Wednesday, January 8, 2014



தொழிற்­சாலை விபத்­தொன்றில் இரு கரங்­க­ளி­லு­முள்ள மணிக்­கட்­டிற்குக் கீழா­ன­ப­குதி மோச­மான உருச்­சி­தை­வுக்­குள்­ளான இளைஞர் ஒரு­வ­ருக்கு சேத­ம­டைந்த உள்­ளங்கைப் பகு­தி­யையும் விரல்­க­ளையும் பயன்­ப­டுத்தி குற­டு­களைப் போன்ற புதிய கரங்­களை சீன மருத்­து­வர்கள் ஏற்­ப­டுத்தி சாதனை படைத்­துள்­ளனர்.
 
வாங் ஜின் (18 வயது) என்ற மேற்­படி இளைஞர் கடந்த டிசம்பர் 11 ஆம்­ தி­கதி இரவு தொழிற்­சாலையில் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்­த­ வேளை அவ­ரது கரங்கள் இயந்­தி­ரத்தில் சிக்கி உருச்­சிதைந்­தன.
 
இத­னை­ய­டுத்து ஹுனான் மாகா­ணத்தில் சங்ஷா நக­ரி­லுள்ள ஸியாங்யா மருத்­து­வ­ம­னைக்கு அவர் சேத­ம­டைந்த கரப்­ப­குதி சகிதம் கொண்டு செல்­லப்­பட்டார்.

இந்­நி­லையில் அந்த மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­து­வர்கள் துரி­த­மாக செயற்­பட்டு அவ­ரது துண்­டிக்­கப்­பட்ட உள்­ளங்கைப் பகுதி முழு­மை­யாக சேத­ம­டை­யாத விரல்கள் என்­ப­வற்றைப் பயன்படுத்தி குறடுகள் போன்ற கட்டமைப்பைக் கொண்ட புதிய கரங்களை அவருக்கு வழங்­கி­­­யுள்­ள­னர்.
Posted by V4Tamil .com on 10:29 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search