• Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Monday, January 6, 2014



வீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. அதே மாதிரி எத்தனை படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை. அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இந்த வரிசையில் இப்போது அவர் எடுக்கப்போகும் படத்தின் பெயர் அதிரடி.


ரோட்டில் வித்தை காட்டி பிழைக்கும் ஒருவனுக்கு வரும் காதலும், அவனது வாழ்க்கையும்தான் கதையாம். இன்று (ஜனவரி 5) காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிகள்.

கதை, திரைக்கதை வசனம், இயக்கம், இசை, ஹீரோ எல்லாமே அவர்தான். ஒளிப்பதிவை மட்டும் க.முத்துகுமார் கவனிக்கிறார். சென்னை மற்றும் கூவம் ஆற்று கரையில் ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
இன்று கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

Att your end

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்: இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும். அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும்.

ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன. அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும். கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன. நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.

ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம். நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.

உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா? அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும். பல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.

ஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்.

சி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்

கிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.

கம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம்.

மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.


ygvucf

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், மற்றும் விஜய்க்கு பல வருடங்களாக உதவியாளராக இருப்பவர் பி.டி.செல்வகுமார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னை வந்து பின்பு எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின் அவரது உதவியாளராக மாறியவர் பி.டி.செல்வகுமார். கடந்த ஆண்டு ஒன்பதுல குரு என்ற படத்தை டைரக்ட் செய்து இயக்குனராகவும் ஆனார்.


இப்போது தனது உதவியாளர் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது ரிலீசாக இருக்கும் ஜில்லாவுக்கு பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது முருகதாசின் சொந்தப் படம். அதற்கு பிறகு பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் அவர் நடிக்கலாம் என்கிறார்கள். பி.டி.செல்வகுமார் தன் நண்பர்கள் சிலருடன் இணைந்து விஜய் படத்தை தயாரிக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் தகவலை ஜீவா தெரிவித்தார்.

இதுகுறித்து பி.டி.செல்வகுமார் கூறும்போது "அது தொடர்பான பேச்சு நடந்துகிட்டிருக்கு. முறையான, அதிகாரபூர்வமான அறிவிப்பை விஜய்யே வெளியிடுவார்" என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தன் வாழ்நாளில் தனக்கு உதவியவர்களுக்காக பாண்டியன், அருணாச்சலம் படங்களில் நடித்துக் கொடுத்ததைப்போல விஜய் தனக்கு உதவியவர்களுக்காக ஒரு படம் நடித்து கொடுக்க இருப்பதாகவும், அதில் அவரை வைத்து படம் எடுத்து இப்போது நலிந்த நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரை தயாரிப்பாளராக்கும் திட்டம் இருக்கிறது என்றும், அதில் உதவியாளர் பி.டி.செல்வகுமாரும் ஒருவர் என்றும் இன்னொரு தகவல் கசிந்திருக்கிறது.
Posted by V4Tamil .com on 2:33 AM in    No comments »
ஆசஷ் டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய அணி 117 புள்ளிகளை பெற்று 2–வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.

ICClogo(21)

தென்ஆப்பிரிக்கா 133 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் அசைக்க முடியாத நிலையில் உள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் தொடரை 5–0 என்ற கணக்கில் வென்றதால் ஆஸ்திரேலியா 5–வது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 3–வது இடத்தை பிடித்துள்ளது.

ஆசஷ் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியா 101 புள்ளிகளை பெற்று இருந்தது. தற்போது 111 புள்ளிகளை பெற்றுள்ளது.5 டெஸ்டிலும் தோற்றதால் இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு பின்தங்கியது. பாகிஸ்தான் (102 புள்ளிகள்) 5–வது இடத்திலும், இலங்கை 6–வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 7–வது இடத்திலும், நியூசிலாந்து 8–வது இடத்திலும், ஜிம்பாப்வே 9–வது இடத்திலும், வங்காளதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்திய அணி அடுத்து நியூசிலாந்துடன் 2 டெஸ்டிலும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்டிலும் விளையாடுகிறது. பிப்ரவரி மாதம் இந்த தொடர் நடக்கிறது. இங்கிலாந்து அணி அடுத்து இலங்கையுடன் ஜூன் மாதம் டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகச் சின்ன ஏரியா. மல்டி ப்ளக்ஸில் பெரும்பாலும் இந்தி, தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் படங்களே ஆக்ரமிக்கின்றன. எனவே சிங்கிள் ஸ்கிரீனில், குறிப்பாக பி, சி சென்டர்களை மட்டுமே நம்பி கன்னடப் படங்கள் தயாராகின்றன. எனவே இருக்கும் பட்ஜெட்டில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நவீனமாக படம் எடுக்க இப்போது கன்னட திரையுலகம் கற்றிருக்கிறது.

Bollywood-news-896கடந்த சில ஆண்டுகளாக நடைபோட்டு வரும் இந்தப் பாதையில்தான் இந்த வருடமும் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறப் போகிறது.

பிள்ளையார் சுழி, வழக்கம்போல் சுதீப். ஸ்டைல், மேக்கிங், ஆக்ஷன், மசாலா, நடிப்பு என தனது பிராண்டை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 2014ல் நம்ம கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அதையே தொடரவும் போகிறார். ஏற்கனவே கிச்சா சுதீப்புக்கு அங்கு எவரெஸ்ட் உயர மார்க்கெட் உண்டு. இப்போது கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு செவ்வாய் கிரகம் வரை சென்றிருக்கிறது.

இதற்கு ஈடு கொடுக்க புனித் ராஜ்குமாரும் தயாராகிவிட்டார். ராஜ்குமார் குடும்பத்து கடைசி வாரிசான இவர், தன் குடும்ப பாரம்பரியம் கொண்ட படங்களில் நடித்தபடியே பரிசோதனை முயற்சிகளிலும் இறங்கக் கூடியவர். ரசிகர்களை திருப்திப்படுத்தும் அதே நேரம், தனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நடிகனுக்கும் தீனி போடும் வித்தை அறிந்தவர். அதனாலேயே தெலுங்கு தூகுடு ரீமேக் ஆன ராஜ்குமார் மற்றும் ரானா விக்ரமா ஆகிய இரு படங்களுக்காகவும் மாநிலமே வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.

இந்தப் போட்டியில் ஷிவ்ராஜ்குமாரும் தன் பங்குக்கு ஆர்யன், மனமோஹகா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். கடந்த வருட இறுதியில் வெளியான இவரது பஜரங்கி வசூலில் இன்றும் பின்னிபெடல் எடுத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

என் வழி தனி வழி என்று அதகளம் செய்யும் உபேந்திரா, ஓம் 2, பிரம்மா, பாசுவனா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். துனியா விஜய் கோப்ராவாக சீறப் போகிறார். கோல்டன் ஸ்டார் கணேஷ் ஷ்ரவானி சுப்ரமண்யா, தில் ரங்கீலா என வசீகரிக்கப் போகிறார். அரிவட்டா, அஸ்போட்டா என தர்ஷன் குதிக்கப் போகிறார்.

மொத்தத்தில் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக சுதீப் தலைமையில் இளம் நடிகர்கள் களம் இறங்கப் போகிறார்கள். இதற்கு மாற்றாக குடும்ப நடிகர்கள் தொடை தட்டப் போகிறார்கள். 2000க்கு பிறகு ஆண்டுதோறும் என்ன நடக்கிறதோ அதுவேதான் 2014லும் தொடரப் போகிறது. ப்ரியா மணி சலித்துவிட்ட நிலையில் தமிழ் - தெலுங்கில் விஆர்எஸ் வாங்கும் நிலையில் இருக்கும் நடிகைகளை கன்னட திரையுலகுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கப் போகிறார்கள்.

இதிலெல்லாம் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆனால், அதையும் மீறி தங்கள் திரையுலகை காப்பாற்றவும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் அனைவருமே முயலப் போகிறார்கள் பாருங்கள்...அது முக்கியம். அதுதான் கன்னட திரையுலகைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசவும் காரணம். பலவீனங்களைத் தாண்டி பலம் பெற முயல்பவர்களை வாழ்த்துவதுதானே மரபு.


வீரம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா படத்தில் அஜீத்தின் சண்டை காட்சிகள் பற்றி அளித்த பேட்டி:"நான் இதுவரை பணியாற்றிய படங்களிலேயே பெஸ்ட் வீரம் தான். பல ரிஸ்கான சண்டைக் காட்சிகள் இருக்கிறது. அதில் நடிக்க அஜீத் சார் போன்ற சாயல் கொண்ட டூப் நடிகரை ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். அஜீத் சார் டூப் இல்லாமல்தான் நடிப்பார் என்பது தெரியும். ஆனால் அவருக்கு ஆரம்பம் படத்தில் விபத்து ஏற்பட்டு காலில் பிரச்சினை இருப்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருந்தேன்.

இதை கேள்விப்பட்டு என்னை அழைத்த அஜீத் சார், "எல்லா காட்சியிலும் நான்தான் நடிப்பேன். எனது பாலிசியை மாற்றிக்கிறதா இல்லை. சம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? அந்த ரிஸ்கை நானே எடுக்கிறேன். அதுக்குதான் எனக்கு சம்பளம் தர்றாங்க" என்று சொல்லிவிட்டு அவரேதான் நடித்தார்.

ரிஸ்கான காட்சிகளில் அவர் நடிக்கும்போது தைரியமாக நடித்தார். நாங்கள்தான் பயந்து நடுங்கினோம். ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும்போது கடவுளிடம் அவருக்கு எதுவும் நேரக்கூடாது என்று வேண்டிக்குவேன். முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்வேன். இதை கவனிக்கும் அஜீத் சார் என்னை பார்த்து சிரித்துவிட்டுச் செல்வார். வீரம் படத்தில் ரசிகர்கள் பார்க்கப்போவது அஜீத் சாரின் நிஜமான வீரத்தை" என்கிறார் சில்வா.
தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனி பெய்து வருகிறது. இரவு முழுவதும் இடைவிடாது பெய்யும் பனியினால் ஏற்படும் மூட்டம் காலை 10 மணி வரையிலும் விலகாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேர்ந்துள்ளது.



ரெயில் பாதைகளிலும் தொலை தூரத்தில் உள்ள காட்சிகளை தெளிவாக காண இயலவில்லை. இதே போல், டெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம் படர்ந்திருப்பதால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 7 மணியில் இருந்தே பனி கொட்டத் தொடங்கியதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100 மீட்டர் தூரத்தை கடந்து காட்சிகளை தெளிவாக காண முடியவில்லை.

விமானங்கள் பாதுகாப்பாக தரை இறங்க ஓடுபாதையில் 75 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகள் தெளிவாக தெரிய வேண்டும். தரையில் இருந்து உயர எழுவதற்கு 125 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகள் தெளிவாக தெரிய வேண்டும்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களும் இங்கு தரை இறங்க வேண்டிய விமானங்களும் மூடுபனியால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து, நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 8 மணி வரை சுமார் 90 விமான சேவைகளை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ரத்து செய்துள்ளது.  இங்கு தரையிறங்க வேண்டிய 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் லக்னோ, அமிர்தசரஸ் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேர்ந்தது.

இரத்து செய்யப்பட்ட விமானங்களில் செல்வதற்காக செலுத்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெறுவதற்காக ஏராளமானவர்கள் விமான நிலைய வரவேற்பு பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
Posted by V4Tamil .com on 2:21 AM in    No comments »

உலக இரு­ப­துக்கு 20 மகளிர் கிரிக்கட் போட்­டிகள் இவ் வருடம் மார்ச் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்னும் சில தினங்­களில் இந்­தி­யா­வுக்கு புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது.


sasikala


அங்கு மூன்று மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­க­ளிலும் மூன்று மகளிர் சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளிலும் இந்­தி­யாவை இலங்கை எதிர்த்­தா­ட­வுள்­ளது.ஜன­வரி 19, 21, 23 ஆகிய திக­தி­களில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­களும் ஜன­வரி 25, 26, 28ஆம் திக­தி­களில் சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களும் நடை­பெ­ற­வுள்­ளன.


இலங்கை மகளிர் அணியின் தலை­வி­யாக ஷஷி­கலா சிறி­வர்­தன தொடர்ந்தும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.சக­ல­துறை வீராங்­க­னை­யான இவர் 73 மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் போட்­டி­களில் 69 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தாடி 1381 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றுள்­ள­துடன் பந்­து­வீச்சில் 89 விக்­கட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார். 30 சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் 27 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தா­டி­யுள்ள ஷஷி­கலா 369 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். பந்­து­வீச்சில் 32 விக்­கட்­களை வீழ்த்­தி­யுள்ளார்.


மகளிர் சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் இலங்கை சார்­பாக சதம் குவித்த ஒரே ஒரு வீராங்­க­னை­யான சமரி அத்­தப்­பத்து அணியின் உதவித் தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.இவர் 26 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் 782 ஓட்­டங்­க­ளையும் 26 சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் 24 தட­வைகள் துடுப்­பெ­டுத்­தாடி 266 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுள்ளார்.


இதே­வேளை சிரேஷ்ட வீராங்­க­னை­க­ளான சந்­த­மாலி தோல­வத்­தவும் சமனி சென­வி­ரட்­னவும் இலங்கை அணி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக சில தினங்­க­ளுக்கு முன்னர் தமக்கு அறி­வித்­த­தாக இலங்கை கிரிக்கட் நிறு­வனம் தெரி­வித்­தது.பயிற்சிப் போட்­டிக்கு 2013 டிசம்பர் 30ஆம் திகதி வருகை தரு­மாறு அழைக்­கப்­பட்ட சந்­த­மாலி அதனை மறுத்­து­விட்டு அணி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­த­தா­கவும் இலங்கை கிரிக்கட் நிறு­வன ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.


இதே­வேளை சர்­வ­தேச ஒருநாள் குழாமில் இணைக்­கப்­பட்­டி­ருந்த சமனி சென­வி­ரட்­னவும் தானாக வில­கிக்­கொண்­ட­தாக ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.


ஷஷி­கலா, சமரி அத்­தப்­பத்து ஆகி­யோ­ருடன் பின்­வ­ருவோர் இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.ஏஷானி லொக்­கு­சூ­ரிய, தீபிகா ரசங்­கிக்கா, டிலானி மனோ­தரா, சமரி பொல்­கம்­பொல, யசோதா மெண்டிஸ், அனூஷ்கா சஞ்­சீ­வனி, மாதுரி சமு­திக்கா, சந்­திமா குண­ரட்ன, உதே­ஷிக்கா ப்ரபோ­தினி, ஸ்ரீபாலி வீரக்கொடி, லசன்தி மதுஷானி, ஓஷாதீ ரணசிங்க ஆகியோர் குழாமில் இடம்பெறும் ஏனைய வீராங்கனைகளாவர்.


இவர்களை விட நிலக்ஷி சில்வா, இனோக்கா ரணவீர, சத்துராணி குணவர்தன, ரங்கிக்கா பெர்னாண்டோ ஆகிய நால்வரும் தயார் நிலை வீராங்கனைகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள இளைய மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயிரக்கணக் கான வீர, வீராங்கனைகளது ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வருடமாக 2014 அமையவுள்ளது.இவ் வருடம் பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் இவ்வுலகை ஆர்ப்பரிக்க வைக்கவுள்ளன.fifa-world-cup-2014-0a


உலக அரங்கில் இடம்பெறும் விளையாட்டுகளில் தத்தமக்கு பிடித்த விளையாட்டை மக்கள் ரசிப்பதற்கு ஏது வான வகையில் 2014இல் பல்வேறு தனி விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் பல்வகை விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் நடை பெறவுள்ளன.


யூசெய்ன் போல்ட், லயனல் மெசி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, குமார் சங்கக்கார, விராத் கோஹ்லி, கோரி அண்டர்சன், ஷேன் வொட்சன், செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரப்போவா, செபெஸ்டியன் வெட்டெல் போன்ற இன் னும் பல வீர, வீராங்கனைகளின் ஆற்றல் ெவளிப்பாடுகளைக் கண்டு இவ்வுலகம் ஆனந்த பிரவாகத்தில் மூழ்கவுள்ளது.


இவ் வருடம் நடைபெறவுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முழு உலகையும் பரபரப்பில் ஆழ்த்தக்கூடிய சர்வ தேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (ஃபீஃபா) உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகள் றியோ டி ஜெனெய்ரோவில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளன.இப்போட்டிகளை ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிறேஸில் முன்னின்று நடத்துகின்றது.



முதலாவது உலக சம்பியன் உட்பட இரண்டு தடவைகள் உலக சம்பியனான உருகுவே, நான்கு தடவைகள் உலக சம்பியனான இத்தாலி, மூன்று தடவைகள் சம்பயினான ஜேர்மனி, இரண்டு தடவைகள் சம்பியனான ஆர்ஜன்டினா, தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த 736 வீரர்களின் கால்பந்தாட்ட நுட்பத் திறன்களையும் ஆற்றல்களையும் இவ் வருட உலகக் கிண்ண போட் டிகளில் ரசிகர்களுக்கு காணக் கூடியதாக இருக்கும்.Sochi_2014_Winter_Olympics_Games_Logo


இதனைவிட 20 வயதின்கீழ் மகளிர் மற்றும் 17 வயதின் கீழ் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.


உலக இருபதுக்கு 20 கிரிக்கட்


ICC Twenty20 2014 logo


ஆண், பெண் இரு பாலாருக்குமான சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐசிசி) உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. எனினும் பங்களாதேஷில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அந்­நாட்டு நிலை­மைகள் குறித்து சர்­வ­தே­ச கிரிக்கட் பேரவை கண்­கா­ணித்து வரு­கின்­றது. ஆண்களுக்கான போட்டிகளில் 16 நாடுகளைச் செர்ந்த 240 வீரர்களினதும் பெண்களுக்கான போட்டிகளில் 10 நாடு களைச் சேர்ந்த 140 வீராங்கனைகளதும் கிரிக்கட் ஆற்றல்களைக் காணக்கூடியதாக இருக்கும்.


உலக இருபதுக்கு 20 போட்டிகளுக்கு முன்பதாக ஐந்து நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.


குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்


குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவின் சொச்சி பிராந்தியத்தில் பெப்ரவரி 7 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.


15 வகையான விளையாட்டுகளில் 98 வகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


இப்போட்டிகளில் 85 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


பொதுநலவாய மற்றும் ஆசிய


விளையாட்டு விழாக்கள்


இலங்கை உட்பட 70 நாடுகள் பங்குபற்றும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தனிநபர் மற்றும் குழுநிலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வுள்ளன. 17 வகையான விளை யாட்டுகளில் 250க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ் வருட பொதுநலவாய விளையாட்டு விழா வில் 6,000க்கும் மேற்பட்ட வீர, வீராங் கனைகள் பங்குபற்றவுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து மற்றொரு பல்வகை விளையாட்டுப் போட் டிகளை அரங்கேற்றும் ஆசிய விளையாட்டு விழா, தென் கொரியாவின் இன்சொன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 வீர, வீராங்கனைகள் 40 க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் 450க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடுவர்.


இளையோர் ஒலிம்பிக் விழா


இலங்கை பங்குபற்றவுள்ள மற்றொரு விளையாட்டு விழா இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவாகும். இரண்டாவது தடவையாக நடைபெறும் இவ் விளையாட்டு விழா சீனாவின் நாஞ்சிங் நகரில் ஆகஸ்ட் 16 முதல் 28வரை நடைபெறவுள்ளன. சர்வதேச அரங்கில் எதிர்கால வீளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் களமாக இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா அமைகின்றது.


ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகள்


இலங்கை நம்பிக்கையுடன் பங்குபற்றும் மேலும் ஒரு சர்வதேச போட்டியாக ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன. இவ் வருடம் மீண்டும் ஆசிய சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும் பொருட்டு இலங்கை வலைபந்தாட்டக் குழாம் புதிய பயிற்றுநரின்கீழ் தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.


இதர விளையாட்டுப் போட்டிகள்


மகளிர் உலகக் கிண்ண றக்பி, உலக உடற்கலை சாகச (ஜிம்னாஸ்டிக்ஸ்) வல்லவர் போட்டிகள், உலக சுவட்டு சைக்கிளோட்ட வல்லவர் போட்டிகள், வழமையான நான்கு க்ராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபோர்ம்யூலா வன் க்ரோன் ப்றீ காரோட்டப் போட்டி என்பனவும் இவ்வருடம் விளையாட்டுலகை அலங் கரிக்கவுள்ளன.

தெல்­லிப்­பழை அள­வெட்டிப் பகு­தியில் அண் ­மையில் ஆடொன்று ஈன்ற ஆட்டுக்­குட்டி வித்­தி­யா­ச­மான முக அமைப்­புடன் காணப்­ப­டு­கின்­றது.


x

இரண்டு கண்­களும் அரு­க­ருகே ஒன்­றாக அமைந்­துள்ள நிலையில் பிறந்­துள்ள இவ் ஆட்­டுக்­குட்­டியை பார்­வை­யிட பெருந்­தொ­கை­யான மக்கள் வந்த வண்­ண­முள்­ளனர். புதிய முகத்­தோற்­றத்­தினை உடைய இந்த ஆட்­டுக்­குட்­டி­யினைப் பட த் தில் காணலாம்.

தனுசுடன் நடித்த வேங்கை படத்திற்கு பின்னர், தமன்னா நடித்த எந்த படங்களும் வெளியாகவில்லை. எனினும், இரண்டு வருடங்களுக்கு பின்னர் அஜித்துடன் தமன்னா நடித்த வீரம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

Tamanna

இந்தநிலையில், ஏற்கனவே தமக்கு பட வாய்ப்புக்களை வழங்கிய இயக்குனர்களிடம் பட வாய்ப்புக்களை கோரியுள்ளார். தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னாவின் நிலையை பார்த்து ஏனைய நடிகைகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதிகம் வேதனம் வாங்குகின்ற பொப்பிசை பாடகர்களில், மெடோனா மீண்டும் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவர் 125 மில்லியன் டொலர்களை வேதனமாக பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

madonna

போர்ப்ஸ் சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக லேடி காகாவே அதிக வேதனத்தை பெறும் பாடகராக இருந்தார். எனினும் மடோனா கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடத்திய இசை நிகழ்ச்சியின் பின்னர், அவருக்கு இந்த அதிக வேதனம் வழங்கப்படுகிறது. லேடிகாக 80 மில்லியன் டொலர்களை வேதனமாக வாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, January 5, 2014

72b1eae0-169e-4dae-a3b0-c00e5e4a978f_S_secvpf
ஆந்திராவை சேர்ந்த முன்னணி தெலுங்கு நடிகரான உதய் கிரண் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புஞ்சகட்டாவின் ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிபோட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.அவரது அறையில் தூக்கில் தொங்கியதை பார்த்த அவரது மனைவி விஷிதா மற்றும் அருகிலுள்ள வீட்டினர் அவரை மீட்டு ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

1980 ஆம் வருடம் ஜனவரி 26ந் தேதி பிறந்த கிரண் அவரது நீண்ட நாள் நண்பரான விஷிதாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை தனியாக இருந்த உதய் எதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார் என இதுவரை தெரியவில்லை. தனிப்பட்ட பயணமாக மணிகொண்டா நகருக்கு சென்ற விஷிதா நேற்றிரவு பலமுறை உதய்யின் செல்போனை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்து அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து பார்ததபோது அவர் தூக்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.

அவர் தெலுங்கில் சித்திரம், நுவ்வு நீனு, மனசந்தா நுவ்வெ மற்றும் ஸ்ரீராம் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். சசிகுமார் இப்போதைக்கு பிரம்மன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் உதவி இயக்குனர் சாக்ரட்டீஸ் இயக்கி வருகிறார்.

15659_thumb_665

இதன் பிறகு பாலா இயக்கும் படத்தில் கரகாட்டக்காரராக நடிக்கிறாராம் சசிகுமார். மதுரை பக்கத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கரகாட்ட குழு ஒன்றின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தப் படத்தில் நடித்து முடித்தவுடன் 2015ல் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை சசிகுமார் இயக்கப் போகிறாராம். இது அவர் இயக்கும் மூன்றாவது படம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இந்த வருடம் நடிப்பில் கவனம் செலுத்தி அடுத்த ஆண்டில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருப்பதாக சசிகுமார் வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின்றன.
மறு­பக்­கத்தில் உரை­யா­டலில் ஈடு­பட்­டுள்­ள­வரின் முப்­ப­ரி­மாணத் தோற்­றத்தை காட்­சிப்­ப­டுத்தி, அவ­ருடன் நேருக்கு நேர் சந்­தித்து உரை­யா­டு­வது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலை­பே­சியை எதிர்­வரும் வருட இறு­திக்குள் அறி­மு­கப்­ப­டுத்த போலந்து கம்­ப­னி­யொன்று நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளது.

article-2533850-1A5DEB7900000578-948_634x440

1977ஆம் ஆண்டு வெளி­யாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்­ப­டத்தின் கதாநாய­கியை குறிக்கும் வகையில் மேற்­படி கம்­ப­னிக்கு யெலிஸா டிஸ்­பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.


article-2533850-1A6BBD2100000578-211_634x568




இந்த நிறு­வ­ன­மா­னது முப்­ப­ரி­மாண விம்ப உப­கரணங்­களை வெற்­றி­க­ர­மாக ஸ்தாபித்­த­தை­ய­டுத்து, அந்த தொழில்­நுட்­பத்தை உள்­ள­டக்­கிய மாதிரி தொலைபேசியை எதிர்­வரும் வரு­டத்­துக்குள் அறி­மு­கப்­ப­டுத்தவுள்­ளது.இந்தக் தொலை­பேசி எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாவனைக்கு விடப்படவுள்ளது.
Posted by V4Tamil .com on 11:05 PM in ,    No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search