Wednesday, January 8, 2014

களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போனவர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டிக்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இறங்கினார் ஓவியா.



ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப்பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் கமர்சியல் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மதயானைககூட்டம் படத்தில் நடித்த அவர் தற்போது புலிவால் என்ற படத்துக்காக மறுபடியும் கவர்ச்சி அரிதாரம் பூசியிருக்கிறார்.

கலகலப்பு படத்தில் நடித்தபோது இருந்ததைவிட, தற்போது தனது உடம்பில் பூசினாற் போன்று சதை போட்டிருக்கும் ஓவியா, புலிவால் படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக கவர்ச்சியான உடைதரித்து கலக்கல் நடனமாடியிருக்கிறார்.

இதேபடத்தில் இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அனன்யாவை தனது கவர்ச்சியால் ஓரங்கட்டியிருப்பவர், இதன்பிறகு அதிரடி கிளாமர் ஹீரோயினாக மாறவும் முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்.அதனால், கமர்சியல் டைரக்டர்களாக தேடிப்பிடித்து படவேட்டையை தொடங்கியிருக்கிறாராம் ஓவியா.
Posted by V4Tamil .com on 10:51 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search