இயக்குனருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தான் நடித்தப் படத்துக்கே ஆபாசப்பட விம்பத்தை ஏற்படுத்தியவர் நஸ்ரியா. அவரின் நவயுக அநாகரீகம் தெரிந்தும் அவரில்லையேல் என் படம் இல்லை என்று பாலாஜி மோகன் தனது படத்தில் நடிக்க வைக்கிறார். எது மாறினாலும் நஸ்ரியா மாற மாட்டார் என்கிறார் ஜீவா.
ஆனால் ஆந்திராவைப் பாருங்கள். ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ரபாஷா படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நஸ்ரியா. முதலிரவு காட்சியொன்றில் நடித்த பிறகு, அது என் மதிப்பு நிலை பாதிக்கும் அந்த காட்சியை அழித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதெல்லாம் மாற்றா முடியாது என்று கறாராகச் சொன்ன இயக்குனர், நஸ்ரியா தொடர்ந்து அடம்பிடிக்கவே, முதலிரவு காட்சிக்குப் பதில் நஸ்ரியாவையே படத்திலிருந்து தூக்கிவிட்டார். அதனால் நஸ்ரியாவின் ஆந்திரா வரவு ஆரம்பத்திலேயே சொதப்பிவிட்டது.



