சமீபகாலமாக தமிழில் தயாராகும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கேரளா, ஆந்திராவிலும் வெளியாகி வருகின்றன. இதில் சில படங்கள் வசூலித்து வருவதால், மற்ற மொழி நேரடி படங்களில் நடிக்கும் ஆர்வமும் இங்குள்ள நடிகர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த பட்டியலில், விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், விஷால் ஆகிய நடிகர்கள் உள்ளனர்
இவர்களில் தனுஷ், ராஞ்சனா இந்தி படத்தில் நேரடியாக நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது சூர்யா தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம். சூர்யா நடித்து தெலுங்கில் டப்பாகும் படங்கள் பெரிய அளவில் வசூலிப்பதால் அடுத்தகட்டமாக அவரை நேரடியாக தெலுங்கில் இறக்கி விட தயாராகி வருகிறார்களாம்.
தற்போது லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதையடுத்து வெங்கட்பிரபு படத்தில் நடிக்கிறார். அப்படத்தையடுத்து பிரபல தெலுங்குப்பட இயக்குனர் பூரி ஜகன்நாத் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறாராம். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா அப்படத்தை தயாரிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment