மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி இன்று பகல் 11.30 மணியளவில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற ஆணையாளர் அ.பிறேம்சங்கர், மல்லாகம் நீதிமன்ற நீதிபதிகளான சி.சதீஷ்கரன், மேலதிக நீதிபதி மொகமட் போன்றோர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து மேளவாத்தியம்இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, மல்லாகம் மகா வித்தியாலயம், உடுவிஜல் மகளிர் கல்லாரி மாணவ மாணவிகளின் மேலைத்தேய பேன்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அத்தோடு தேசியக்கொடி ஏற்றல், நினைவுப் பலகை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றன. தொடர்ந்து நீதிமன்றக் கட்டிடத்தை பிரதம நீதியரர் திறந்து வைக்கும் நிகழ்வு
இடம்பெற்றது.
0 comments:
Post a Comment