கடந்த 1 வாரமாக தேடப்பட்டு வந்த மராத்திய நடிகை அல்கோ புனேகர் இன்று சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் சிறிய வேடங்களில் நடித்து வருபவர் அல்கா புனேகர்(49). தானே பகுதியில் கணவருடன் வசித்து இவர் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி காணாமல் போனார்.
இது குறித்து அவரது கணவர் சஞ்சய் புனேகர் கோபுரி பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அல்கா நவி மும்பைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 27 ம் திகதி புறப்பட்டு சென்றதாகவும், அங்கிருந்து புனே செல்ல திட்டமிட்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், அல்கா பயணம் செய்த கார் ராய்காட் மாவட்டத்தில் காபோலி பகுதியில் 700 அடி ஆழமான பள்ளத்தாக்கில் உருக்குலைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உருக்குலைந்த காரில் சோதனையிட்டபோது, அல்காவின் கைப்பேசி சிக்கியது.அதில் அவருடன் அலோக் பலிவால் மற்றும் சஞ்சய்குமார் சோன்கர் ஆகியோர் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது.
சஞ்சய்குமார் சோன்கர் அல்காவின் முன்னாள் நண்பர் ஆவார். அவருக்கு பின்பு அலோக் பலிவாவால் என்பவருடன் அல்காவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 24 வயது எம்.பி.ஏ பட்டதாரியான அலோக் பலிவால் மும்பையில் பொறியியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் நடிகை அல்கா கடந்த 1 வருடமாக நெருங்கி பழகி வந்தது விசாரணையில் அம்பலமானது.
மேலும், கணவர் கண்டித்த போதும், அவரது எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவரின் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்ட அல்காவும், அவரது காதலனும் இதற்காக முன்னாள் நண்பர் சஞ்சய் குமார் உதவியை நாடியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கார் விபத்து மற்றும் தானேயில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகம் ஆடியுள்ளார்கள்.
இந்நிலையில் தானேயில் அல்காவின் முன்னாள் நண்பர் சஞ்சய்குமார் பொலிசில் சிக்கினார். அவர் மூலமாக நடிகை அல்கா வையும், காதலனையும் காரில் தப்பிக்க வைத்து நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சஞ்சய்குமாரை கைது செய்த பொலிசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் நடிகை அல்கா, காதலன் அலோக் பலிவாலுடன் தலைமறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தானே பொலிசார் ரகசியமாக சென்னை சென்று நடிகை அல்காவையும், அவரது காதலரையும் கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து அவர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திய பொலிசார் ‘நடிகை அல்கா உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதி. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment