Monday, December 16, 2013

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4வது வீரராக களமிறங்கப் போவது யார் என்பதில் விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா இடையே கடும் போட்டி நிலவுகிறது.அதே சமயம், மிக முக்கியமான 4வது இடத்தில் இளம் வீரர் விராத் ஆட்டம் எந்த அளவுக்கு எடுபடும் என்பதும் சுவாரசியமான கேள்வியாகவே உள்ளது. நான்காவது வீரராக ரோகித் ஷர்மாவை களமிறக்க வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அந்த இடத்தில் விராத் கோஹ்லியை பயன்படுத்த கேப்டன் டோனி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

kohli

அதை உறுதி செய்யும் வகையில், பினோனியில் நடந்த வலைப் பயிற்சியின்போது இந்திய அணி வேகங்கள் இஷாந்த், முகமது ஷமி, புவனேஷ்வர் ஆகியோர் கோஹ்லிக்கு அதிவேக பவுன்சர்களை வீசினர். அவற்றை லாவகமாக எதிர்கொண்ட அவர், சில பந்துகளை சிக்சருக்கு தூக்கி அசத்தினார். எனினும், தென் ஆப்ரிக்க வேகங்களுக்கு எதிராக இது எடுபடுமா என்பது தெரியவில்லை.


இந்திய ஆடுகளங்களில் அடித்து நொறுக்கிய தவான், ரோகித், விராத் ஆகியோர் தென் ஆப்ரிக்காவுடன் நடந்த ஒருநாள் தொடரில் பெரிதாய் சாதிக்க தவறியது டோனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராகவும், டெஸ்ட் போட்டிகளில் 5வது வீரராகவும் விளையாடி வரும் கோஹ்லி, சச்சினின் இடத்தை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. 4வது வீரராக களமிறங்குவதில் அவருக்கு எந்தவித சிரமமும் இருக்காது என நினைக்கிறேன். அதைப் பற்றி அவரும் பெரிதாக கவலைப்படவில்லை. அதிக ரன் குவிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் அவரைப் போன்ற வீரர்கள், பேட்டிங் வரிசையில் முன்கூட்டியே களமிறங்க தயங்கமாட்டார்கள்’ என்று தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் கூறியுள்ளார். பினோனியில் நடைபெற இருந்த 2 நாள் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
Posted by V4Tamil .com on 2:19 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search