Wednesday, January 8, 2014

தனது 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தனது 50வது பிறந்தநாளை வரும் 17ம் தேதி கொண்டாடுகிறார். ஆனால் அவரின் பிறந்தநாள் பார்ட்டி வரும் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது. பிறந்தநாளையொட்டி ஒபாமா தனது மனைவிக்கு ஒரு பரிசை அளித்துள்ளார்.





ஒபாமா தனது மனைவி மிஷல் மற்றும் மகள்கள் மாலியா(15), ஷாஷா(12) ஆகியோருடன் ஹவாயில் விடுமுறையை கழிக்கச் சென்றார். அவர் மகள்களை அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட்டார். ஆனால் மிஷல் கணவரின் பிறந்தநாள் பரிசாக கூடுதல் நாட்கள் ஹவாயில் இருந்துவிட்டு வரவிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் வரும் 18ம் தேதி நடக்கும் தன்னுடைய 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு மிஷல் சிலருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பில் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.


பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு, சவுகரியமான ஷூக்கள் அணிந்து, நடன அசைவுகளை ஒத்திகை பார்த்துவிட்டு வருமாறு மிஷல் விருந்தாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விருந்தில் சாப்பாடு வழங்கப்படாதாம். இந்த நிபந்தனைகள் பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது.


மிஷல் யார், யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் ஹிப் ஹாப் கலைஞர் ஜே ஜி மற்றும் அவரது மனைவியும், பாப் பாடகியுமான பியான்ஸே நோலஸ் ஆகியோரும் நிச்சயம் விருந்துக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Posted by V4Tamil .com on 10:32 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search