• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Showing posts with label டோனி. Show all posts
Showing posts with label டோனி. Show all posts

Wednesday, December 18, 2013

20120825045535PR_Mahendra_Singh_Dhoni

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் சவாலானது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் கடந்த காலங்களில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியது கிடையாது.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி விளையாடிய 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. தற்போது அனுபவம் இல்லாத வீரர்களை கொண்ட இந்திய அணி தென்ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்கொள்ள இருக்கிறது.


இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது


ஒருநாள் தொடருக்கு முன்பு நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் ஒருநாள் தொடரில் சரியாக விளையாடவில்லை. இதில் இருந்து வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.டெஸ்ட் தொடருக்காக வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


ஜாகீர்கானின் அனுபவம் முக்கிய பங்களிக்காக இருக்கும் எனது நம்புகிறேன். அஸ்வினும் அதற்கு இணையான நிலையில் உள்ளார். இந்த தொடரில் பந்துவீச்சு சிறப்பாக அமைவதே மிகவும் முக்கியம் நேர்த்தியுடன், ஸ்டம்பை நோக்கி வீசுவதுதான் முக்கியமானதாகும்.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். ஒருநாள் போட்டியில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு டெஸ்ட் தொடரில் ஆடுவார்கள்.

Saturday, December 7, 2013

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் வென்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்க முன்னிலையில் உள்ளது.


dhoni


நாளை நடக்கும் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நெருக்கடியுடன் இந்தியா களம் இறங்குகிறது. இதனிடையே தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவால் போட்டிகள் தள்ளிவைக்கப்படாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Wednesday, December 4, 2013

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் ஜோதிடர் அணியின் தலைவர் டோனிக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி வந்துள்ளார். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் சில மூடப் பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் மாமியார், மருமகள் சம்பந்தப்பட்ட தொலைக்காட்ட்சித் தொடர் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இலங்கை பந்து வீச்சாளர் மலிங்கா ஒரு போட்டியில் பந்தை குறைந்தது 50 முறையாவது முத்தமிடுவார். இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் ஜோதிடர் வெங்கடேசன் கார்த்திகேயன் தலைவர் டோனிக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.


IN22_DHONI_1185838fசென்னை அணி வீரர்களின் உடைமாற்றும் அறையில் குறிப்பிட்ட சுவர்களில் குறிப்பிட்ட சில தெய்வங்களின் புகைப்படங்களை மாட்டி வைக்க ஜோதிடர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியவாறே செய்துள்ளார்களாம்.சென்னை அணி விளையாடும் போது அணி நிர்வாகத்தினர் நீல நிற டி-சர்ட் அணிய வேண்டும், எதிர் அணியினருக்கு சிவப்பு நிற துண்டுகள் கொடுக்க வேண்டும் என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் சூதில் சிக்கி கைதான குருநாத் மெய்யப்பனை சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளை நேரிலோ அல்லது தொலைகாட்சியிலோ, கணினியிலோ பார்க்கவே கூடாது என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார். மெய்யப்பனும் அவ்வாறே நடந்துள்ளார். அவர் பார்க்காத 2 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. 2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சென்னை அணி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் இருந்து காலிறுதி போட்டி நடக்கும் மும்பைக்கு செல்வதற்கு பதில் சென்னை வந்துள்ளது. காரணம் அன்றைய தினம் மும்பைக்கு செல்ல நல்ல தினம் இல்லையாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் டோனி தான் ஜோதிடரின் அறிவுரையை நாடினாராம்.

Monday, December 2, 2013

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் நிச்சயம் தொடரை வெல்ல முடியும்’ என்று இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறினார். இந்திய மட்டைபந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மட்டைப்பந்து அணி தென்னாப்ரிக்காவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் இந்த மாதம் முழுவதும் விளையாட உள்ளது.

இந்திய அணிக்கு அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய இளம் வேகப் பந்துவீச்சாளர்களும் உள்ளதால், இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சமீபத்தில் ஓய்வுபெற்ற சச்சின் இடத்தை டோனியால் நிரப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்.விராத் கோஹ்லி மீது அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளார். மட்டைப்பந்து விளையாட்டில் சூதாட்டத்தை மட்டும் பார்க்க கூடாது. நல்லது கேட்டது என்று இரண்டும் மட்டைப்பந்தில் இருக்கிறது. பாரத ரத்னா விருதுக்கு சச்சின் மிகவும் பொருத்தமானவர். இவ்வாறு கங்குலி கூறினார்.

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search