நடிகர் விஜய், கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம், காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தனி மேடை போட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின், அவருக்கும் ஆளும்கட்சி தலைமைக்கும், சில முரண்பாடுகள் ஏற்பட அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம், மறைமுக அரசியலில் இறங்கினார்.
இதற்கிடையில், தலைவா படம் வெளியாக வேண்டிய தருணம் வந்தது. நடிகர் விஜயும், அவருடைய அப்பாவும், அரசியல் ரீதியாக செய்த மறைமுக கலாட்டாக்களால் கோபமடைந்திருந்த ஆட்சி தலைமை, படம் வெளியாவதற்கு சில தடைகளை மறைமுகமாக ஏற்படுத்தியது.
இதனால் நொந்து போன நடிகர் விஜய், வெறுத்துப்போய் ஊட்டிக்குச் சென்று தங்கிவிட்டார். மிக நீண்ட போராட்டத்துக்குப் பின், படம் ஒருவழியாக வெளியானது.
இருந்தாலும், தலைவா படம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தது.
தற்போது, அவர் நடித்துக் கொண்டிருக்கும், ஜில்லா படம் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவர் மீண்டும் அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
தன், விஜய் இரசிகர் மக்கள் நல நற்பணி மன்றத்தை மீண்டும் வேகப்படுத்தி, அரசியல் களத்தில் பரபரப்பாக செயல்பட வைப்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்கியிருக்கிறாராம்.
ஜில்லா படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்திருக்கிறது. அப்போது தனக்கு மிகவும் நம்பகமான சில மாவட்டத் தலைவர்களை அழைத்து, தன்னுடைய எண்ணஙகளையும், கருத்துக்களையும், அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து, விஜய் இரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, "தலைவா படம், கேரளாவில் ஓரளவுக்கு வெற்றியடைந்தது. ஆனால், தமிழகத்தில் படம், படு தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்று நடிகர் விஜய் கேட்டார். அதற்கு மாவட்டச் செயலர்கள் பலரும், பல விதமான கருத்துக்களைக் கூறினர்.
ஒரு சிலர், உருப்படியாகவும் நல்லவிதமாகவும் சில கருத்துக்களைக் கூறினர்.
அவர்கள் கூறியதாவது:
உங்களுக்கு, மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது. உங்கள் பலத்தை நீங்களே உணருவதில்லை. அப்படித்தான், தலைவா படம் வெளியீட்டுக்கு அரசு தரப்பில் மறைமுகமாக தடை ஏற்பட்டதும், நீங்கள் அரசுக்கு சரண்டர் ஆகி விட்டீர்கள்.
முதல்வரை கெஞ்சி, வாழ்த்தி அறிக்கை கொடுத்தீர்கள். இதை உங்களுடைய இரசிகர்களும், மக்களும் இரசிக்கவில்லை. படம் வெளியாக வேண்டும் என்பதற்காக, உங்கள் இமேஜை குறைத்துக் கொண்டது தவறு. நீங்கள் தைரியமாக அரசியல் செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், நடிகர் விஜய் பேசியதாகக் கூறப்படுவதாவது,
வரும் லோக்சபா தேர்தலிலேயே, நாம் யார் என்பதை, சிலருக்கு உணர்த்தியாக வேண்டும். அதனால் இப்போதிலிருந்தே, நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தலுக்குத் தயாராகுங்கள்.
கட்டாயம், 2016, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தனிக்கட்சியை ஆரம்பித்து விடலாம். அதற்கு தேவையான எல்லா விஷயங்களையும், தொடர்ச்சியாக நானும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.
Friday, October 18, 2013
Search
Popular Posts
-
களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”.இதில் நாயகனாக வர்ஷனும், கதாந...
-
சமீபத்தில் வெளிவந்த 'என்றென்றும் புன்னகை' படமானது மிகவும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டமானது...
-
ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரியில் கலாமந்திர் என்ற ஜவுளிக்கடையை திறக்க நேற்று அனுஷ்கா மற்றும் ப்ரணீதா ஆகிய இரண்டு நடிகைகளும் வந்ததால் பெரும்...
-
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா வலுவான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே ஆட்டம் ம...
-
இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணிக்கு டெஸ்ட் ...
-
பூமியில் வாழும் விலங்குகளில் மிகவும் புத்திசாலியான விலங்கு யானை ஆகும். சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்த போதிலும் யானையைப் போன்று துணிச்சலான...
-
The Baatara Gorge Waterfall (or the Baatara Pothole Waterfall) is located in the village of Balaa, between the cities of Laqlouq and Tannour...
-
உலகம் முழுவதும் உள்ள இளைய மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயிரக்கணக் கான வீர, வீராங்கனைகளது ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வருடமாக 2014 அமையவுள்ளது. இ...
-
சரத்குமார் நடிக்கும் நறுமுகை என்ற திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அவருடன் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா என்ற நியூபேஸ்களும் நடி...
-
துப்பாக்கி படத்தை மும்பையில் படமாக்கிய முருகதாஸ் அடுத்த படத்துக்கு லொகேஷனை மாற்றிவிட்டார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முரு...
Powered by Blogger.
Blog Archive
-
▼
2013
(313)
-
▼
October
(31)
- ஆரம்பம் படத்தின் தோல்வியால் அஜித் ரசிகர் தற்கொலை?
- டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்- கவாஸ்கர...
- கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி
- Land of the Giant Mushrooms - Albania's Cold War B...
- திரைப் பார்வை - "6 Candle "
- “ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே!” - ...
- இலங்கை வரும் அணியில் மேக்கல்லம், டெய்லர் இல்லை
- நான் அதிஷ்டசாலி ஆசீர்வதிக்கப்பட்டவன்: நெகிழும் தனுஷ்
- உதட்டு முத்தம் G.V.P க்கு மனைவி தடை உத்தரவு
- சனத் ஜெயசூரியவிடம் இருந்து 2 ஆவது மனைவியும் விவாகர...
- பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா முழுமையான ஆதி...
- இந்திய, அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
- பின்னணிப் பாடகரான மன்னா டே இன்று காலமானார்.
- இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் செப்பல்
- மெட்ராஸ் கஃபே' ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது- கமல்
- இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க...
- தோனி புதிய சாதனை
- விஜயின் அடங்காத அரசியல் ஆசை: தனிக்கட்சி அமைக்க முட...
- விருதை ஏற்க கமல் தயக்கம்
- ஆரம்பம் சிக்கல்: தடை கோரி வழக்கு
- சூர்யாவின் அதிரடி முடிவு...
- மணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை
- ''நையாண்டி'' படத்தை தடை செய்யக் கோருகிறார் நடிகை ந...
- தமிழ் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்
- சச்சினும், டிராவிட்டும் விடை பெற்றனர்!
- கமலின் பேய் படத்தை எடுப்பது யார்? – கமல் பதில்!
- சொதப்பிய சென்னை..........!
- ராஜா - ராணி ------- குடும்பத்தோடு ஒரு பார்வை
- றகர் அணிக்கு நாமல் தலைவராக தெரிவு
- மகாஜனாக் கல்லூரி வீராங்கனைக்கு தங்கப்பதக்கம்
- கன்சிகா தெரிவில் கடுப்பான திரிசா.....!
-
▼
October
(31)
Advertising

Social Icons
Featured Posts
*
0 comments:
Post a Comment