தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவில் கட்ட இருப்பதாக ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஷங்க்ர் ராவ் என்பவர் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஷங்கர் ராவ், தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் இன்று காலை சோனியா காந்தியின் வெண்கலச் சிலையை கொண்டுவந்தார். தெலுங்கான உருவாக முழுமுயற்சி செய்த காங்கிரஸ் தலைவி சோனிகா காந்திக்கு கோவில் கட்ட இருப்பதாகவும், அதில் வைக்க தயாராகிவிட்டதாகவும் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த கோவிலுக்கு "சோனியா காந்தி சாந்திவனம்" என பெயரிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இன்று காலை ஷங்கர் ராவ், தனது குடும்பத்துடன் கோவில் கட்ட இருக்கும் இடத்திற்கு நேரில் வருகை தந்து சோனியாவின் சிலையை பார்வையிட்டார். சிலை செய்வதில் விருது பெற்ற சிற்பி பிரசாத் என்பவர் இந்த சிலையை வடிவமைத்துள்ளார்,.
பாரதிய ஜனதா கட்சியினர் இந்த கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவில் அமிதாப்பச்சன், எம்.ஜி.ஆர், குஷ்பு ஆகியோர்களுக்கு கோவில் கட்டியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவில் கட்ட இருப்பதாக ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஷங்க்ர் ராவ் என்பவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment