 'அம்மா’ கடவுள், பூமியின் ஆர்யாவைக் கடத்தி, அந்த உலகத்தில் காதல் பூ பூக்கவைக்க முயற்சிக்கிறார். பூ பூக்கிறதா என்பது... சீரியஸ் சினிமா!

aryainside

'ஆசம்’ காதல் சினிமாக்களைக் கொடுத்த செல்வராகவனிடம் இருந்து இப்படியோர் 'ஆவ்வ்வ்’ சினிமாவா? இரு உலகங்களுக்கான ஃபேன்டஸி லாஜிக்குகளை நம்பும்படி பதிய வைத்து, வித்தியாசமான உணர்வுகளுடன் ஆர்யா-அனுஷ்காவை இரு உலகங்களிலும் உலவவிட்டு சுவாரஸ்ய லீட் எடுத்திருக்கிறார். ஆனால், 'பூமி’ ஆர்யா அந்த உலகத்துக்குச் சென்றதும், கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு மற்றும் இன்னும் பிற சங்கதிகள் அனைத்தும், 'டோட்டல் டமேஜ்!’


'அவனுக்கு உதடு கொஞ்சம் பெருசு... நல்லா கிஸ் அடிக்கலாம்’ - அனுஷ்காவின் துடுக்குத் தோழி, அனுஷ்காவின் கோபத்தைச் சமாளிக்க பேராசிரியையிடம் காதல் சொல்லும் ஆர்யா, மோதலுக்கு நடுவே காதல் முளைத்து முத்தம் கொடுக கும் அதிரடி அனுஷ்கா, 'உன்னை அயிட்டம்னு நினைச்சுட்டான்’, 'என்னை மாதிரியே இருக்கிறதால, அவளை மடக்க பாக்குறியா’,'அவளுக்குத்தான் உன்னைப் பிடிக்காதே!’  என ஆங்காங்கே செல்வா டச். வானத்தில் மட்டும் கிராஃபிக்ஸ் செய்த வெளிநாட்டு விவசாயக் கிராமம் போல இருக்கிறது அந்த இரண்டாம் உலகம். அங்கும் தமிழ் பேசுகிறார்கள் என்பது சந்தோஷமே. ஆனால், ஆண்-பெண் மோதல், கள் வெறி, அரசனின் அராஜகம், அந்தப்புர மோகினிகள் என பூமியின் அரதப்பழசான ஜெராக்ஸாகவே அந்தக் கிரகமும் இருக்குமா என்ன?


இரண்டு பாத்திரங்களில் 'பூமி’ ஆர்யா மட்டுமே வசீகரிக்கிறார். அமைதி ரியாக்ஷன், அதிரடி ஆக்ஷன் என வெரைட்டி வித்தியாசம் காட்டுகிறார் அனுஷ்கா. இரண்டு உலகங்களை இணைக்கும் வல்லமைகொண்ட 'அம்மா’ கடவுள்தான் படத்தின் பாத்திரங்களிலேயே மிகவும் பரிதாபமான கேரக்டர்.


அனுஷ்கா ரத்தம் சிந்திய இடத்தில் 'இரட்டை இலை’ பூப்பதும், தெய்வத்தின் பெயர் 'அம்மா’ என்று இருப்பதும்... எதுவும் பாதுகாப்புக் குறியீடா?


ஹாரிஸ் இசையில் 'கனிமொழியே...’, 'மன்னவனே...’ மனம் வருடும் மென்மெலடிகள். வண்ணமயமான இரண்டாம் உலகத்தைக் கொஞ்சமேனும் நம்பவைப்பது ராம்ஜியின் ஒளிச்சிதறல் ஒளிப்பதிவுதான்.


எந்த உயிர்ப்பும் இல்லாத இரண்டாம் உலகக் காதலாலும், ஸ்தம்பித்து நிற்கும் திரைக்கதையாலும் இரண்டாம் உலகத்தின் ஒவ்வொரு நிமிடமும், 'சேம் பிளட்!’


புதிய களம், புதிய கதை... எல்லாம் ஓ.கே. செல்வா. ஆனால், கற்பனை வறட்சி தாண்டவமாடும் திரைக்கதை, அந்த உலகத்தைவிட்டே துரத்தியடிக்கிறதே!

Posted by V4Tamil .com on 3:36 AM in    No comments »
Suza Kumar is an tamil actress debuted in Ethir Neechal and currently she is doing female lead role in Ajith Kumar's Veeram.
Posted by V4Tamil .com on 2:10 AM in ,    No comments »

Wednesday, November 27, 2013

நடன இயக்குநருடன் காதல் முறிந்ததும் இந்து மதத்துக்கும் தனக்குமுள்ள உறவையும் முன்னாள் டயானா ம‌ரியம் கு‌ரியன் முறித்துக் கொள்வார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் டயானா ம‌ரியம் கு‌ரியனுக்கு இந்து மதம் பிடித்துப்போக நயன்தாராவாக ஆனதுதான் ஆனபடியே என்பதை பளிச்சென்று பழனியில் தெரியப்படுத்திவிட்டார்.இப்போது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு முழுவீச்சில் திண்டுக்கல் பக்கம் கணக்கன்பட்டி கோம்பைப்பட்டியில் நடப்பதால் அம்மணி அதில் முழு ஈடுபாட்டையும் காட்டி வருகிறார்.


Posted by V4Tamil .com on 10:52 PM in    No comments »

சிந்து சமவெளி புகழ் கிளு கிளு நடிகை அமலா பால் ஆந்திரா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் புதுமுகங்களுடன் நடிக்க மாட்டேன்னு சொன்னதேயில்லை. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் அதர்வா என்ற புதுமுகத்துடனும், மைனாவில் விதார்த் என்ற புதுமுகத்துடனும் நடித்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார் இந்தப் படங்களில் நடித்த போது இவர் ஏதோ பெ‌ரிய ஸ்டார் போலவும் இரக்கப்பட்டு புதியவர்களுடன் நடித்தது போலவும் கெத்தாக எடுத்துவிட்டிருந்தார் அந்த பழைய பேட்டியை இங்கே நினைவுகூர காரணம் இருக்கிறது.தெலுங்கு, தமிழில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களுடன் நடித்த போது அறிமுக நடிகர்களை வேண்டுமென்றே தவிர்த்தவர் அமலா பால். பெரிய நாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்வேன் என்று அடம்பிடித்தது அகிலத்துக்கே தெ‌ரியும்.

The Mayan Temple water slide in the Bahamas, a detailed replica of the Temple of Doom, is the ultimate ride for Indiana Jones-style thrillseekers,Thanks to an ingenious underwater passage, intrepid visitors can zoom through shark-infested waters The terrifying ride takes visitors down a steep chute before hurtling them through a tube surrounded by 14-foot-long nurse sharks and Caribbean Reef sharks, Aptly called The Leap of Faith, the terrifying ride is part of the Aquaventure, Paradise Island resort of the Bahamas. Vice President of Marine Operations, Mark Gsellman explained why the slide is so popular with the visitors to his resort. ...
'The Leap of Faith was built to provide guests with the ultimate experience. 
Posted by V4Tamil .com on 9:54 PM in ,    No comments »

வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை மட்டைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிகாண் சுற்று போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி ஆட்டம் ஒன்றில் நேபாளம்–ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஹாங்காங் நிர்ணயித்த 144 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணிக்கு கடைசி பந்துப்பரிமாற்றத்தில் 13 ஓட்டங்க தேவைப்பட்டது. வேசாவ்கர் அடித்த எல்லை தாண்டிய ஆறு, நான்கு ஓட்ட உதவியுடன் கடைசி பந்தில் நேபாள அணி சுவாரசிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது மட்டுமின்றி 20 பந்துபரிமாற்ற உலக கோப்பை போட்டிக்கும் நேபாளம் அணி தகுதி பெற்றது. மிகப்பெரிய போட்டிகளில் நேபாள அணி விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பைக்கான தகுதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rawat was born in Malibu, California, to a Indian father and a German mother and raised in Miami, Florida. She is a graduate of New York University's Tisch School of the Arts
Posted by V4Tamil .com on 9:12 PM in ,    No comments »
கடைசி ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் சதமடித்தார். 35 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களுடன் வெற்றியை நோக்கி இந்திய அணி பயணித்துக் கொண்டிருக்கிறது.

மேற்கிந்திய தீவுகள்- இந்திய அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் கொச்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

 
3–வது ஒருநாள் போட்டி: தவான் சதம்- வெற்றியை நோக்கி இந்தியா

 

இந்த இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று காலை தொடங்கியது. தொடக்கம் முதலே மேற்கிந்திய தீவுகள் அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

அந்த அணியின் பொவெல், சாமுவேல்ஸ், பிராவோ ஆகியோர் கணிசமான ரன்களைக் குவித்தனர். பொவெல், சாமுவேல்ஸ் ஆகியோர் 70 மற்றும் 71 ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்திய அணியின் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 4 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் தவானுடன் விராத் கோஹ்லி களமிறங்கினார். ஆனால் கோஹ்லியும் 19 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் தவான்- யுவராஜ் சிங் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்தது.

தவான், 74 பந்துகளில் சதத்தைக் கடந்தார். யுவராஜ்சிங் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்திய 35 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை எடுத்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
Posted by V4Tamil .com on 2:27 AM in    No comments »
V4T_kochadaiyaan-official-trailer* 'கோச்சடையான்' தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரம்மிக்க படைத்தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.

* படத்தின் முதல் பகுதியில் 'கோச்சடையான்' ஆதிக்கம் இருக்கும். ஆர்வ மிகுதியில் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று 'கோச்சடையான்' மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை 'கோச்சடையான்' கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.

* 'கோச்சடையான்' ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே, ராணாவின் நடன ஆசிரியராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

* ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.

* படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்தப் பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

* தமிழ் தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங் பேசியிருக்கிறார்.

* படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இடைவேளை கிடையாது.

* படத்தை 3D யிலும் வெளியிட இருக்கிறார்கள். இதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.

பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்ஸனை தான் கொல்லவில்லை எனவும் அவர் தனக்குத்தானே அளவுக்கு அதிகமான செறிவுடைய மருந்தை பயன்படுத்திக்கொண்டதன்  மூலம் அவரின் மரணத்துக்கு காரணமானார் எனவும் மைக்கல் ஜக்ஸனின் பிரத்தியேக மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் கொன்ராட் மறே தெரிவித்துள்ளார்.





மைக்கல் ஜக்ஸனுக்கு அதிக செறிவுடைய மருந்தைக் கொடுத்து அவரின் மரணத்துக்கு காரணமாகிய குற்றச்சாட்டில், 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் கொன்ட்ராட் மறே. இத்தண்டனைக் காலத்தின் அரைப்பகுதியை சிறையில் கழித்தபின் 3 வாரங்களுக்குமுன் அவர் விடுதலையானார். அதன்பின் அவர் அளித்த செவ்வியிலேயே இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.


மற்றவர்கள் எண்ணுவதைப் போல் அல்லாமல், மைக்கல் ஜக்ஸனும் தானும் மிகவும் ஒரு குடும்பமாக, சகோதரர்கள் போல் பழகியதாக டாக்டர் கொன்ராட் மறே கூறுகிறார்.  60 வயதான கொன்ராட் மறே இதய சிகிச்சை நிபுணராவார்.


'எனது குடும்பத்தில் இப்போது நால்வர் மாத்திரமே இருக்கின்றனர். (பிள்ளைகளான) பரிஸ், பிரின்ஸ், பிளங்கெட் மற்றும் நீங்கள் டாக்டர் கொன்ராட்' என தனது மென்மையான குரலில் மைக்கல் ஜக்ஸன் தெரிவித்ததாக டாக்டர் கொன்ராட் நினைவுகூருகிறார்.


மைக்கல் ஜக்ஸன் தனது வாழ்க்கையின் வேதனைகள், கவலைகள் குறித்து தன்னிடம் கூறிய தருணத்தில் அவர் தனது பிள்ளைகள் தவிர தான் நம்பிக்கைக்கொள்ளக்கூடிய நபர் ஒருவரை கண்டறிந்துவிட்டதாக உணர்ந்தவராகக் காணப்பட்டார் எனவும்' அது தனது வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான ஒரு தருணம் எனவும் கொன்ராட் கூறியுள்ளார்.


கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் மாதம் 1.27 கோடி ரூபா வாடகைக்கு பெறப்பட்டிருந்த வீடொன்றில் வைத்தே மைக்கல் ஜக்ஸனுக்கும் தனக்கும் இடையிலான மேற்படி உரையாடல் இடம்பெற்றதாக கொன்ராட் மறே தெரிவித்துள்ளார்.


அந்த வீட்டில் மைக்கல் ஜக்ஸன் வசித்த மேல்மாடித் தளத்தில் தனது பிள்ளைகளையும் டாக்டர் கொன்ராட்டையும் தவிர வேறு எவரையும் மைக்கல் ஜக்ஸன் அனுமதிக்க மாட்டாராம்.


சிலவேளை அவரின் படுக்கையில் துர்நாற்றம்வீசும். படுக்கைவிரிப்புகள் முதலானவற்றை முறையாக சுத்தமாக்காமையே இதற்குக் காரணம். மைக்கல்ஜக்ஸன் தனது வீட்டுப் பணிப்பெண்ணைக்கூட அங்கு வர அனுமதிப்பதில்லை' என கொன்ட்ராட் கூறுகிறார்.





பணிப்பெண்களை உள்ளேவிட்டால் தனது பொருட்களை திருடிவிடுவார்கள் என அவர் எண்ணினார். அவரின் மிகப் பிரசித்தி பெற்ற வெள்ளைக் கையுறையை பல தடவை நான் கடந்து சென்றுள்ளேன்.  'பணிப்பெண்கள் உள்ளே வந்தால் இது காணாமல் போய்விடும் என மைக்கல் கூறுவார்' என்கிறார் கொன்ராட்.



தனது மருத்துத் தொழிலில் தனக்கு வருடாந்தம் 23 லட்சம் டொலர் வருமானம் கிடைக்கும் என்பதால் முழுநேர மருதத்துவராக பணியாற்ற வருமாறு மைக்கல் ஜக்ஸன் விடுத்த அழைப்பை நீண்டகாலமாக டாக்டர் கொன்ராட் நிராகரித்தாhம்.


எனினும், லண்டனில் ஆரம்பமாகவிருந்த தனது இசைச்சுற்றுலாக்காலத்தில் டாக்டர் கொன்ராட்டுக்கு ஒரு வருடகாலத்துக்கு மாதாந்தம் ஒரு லட்சம் டொலர் ஊதியம் வழங்க மைக்கல் ஜக்ஸன் முன்வந்ததால் அவருடன் பணியாற்ற ஒப்புக்கொண்டாரம்.


எனினும், தான் பணத்துக்கு ஆசைப்படவில்லை எனவும் அரசர்கள், அரசிகள் போன்ற தான் சாதாரணமாக சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்காத மனிதர்களை சந்திப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என மைக்கல் ஜக்ஸன் உறுதியளித்தார் எனவும் டாக்டர் கொன்ராட் கூறுகிறார்.


மைக்கல் ஜக்ஸன் குறித்த பல அந்தரங்கத் தகவல்களையும் டாக்டர் கொன்ட்ராட்வெளியிட்டுள்ளார்.



'மைக்கல் ஜக்ஸனும் நானும் எந்தளவு நெருக்கமானவர்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?. ஜக்ஸனுக்கு இரவில் சிறுநீர்கழிப்பதை கட்படுத்த முடியாதிருந்ததால் ஒவ்வொரு இரவும் நான் அவரின் உறுப்பில் சிறுநீர் கழிக்க உதவுவதற்காக பையொன்றைப் பொருத்தினேன். அந்தளவு நான் அவருக்கு நெருக்கமாக இருந்தேன். நான் அவரை கொல்வதற்கான தேவை எனக்கு இருக்கவில்லை' என்கிறார் டாக்டர் கொன்ராட்.



தனது குடும்பத்தினரிடமிருந்து தான் வித்தியாசமாகத் தெரிய வேண்டுமென்பதற்காக வெள்ளை நிறத் தோலைப் பெறுவதற்கு மைக்கல்ஜக்ஸன் விரும்பினார். அதற்காக தோலை வெண்மையாக்கும் கிறீம்களை பயன்படுத்தினார் எனவும் தானும் அவருக்கு கிறீம் பூசிவிட்டுள்ளதாகவும் கொன்ராட் கூறியுள்ளார்.



மைக்கல் ஜக்ஸன் ஓரின சேர்க்கை பழக்கமுடையவரா என்ற கேள்விக்கு  பதிலளிக்கையில், 'அவருக்கு கறுப்பு தலைமயிர் கொண்ட மெல்லிய பெண்களைப் பிடிக்கும். ஓரின சேர்க்கை பழக்கமுள்ள நபர்கள் பலர் தன்னிடம் அந்த உறவை ஏற்படுத்த முயற்சித்துப் பார்த்ததாகவும் இதனால் அவர் அசௌகரியங்களுக்குள்ளானதாகவும் என்னிடம் கூறியுள்ளார். அவர் ஓரின சேர்க்கை பழக்கம் கொண்டவர் என நான் எண்ணவில்லை. ஆனால் இதுகுறித்த பல பயங்கர அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளன' என டாக்டர் கொன்ராட் கூறியுள்ளார்.



மைக்கல் ஜக்ஸனின் பிள்ளைகளில் ஒருவராவது தனக்குப் பிறந்தவர் என நடிகர் மார்க் லெஸ்டர் கூறியமை குறித்து கேட்கப்பட்டபோது, 'இது குறித்து நான் பேசவிரும்பவில்லை. மைக்கலின் பிள்ளைகள் கேட்டால், அவர்களிடம் பேசுவேன்' என டாக்டர் கொன்ராட் பதிலளித்துள்ளார்.





Posted by V4Tamil .com on 1:48 AM in ,    No comments »
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிகெட் அணியின் தலைவர் மைக்கல் கிளார்க்குக்கு அவரின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 


இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சனை அவதூறாகத் திட்டியமையே இதற்குக் காரணம்.பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது, அண்டர்சனை மைக்கல் கிளார்க் தாகாத வார்த்தைகளால் திட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

அவர் வீரர்களுக்கான ஒழுக்கக் கோவையின் 2.1.4 ஆவது பிரிவை மீறியுள்ளதாக இப்போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றிய இலங்கையின் குமார் தர்மசேன, மூன்றாவது நடுவர் மரையஸ் எராஸ்மஸ் ஆகியோர் குற்றச்சாட்டை பதிவு செய்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது இக்குற்றச்சாட்டை மைக்கல் கிளார்க் ஏற்றுக்கொண்டார். அதையடுத்து போட்டி மத்தியஸ்தரான ஜெவ் குரோவ் 20 சதவீத அபராதம் விதித்தார்.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) விடுத்த அறிக்கையில், 'இங்கிலாந்தின் அண்டர்சனை நோக்கி மைக்கல் கிளார்க், தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். அது ஸ்டம்ப்பில் இருந்த ஒலிவாங்கி மூலமும் (மைக்) கேட்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பிரிஸ்பேன் ஆடுகளத்தில் கூறியதைவிட மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செவிமெடுத்துள்ளதாக இப்போட்டியின் பின்னர் மைக்கல் கிளார்க் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Posted by V4Tamil .com on 1:46 AM in    No comments »

Tuesday, November 26, 2013

இந்திய-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒரு நாள் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இடம்பெற்று வருகிறது.




கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று முன்னிலை பெற்றது. விசாகப்பட்டணத்தில் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி போராடி வென்றது.


இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, இறுதி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத் தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


தற்போது மதியவேளைக்காக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 264 என்ற ஓட்ட எண்ணிக்கை மேற்கிந்தியத் தீவுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Posted by V4Tamil .com on 11:09 PM in    No comments »

Friday, November 22, 2013



உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை நோர்வேயைச் சேர்ந்த 22 வயதான மெக்னஸ் கார்ல்ஸன் தோற்கடித்துள்ளார்.

 

சென்னையில் நடைபெற்ற 12 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சம்பியன்ஷிப் தொடரில்  இன்று வெள்ளிக்கிழமை 10 ஆவது சுற்றின் முடிவில் 6.5: 3.5 விகிதத்தில் கார்ல்ஸன் வெற்றி பெற்றார்.

 

இந்த 10 சுற்றுகளில் கார்ல்ஸன் 3 சுற்றுகளில் வென்றார். 7 சுற்றுகள் வெற்றிதோல்வியின்றி முடிவுற்றதால் கார்ல்ஸன் புதிய உலக சம்பியனானார்.
இதன் மூலம் உலக செஸ் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது மிக இளம் வீரர் எனும் பெருமையையும் கார்ஸன் பெற்றுள்ளார். ரஷ்ய வீரர் கெரி கஸ்பரோவும் 1985 ஆம் ஆண்டு தனது 22 வயதில் சம்பியனாகியமை உலக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

 
Posted by V4Tamil .com on 7:08 PM in    No comments »

Thursday, November 21, 2013



நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

 

பல்லேகலயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களைப் பெற்றது.

 

லூகே ரொன்சி 34 ஓட்டங்களையும் அன்டன் டேவ்சிச் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் திலகரட்ன டில்ஷான் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும்  குசல் பெரேரா 37 பந்துகளில் 57 ஓட்டங்களையும்பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். குமார் சங்கக்கார 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின ஆட்டநாயகனாக குசல் பெரேரா தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=3067#sthash.Y8632weU.dpuf
Posted by V4Tamil .com on 6:59 PM in    No comments »
Guess what is this? 05 more images and answer after the break...
Posted by V4Tamil .com on 5:53 AM in    No comments »

Monday, November 18, 2013



பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா 76ஆவது வயதில் நேற்று சென்னையில் காலமானார்.

 

நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த 'திடீர்' கண்ணையா நேற்று மரணமடைந்தார்.

 

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.

 

'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திடீர் கண்ணையா இதுவரை 500இற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

நாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனை காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனாலேயே அவர் 'திடீர்' கண்ணையா என அழைக்கப்பட்டார்.

 

அயனாவரம் சக்ரவர்த்தி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று காலை இடம்பெற்றது.

 
Posted by V4Tamil .com on 6:31 AM in    No comments »

Saturday, November 16, 2013






2014ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா படங்கள் மோதும் எனக் கூறப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், ரஜினியின் முப்பரிமாணத் திரைப்படமான கோச்சடையான் பொங்கலுக்கு திரைக்குவருமென அறிவிக்கப்பட்டது.

 

அதிக திரையரங்கில் வெளியிட்டு இலாபம் சம்பாதிப்பதே தற்போதைய கொலிவூட் படங்களின் பாணியாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 900 திரையரங்குகளிலும் கோச்சடையான வெளிவருமென கூறப்பட்டது.

 

இந்த தீபாவளிக்கு வெளியான படங்கள் திரையரங்குகளை கைப்பற்ற பெரும் போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது. இதனால் கோச்சடையான் தவிர ஏனைய படங்களில் பொங்கலுக்கு ஒதுங்கிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அஜித்தின் வீரம் வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் விஜயின் ஜில்லா வெளியாவது இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை. பெரும்பாலும் இப்படம் ஒதுங்கிக்கொள்ளும் எனக் கூறப்டுகிறது. சச்சின் தந்த பாடமாக இருக்கலாம்.

 

இதேவேளை தமிழ்சினிமாவின் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் ஒன்றாக வெளிவந்தால் வசூல் நிலைமைகள் பாதிக்கப்படலாம் என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனராம்.

 

இருப்பினும் இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி ரஜினி மற்றும் ஓப்பனிங்க கிங் அஜித் ஆகியோரின் படங்கள் ஒன்றாக திரைக்குவரவுள்ளதாக தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொங்கல் ரேஸில் யார் வெற்றிபெறுவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

 



 
Posted by V4Tamil .com on 7:31 AM in    No comments »


நியூஸிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி டக் வேர்த் லூயிஸ் விதியின்படி 36 ஓட்டங்களால் வென்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1:1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றுள்ளது.

 

3 ஆவது போட்டி தம்புள்ளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

சீரற்ற காலநிலை காரணமாக இப்போட்டி தலா 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 2.50 மணியளவில் தலா 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் n பற்றது.  திலகரட்ன தில்ஷான் 50 பந்துகளில 53 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 46 பந்துகளில்  46 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் நதன் மெக்கலம் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஷம் 26 ஓட்டங்களுக்கு மிஷெல் மெக்கிளகனன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கு 25 ஓவர்களில் 163 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவ்வணி 25 ஓவர்ளகில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களையே பெற்றது.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சச்சித்ர சேனநாயக்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணிவென்றமை குறிப்பிடத்தக்கது.

 

3 ஆவது போட்டியின் ஆட்டநாயகனாக சச்சித்ர சேனநாயக்கவும் சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக திலகரட்ன டில்ஷானும் தெரிவாகினர்.



 


 
Posted by V4Tamil .com on 7:28 AM in    No comments »

Tuesday, November 12, 2013

திரைப்பட வரலாற்றில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிசில் இரண்டாவது வார வசூலில் 200கோடி முடித்த மூன்றாவது படம் என்ற பெருமையை ராகேஷ் ரோஷனின் 'க்ரிஷ்-3' பெற்றது. தீபாவளிக்கு முன்னராக வெளியிடப்பட்டும் இந்தப் படம் புரிந்த வசூல் சாதனை அதனை ' 3 இடியட்ஸ்', 'சென்னை எக்ஸ்பிரெஸ்'சிற்கு அடுத்து 200 கோடி கிளப் உறுப்பினராகும் தகுதியை அளித்துள்ளது. இதுமட்டுமின்றி கடந்த திங்கட்கிழமை அன்று இப்படத்தின் ஒரு நாள் வசூலான 35.91 கோடி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

M_Id_407936_Hrithik-krrish-3

க்ரிஷ் வரிசையின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது அந்தப் படங்களில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ஜாதூ கதாபாத்திரத்தை இதில் ராகேஷ் ரோஷன் சேர்க்கவில்லை. ஆயினும், இந்தப் படம் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை ஒப்பிடும்போது சினிமாவை புத்திசாலித்தனமாக சித்தரிப்பதுவே வேகமாக மாறிவரும் காலகட்டங்களில் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் என்று தெரிகின்றது. தங்கள்பெற்றோர்களுடன் வந்து இந்த திரைப்படத்தை ஒரு குடும்ப நிகழ்ச்சியாக மாற்றிய குழந்தைகளுக்கே ராகேஷ் ரோஷன் நன்றி சொல்ல வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'க்ரிஷ்-3' புதிய சாதனைகளையும் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Posted by V4Tamil .com on 9:29 PM in    No comments »
தமிழில் ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மதுபாலா. இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு சினிமாவில் நடிக்காத இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவின.

 

madhubala-actress-hot-pics-wallpapers-5

இந்நிலையில், தற்போது தமிழில் ஒரு படத்தில் மதுபாலா நடிக்கவிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழுக்கு அறிமுகமாகும் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் மதுபாலா நடிக்கிறார்.

இப்படத்தை ‘காதலில் சொதுப்புவது எப்படி’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். நஸ்ரியாவின் உறவினராக, ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் மதுபாலா நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுபாலா நடிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒய்நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். 19-ந் தேதி நடக்கும் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் மதுபாலா கலந்துகொள்கிறார்.
Posted by V4Tamil .com on 9:24 PM in    No comments »
இலங்கை அணிக்கெதிரான பரபரப்பான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்களால் த்ரில் வெற்றி பெற்றது.

 



 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 117 ஓட்டங்களை; பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.

 

இடைநிறுத்தப்பட்ட ஆட்டம் டக்வோர்த்லூயிஸ் முறைப்படி 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி இலங்கை அணி 23 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. சங்கக்கார 71 ஓட்டங்களையும் டில்ஷான் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் கைல் மிலஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

 

தொடர்ந்து 23 ஓவர்களில் 198 ஓட்டங்கள் என்ற பாரிய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி இறுதி ஓவரில் 6 விக்கெட்களால் த்ரில் வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து அணி 23 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 203 ஒட்டங்களைப்பெற்றது. இறுதி ஓவரில் 24 ஓட்டங்கள் தேவைப்பட அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நதன் மெக்கலம் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்றார்.

 

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லதம் 86 ஓட்டங்கைளையும் ரொன்சி 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் இலங்கை அணியின் குலசேகர 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

போட்டியின் ஆட்டநாயகனாக லதம் தெரிவானார். தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 
Posted by V4Tamil .com on 9:11 PM in , ,    No comments »
பாகிஸ்தான்– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று பகல்– இரவாக நடந்தது.

முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவரது 15–வது செஞ்சூரி இதுவாகும். அவர் 115 ரன்னும், டுபெலிசிஸ் 46 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல் 3 விக்கெட்டும், ஜூனைத்கான் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் நிலைகுலைந்தது.

155950

அந்த அணி 35.3 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 117 ரன்னில் மோசமான தோல்வியை தழுவியது. சோயிப் மசூத் அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார். பர்னல் 3 விக்கெட்டும், பிலாண்டர், மெக்லரன், டுமினி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா 4–வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் 1 ரன்னிலும், 3–வது போட்டியில் 68 ரன்னிலும், 4–வது போட்டியில் 28 ரன்னிலும் வென்று இருந்தது. பாகிஸ்தான் 2–வது ஆட்டத்தில் 66 ரன்னில் வென்று இருந்தது.

இதனால் தென்ஆப்பிரிக்கா 4–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் சமநிலையில் முடிந்தது. இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
Posted by V4Tamil .com on 2:01 AM in    No comments »

Monday, November 11, 2013

2925166941பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  பயிற்­றுநர் டேவ் வட்­மோரின் பத­விக்­கா­லத்தை நீடிப்­ப­தில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 
எதிர்­வரும் டிசெம்பர், ஜன­வரி மாதங்­களில் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெ­ற­வுள்ள இலங்கை அணி­யு­ட­னான சுற்­றுப்­போட்­டியே  வட்­மோரின் பயிற்­சியின் கீழ் பாகிஸ்தான் அணி விளை­யாடும் கடைசி  சுற்­றுப்­போட்­டி­யாக அமையும்.

அதன்­பின்னர் பெப்­ர­வரி இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள ஆசிய கிண்ணப் போட்­டி­க­ளின்­போது பாகிஸ்தான் அணியின் பயிற்­று­ந­ராக வேறொ­ருவர் நிய­மிக்­கப்­ப­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்­ணத்தை வென்­ற­போது அணி யின் பயிற்­று­ந­ராக திகழ்ந்த டேவ் வட்மோர், கடந்த வருடம் மார்ச் மாதம் பாகிஸ்தான் அணியின் பயிற்­று­ந­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
ஆனால் அதன்­பின்னர் பாகிஸ்தான் அணி பல சுற்­றுப்­போட்­டி­களில் தோல்­வி­யுற்ற­ மையால் வட்­மோரின் செயற்­பா­டுகள் தொடர்­பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதி­கா­ரிகள் அதி­ருப்தி கொண்­டுள்­ள­ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்­த­லை­வர்கள், பயிற்­று­நர்கள் சிலரும் வட்­மோரை நீக்க வேண்­டு­மென கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தனர்.
கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற ஐ.சி.சி. சும்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஒரு போட்­டி­யிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறத் தவ­றி­யது.
அதை­ய­டுத்து வட்­மோரை பதவி நீக்கம் செய்­வ­தற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயற்­சித்­த­தா­கவும் ஆனால், அவரை திடீ­ரென பதவி நீக்கம் செய்­வ­தற்கு 3 மாத­கால சம்­பளம் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதை கருத்­திற்­கொண்டு அத்­திட்­டத்தை கைவிட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

தற்­போது ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெறும் தென்­னா­பி­ரிக்­கா­வு­ட­னான ஒருநாள் தொட­ரிலும் பாகிஸ்தான் அணி தோல்­வி­யுற்­றுள்­ளது. இந்நிலை­யி­லேயே வட்­மோரின் பத­விக்­கா­லத்தை நீடிப்­ப­தில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்­மா­னித்­துள்­ளது.

வட்­மோரின் பயிற்­சியின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இது­வரை டெஸ்ட் தொடர் எதிலும் வெற்றி பெற­வில்லை. அவரின் பத­விக்­கா­லத்தில் விளை­யா­டிய 10 டெஸ்ட் போட்­டி­களில் 2 போட்­டி­களில் மாத்­தி­ரமே பாகிஸ்தான் அணி வென்­றுள்­ளது.
பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்­று­ந­ராக உள்­நாட்டைச் சேர்ந்த ஒரு­வரை நிய­மிப்­ப­தற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்­பு­கி­றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்­கால நிர்­வாகக் குழுவின் தலை வர் நஜாம் சேத்தி இது தொடர்­பாக கூறு­கையில், “இப்­ப­யிற்­றுநர் குறிப்­பி­டத்­தக்­க­ளவு தனது பணியை செய்­துள்ளார்.

ஆனால் அவரின் பத­விக்­காலம் பெப்­ர­வரி மாதம் முடி­வ­டை­கி­றது. உள்­நாட்டுப் பயிற்­றுநர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டு­மென அதிக அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­கி­றது என்­பதை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை” என்றார்.

“வெளி­நாட்டுப் பயிற்­று­நர்­க­ளுக்கு நாம் எதி­ரா­ன­வர்கள் அல்லர். வெளி­நாட்டுப் பயிற்­று­நர்­களால் எமது வீரர்­க­ளுடன் சுதந்திரமாக உரையாட முடியாமைதான் எமது பிரச்சினையாகும்.

இவ்வீரர்கள் சிறப்பாக ஆங்கிலம் கற்றவர்கள் அல்லர். இதனால், வீரர்களும் பயிற்றுநர்களும் பரஸ் பரம் உரையாடுவதிலும் முழுமையாக புரிந்துகொள்வதிலும் சிரமத்தை எதிர்நோக் குகின்றனர்” எனவும் நஜாம் சேத்தி கூறி னார்.

 
Posted by V4Tamil .com on 9:43 PM in    No comments »

Sunday, November 10, 2013

2902arambamஅஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடித்த 'ஆரம்பம்' திரைப்படம் அமெரிக்காவில் இதுவரை 369150 டொலர்களை வசூலித்துள்ளது.

அமெரிக்கத் திரையரங்குகளில் அதிக வசூல் குவித்த படங்களில் ஆரம்பம் 5 ஆவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் ஆரம்பத்தைவிட அதிகம் வசூல் குவித்த ஏனைய 4 படங்களும் ரஜினி மற்றும் கமலின் சுப்பர்ஹிட் திரைப்படங்களாகும்.

இப்பட்டியலில் முதலிடத்தில் ரஜினியின் 'எந்திரன்' படம் உள்ளது. 'விஸ்வரூபம்', 'சிவாஜி', 'தசாவதாரம்' ஆகியன முறையே 2,3,4 ஆம் இடங்களில் உள்ளன.

 
Posted by V4Tamil .com on 9:09 PM in    No comments »

Wednesday, November 6, 2013

kamal11களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. விஸ்வரூபமாய் தொடரும் தலைமுறைகளை வென்ற தனி அவதாரம் கமல்.

முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!



'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில்,பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் கமல் நடித்ததே இல்லை!

கமல் நடித்த படங்களைப் பாராட்டி பாலசந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் அழைப்பார்!

கமலின் தந்தை உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன், சந்திரஹாசன், கமல் மூவரும் சிதையின் அருகில் நிற்க, திரும்பிப் பார்த்த கமல் 'அண்ணா, நீங்களும் வாங்க' என இருவரை அழைத்தார். அவர்கள் ஆர்.சி.சக்தி, ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா. கதறித் துடித்தபடி அவர்களும் கொள்ளிவைத்தனர்!


ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!

எண்பதுகளின் மத்தியில் 'மய்யம்' என்ற இலக்கியப் பத்திரிகையைக் கொஞ்ச காலம் நடத்தினார் கமல்!

எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!

ஆரம்பத்தில் 'சிவாலயா' என்ற நடனக் குழுவை ஆரம்பித்து நடத்தினார் கமல்.அதற்குப் பிறகுதான் நடன உதவியாளராக தங்கப்பனிடம் சேர்ந்தார்!

ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்'தான் கமலைத் தனிகதாநாயகனாக ஆக்கியது. ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்த படம்'பட்டாம்பூச்சி'!

'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்!

கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு, முற்றுப்பெறாத கனவுகளில் ஒன்று...'மருதநாயகம்'!

கடவுள் மறுப்புக்கொள்கையைக் கொண்டவர் என்றாலும், ஆத்திகத்தை கமல்விமர்சனம் செய்வதில்லை!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,பெங்காலி மொழிப் படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்!

தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல். சினிமாவில் இத்தகைய முன் மாதிரி இவர்தான்!

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!

கமல், சாருஹாசன், சுஹாசினி என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள்!

'ராஜபார்வை' முதல் தம்பியுடன் இருந்து அலுவலகத்தைக் கவனிக்கிறார் அண்ணன் சந்திரஹாசன். கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான் இருக்கிறது!

ஏதோ மன வருத்தம்... சாருஹாசனும் கமலும் இப்போதும் பேசிக்கொள்வதுஇல்லை!

பிரசாத் ஸ்டுடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகியிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகுதான் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில்நுட்பத்தின் மீதுகொண்ட தீராத ஆர்வம்தான் காரணம்!

வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு இறந்துபோன நாய்க்காகக் கண்ணீர்விட்ட தருணங்களும் உண்டு!

'ஹே ராம்' படம் முதல் டைரக்ஷனாக வெளிவந்தாலும், முன்னமே 'சங்கர்லால்'படத்தை, டி.என்.பாலு இறந்து போக, முக்கால்வாசிக்கு மேல் இயக்கியிருக்கிறார்!



கமல் மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்த மனிதர் மறைந்த அனந்து. தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த நண்பர் என்ற அன்பு அவர் நெஞ்சு நிறைய உண்டு!

அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கமலின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கிறது!

பட்டு வேட்டி பிடிக்கும். தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தால், அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்!

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி,கன்னடம், பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்!

ரஜினிக்குப் பிடித்த படமான 'முள்ளும் மலரும்' படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்தவரே கமல்தான்!

'உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?' என்று கேட்டால், 'நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம்' என்பார்.

கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்'ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!

'சட்டம் என் கையில்' படம்தான் கமல் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் என்பது பலரும் சொல்லும் தகவல். ஆனால், அவர் 'பார்த்தால் பசி தீரும்'படத்திலேயே சின்ன வயதில் டபுள் ரோல் பண்ணியிருக்கிறார்!

ஊர்வன, பறப்பன, ஓடுவன என அனைத்தையும் சாப்பிடும் அசைவப் பிரியர் கமல். ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து, சமைத்துச் சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம். அந்த நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள் பசியாறி விடுவார்களாம்!

ஆஸ்கர் விருது பெற்ற 'டிராஃபிக்' படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர்ஸ்டீபன் சோடர்பெர்க்கைப் போன்று ஒரு ஸ்டெடிகேம் கேமராவை இடுப்பில் கட்டி, லென்ஸைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன் யூனிட்'டாக ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின் நீண்ட நாள் ஆசை!

நடிகர் நாகேசுக்கும் கமலுக்குமான உறவு 'அப்பா-மகன்' உறவு போன்றது. தன்னை 'கமல்ஜி' என்று நாகேஷ் அழைக்கும்போது, 'எதுக்கு அந்த ஜி' என்ற கமலிடம், 'கமலுக்குள்ள ஒரு நாகேஷ் இருக்கலாம். ஆனால், நாகேசுக்குள்ள ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை' என்பாராம் நாகேஷ்!



கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில் துளியும் நம்பிக்கை கிடையாது. 'ஹே ராம்' படத்தின் முதல்வசனமே இப்படித்தான் இருக்கும்... 'சாகேத்ராம் திஸ் இஸ் பேக்-அப் டைம்'!

நல்ல மூடு இருந்தால், நண்பர்களிடம் தன் கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விரல் ஜாலங்களை, குரல் ஜாலங்களுடன் கேட்கக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.இருந்தும் ஏனோ, இன்னமும் தொகுப்புகளாக வெளியிடாமல் தாமதிக்கிறார் கமல்!

''சந்திக்கும் மனிதர்களின் பேச்சுக்களை, நடவடிக்கைகளை நகலெடுப்பது போல்கவனிக்கும் ஆற்றல் எனக்குத் தெரிந்து சிலருக்கே உண்டு. இந்த ஆற்றல்கைவரப்பெற்றவர்கள் வரிசையில் முக்கியமான இடம் கமலுக்கு உண்டு''என்கிறார் யூகி சேது!

'மர்மயோகி'யில் கமல் ஒரு அகோரி கேரக்டர் செய்வதாக இருந்தார். கொஞ்சகாலத்துக்கு முன்பு நீண்ட தாடி வளர்த்தது அதற்காகத்தான். 'சாமா சானம்' என்றுதொடங்கும் பாடல் ஒன்றைக்கூட இதற்காகத் தயார் செய்துவைத்திருந்தார்.'மர்மயோகி' டிராப் என்றவுடன் தாடியை எடுத்துவிட்டார்!

நன்றாகத் தமிழ் பேசும் ஹீரோயின்களை கமலுக்கு மிகப் பிடிக்கும். தமிழ்க் கதாநாயகிகள் அதிகம்வருவதில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அதனால்தான் அபிராமியையும் சினேகாவையும்அழைத்துத் தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார்!

'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமல் முன்பு நடத்திய 'மய்யம்'பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில்,கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!

பாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்தார் கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகில் இருந்து முதன்முதலில் எழுந்த எதிர்க்குரல் கமலுடையது!

முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்குப் பிடித்தமானது. கூடவே பிளாக் டீ!

4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டி.வி-யில் கமலின் பிறந்த நாளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம் நடத்தினார்கள். ஒரு நடிகரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நடத்தப்பட்ட முதல் கவியரங்கம் அதுதான்!

'ஆளவந்தான்' ரிலீஸின்போது, 'இனிமேல் 100 நாட்கள் எல்லாம் படம் ஓடாது. சினிமா பார்ப்பது வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி. சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அருகில் உள்ள பெட்டிக் கடையில் வாழைப்பழம் கிடைக்க வேண்டும்' என்று சொல்லி, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கமல்தான்!

'யாரையாவது டின்னருக்கு அழைக்க வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்?'என்று ஒருமுறை கமலிடம் கேட்கப்பட்டபோது, 'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து, ஆட்டுப் பாலும் நிலக்கடலையும் பரிமாற விருப்பம்' என்று பதில் சொன்னார்!



'நாகேஷ், தன்னுடைய திரையுலக காமெடி வாரிசை உருவாக்காமல் போய்விட்டார். அந்தத் தவறை நானும் செய்ய மாட்டேன்!' அண்மையில் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான காரணமாக நண்பர்களிடம் கமல் பகிர்ந்து கொண்டது இது!

சென்னை புறநகரில் ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டுவதற்காக கமல் இடம்வாங்கிப்போட்டிருக்கிறார். அனைத்துவிதமான தொழில் நுட்பங்களுடன் கூடிய சினிமா தியேட்டர்களும், கேளிக்கை பூங்காக்களும், ரெஸ்டாரென்ட்டுகளும் அங்கு இருக்கும்!

தமிழ் சினிமாவை 'கோலிவுட்' என்று பலரும் சொன்னாலும் கமல் அந்த வார்த்தையை உச்சரிக்க மாட்டார். அப்படிச் சொல்லவேண்டாம் என மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!

வீட்டில் நான்கு கார்களை வைத்திருக்கும் கமல்ஹாசன் புதிதாக ஹம்மர் ஹெச்2 என்னும் காரை 1.8 கோடி ரூபாய் விலையில் வாங்கியிருக்கிறார். இது ஸ்டாலின் வைத்திருக்கும் ஹம்மர் ஹெச்3 காரைவிட காஸ்ட்லி!

'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!
Posted by V4Tamil .com on 10:30 PM in    No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search